TASMAC : டாஸ்மாக் ஊழலை கண்டித்து பாஜக போராட்டம்: வீட்டு சிறை.. கைது.. பரபரப்பாக காட்சிகள்!
- திமுக அரசின் ரூ.1,000 கோடி டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து, தமிழக பாஜக சார்பில், இன்று சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். பலர், களத்திற்கு வரும் வழியில் கைதாகினர்.
- திமுக அரசின் ரூ.1,000 கோடி டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து, தமிழக பாஜக சார்பில், இன்று சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். பலர், களத்திற்கு வரும் வழியில் கைதாகினர்.
(1 / 8)
வீட்டுக்காவலில் வைத்து பாஜக நிர்வாகியிடம் வீடியோ பதிவு வாங்கும் போலீசாரின் சிசிடிவி காட்சி. பாஜக தலைவர் அண்ணாமலை இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்
(2 / 8)
டாஸ்மாக் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க வந்த முன்னாள் ஆளுநரும், முன்னாள் பாஜக தலைவருமான தமிழிசை செளந்தர்ராஜன், கைது செய்யப்பட்டு, மண்டபத்தில் வைக்கப்பட்டார்.
(3 / 8)
டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக போராட்டத்தில் பங்கேற்க முயன்ற, பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வானதி சீனிவாசன் மற்றும் சரஸ்வதி ஆகியோர் கைது செய்யப்பட்டு போலீஸ் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர்
(4 / 8)
வீட்டு காவலில் வைக்கப்பட்ட பாஜக நிர்வாகியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள போலீசார். இதோ பல இடங்களில் முக்கிய நிர்வாகிகள் வீட்டு சிறை வைக்கப்பட்டனர்.
(5 / 8)
சென்னையில் பாஜக முக்கிய நிர்வாகியான, வினோஜ் பி செல்வத்தை கைது செய்த போலீசார், அவரை பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.
(6 / 8)
கருப்பு சட்டை அணிந்து டாஸ்மாக் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க முயன்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டு, மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.
(7 / 8)
பாஜக மாநில துணைத்தலைவர் எம் சக்கரவர்த்தியை சென்னை டி கே மன்றம் ரவுண்டானா அருகில் கைது செய்த போலீசார், அவரை வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.
மற்ற கேலரிக்கள்