Vivekananda: ‘உன்னிடத்தில் நீயே நம்பிக்கை வை’ - இளைஞர்களை நல்வழிப்படுத்தும் விவேகானந்தரின் பொன்மொழிகள்
- ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12ஆம் தேதி விவேகானந்தரின் பிறந்த நாளை தேசிய இளைஞர் தினமாக கொண்டாடுகிறோம். இன்றைய இளைஞர்கள் பல்வேறு காரணங்களால் மனச்சோர்வில் சிக்கித் தவிக்கின்றனர். அவர்கள் விவேகானந்தரின் பொன்மொழிகளைக்கேட்டால் நிச்சயம் ஊக்கம் பெறுவர். அத்தகைய விவேகானந்தரின் பொன்மொழிகளைப் பார்ப்போம்.
- ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12ஆம் தேதி விவேகானந்தரின் பிறந்த நாளை தேசிய இளைஞர் தினமாக கொண்டாடுகிறோம். இன்றைய இளைஞர்கள் பல்வேறு காரணங்களால் மனச்சோர்வில் சிக்கித் தவிக்கின்றனர். அவர்கள் விவேகானந்தரின் பொன்மொழிகளைக்கேட்டால் நிச்சயம் ஊக்கம் பெறுவர். அத்தகைய விவேகானந்தரின் பொன்மொழிகளைப் பார்ப்போம்.
(1 / 6)
நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்
உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய் - விவேகானந்தர்
(2 / 6)
உலகில் எழும் தீமைகளைப் பற்றியே வருந்துகிறோம். நம் உள்ளத்தில் எழும் நச்சு எண்ணங்களைப் பற்றி சிறிதும் கவலை கொள்வதில்லை. உள்ளத்தை சீர்படுத்தினால் இந்த உலகமே சீர் ஆகிவிடும். - விவேகானந்தர்
(3 / 6)
“நான் எதையும் சாதிக்க வல்லவன்” என உறுதியுடன் சொல்வதுதான் வெற்றிக்கான முதல் படி. அளவுகடந்த ஆற்றலை வெளிப்படுத்த போதுமான அளவிற்கு உண்மையாக நீ முயற்சி செய்யாதபோது தான் தோல்வி அடைகிறாய். ஒரு மனிதனோ, ஒரு நாடோ தன்னம்பிக்கை இழந்த உடன் அழிகிறது.
(4 / 6)
உன்னிடத்தில் நீயே நம்பிக்கை வை. எல்லா ஆற்றல்களும் உன்னுள்ளேயே உள்ளன. அதை அறிந்து அந்த ஆற்றலை வெளிப்படுத்து - விவேகானந்தர்
(5 / 6)
வாழ்வில் வென்ற ஒவ்வொருவரும் பின்னணியில் ஏதோ ஓரிடத்தில் அளவில்லாத நேர்மையும், அளவற்ற முயற்சியும் கொண்டவராக இருந்திருப்பர். அந்த குணங்கள் தான் அவரது சிறந்த வெற்றிக்குக் காரணம் ஆகும். - விவேகானந்தர்
மற்ற கேலரிக்கள்