Sashtanga Dosham : திருமணம் பொருத்தம் பார்க்கும் போது இத கவனிங்க..சஷ்டாங்க தோஷம் இருந்தால் பிரச்சனை மேல் பிரச்சனை வரும்!
பத்து விதமான திருமண பொருத்தத்தில் ராசி பொருத்தமும் ஒன்று. அந்த ராசி பொருத்தத்தில் ஆண் பெண் ராசிகள் ஒன்றுக்கு ஒன்று ஆறு எட்டாக வந்தால் அதை சஷ்டாங்க தோஷம் என்று சொல்வதுண்டு.
(1 / 7)
ராசி மனசுனு சொல்லுவாங்க, உடம்புன்னு சொல்லுவாங்க மனது என்றால் சிந்தனை, லக்கனமும் அப்படித்தான் அதுவும் சிந்தனையை தனி மனித குணாதிசயங்களை சொல்லும். இருந்தாலும் திருமணம் என்று வரும்போது நாம் ராசி லக்னம் இரண்டையும் பார்த்து தான் பொருத்தம் பார்க்கிறோம். ராசியை வைத்து 10 பொருத்தம் பார்த்தால் லக்னத்தை வைத்து புத்திரப்பேறு, விக்ரக அமைப்பு இப்படி நிறைய பார்க்கிறோம்.
(2 / 7)
ஆண், பெண் ராசிகள் ஒன்றுக்கு ஒன்று ஆறு எட்டாக இடத்தில் வந்தால் அது சஷ்டாங்க தோஷம். உதாரணத்திற்கு கன்னி ராசிக்கு மேஷம் எட்டாவது ராசியாக வரும். மேஷத்திலிருந்து எண்ணிப் பார்த்தால் கன்னி ஆறாவது ராசியாக வரும். இப்படி ஒரு ராசியிலிருந்து ஒரு ராசி ஆறாக அல்லது 8 ஆக வந்தால் அது சஷ்டாங்க தோஷம்.
(3 / 7)
இந்த தோஷம் வந்தால் தம்பதியர் இடையே ஒற்றுமை இருக்காதாம். சந்தேகம் இருக்குமாம் அதேபோல ரகசியங்கள் அதிகமாக இருக்குமாம். ஆறுக்கு ஒழிக்க தெரியாது எட்டுக்கு வெளிப்படை தன்மை இருக்காது.
(4 / 7)
ஆறு என்றால் ரணரோக சத்ரு என்று சொல்வார்கள். இது ராசி என்றாலும் லக்னம் என்றாலும் ஆறு என்றாலே ரணரோக சத்ரு தான். ரணம் என்றால் காயம் ரோகம் என்றால் நோய் சத்ரு என்றால் எதிரி. காயத்தையோ நோயையோ எதிரியையும் நம்மால் மறைக்க முடியாது. எப்படியாவது அது வெளிப்பட்டே தீரும். (Pixabay)
(5 / 7)
அதுபோல தான் ஆறாம் இடம் பகை என்பதால் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு, வார்த்தை மோதல்கள் அவ்வபோது வெளிபட்டு விடும். வெளிப்படுவது என்றால் கணவன் மனைவி ஒற்றுமை குறையும் என்று அர்த்தம். இது ஒருவர் பிறந்த ராசிக்கு ஆறாவது ராசியாக இருந்தால் இந்த பலன்கள் பொருந்தும்.
(6 / 7)
அதுவே ஒருவர் பிறந்த ராசியில் இருந்து எட்டாவது ராசியாக இருந்தால் வெளிப்படையாக சொல்லாத ரகசியங்கள் நிறைய இருக்கும். வெளிப்படையாக சொல்லாமல் பகிர்ந்து கொள்ளாமல் நிறைய விஷயங்களை தானாகவே முடிவெடுத்து செய்வார்கள் இதனால் கணவன் மனைவியிடையே அதிக பிரச்சனைகள் என வாய்ப்பு இருக்கிறது.
மற்ற கேலரிக்கள்