நடுங்கிய கைகள்! தழு தழுத்த குரல்! என்ன தான் ஆச்சு விஷாலுக்கு! மதகஜராஜா திரைப்பட விழாவில் பரபரப்பு! விளக்கமளித்த படக்குழு
இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் 13 ஆண்டுகளுக்கு முன் உருவான மதகஜராஜா படத்தின் வெளியீட்டை முன்னிட்டு நேற்று ப்ரீ ரீலிஸ் நடந்தது. இதில் பேசிய விஷால் கை நடுக்கத்துடனும், படபடப்பாகவும் பேசியது தற்போது பேசு பொருளாகியுள்ளது.
(1 / 5)
நடிகர் விஷால், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி மற்றும் சந்தானம் உட்பட பலர் நடித்துள்ள மதகஜராஜா திரைப்படத்தின் பீரி ரீலிஸ் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பேசிய விஷால் கை நடுக்கத்துடன், பதட்டமாகவும் காணப்பட்டார். பின் படக்குழுவினர் அவரை ஒரு சேரில் உட்கார வைத்து அமைதி படுத்தினர். இது குறித்தான வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
(2 / 5)
இந்த நிகழ்ச்சியை திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கினார். இதில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியும் கலந்து கொண்டார். மேலும் 13 ஆண்டுகளுக்கு பின்னர் வெளியிடப்படும் படம் என்பதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.
(3 / 5)
இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் சுந்தர். சி, விஷால் மற்றும் விஜய் ஆண்டனி ஆகிய மூவரும் பேசி இருந்தனர். மேலும் இவர்களிடையே திவ்யதர்ஷினி கேள்வியும் கேட்டார். 13 வருடங்கள் கழித்து வெளியாகியும் இன்னும் அதே வரவேற்ப்பு கிடைததது படக்குழுவினரை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
(4 / 5)
இது குறித்து மேடையில் பேசிய சுந்தர் சி படம் குறித்தான அறிவிப்பு முன் இந்த அளவிற்கு ஆதரவு கிடைக்கும் என எதிறப்பார்க்க வில்லை. இந்த படம் எனது பேவரைட் படங்களில் ஒன்றாகும். இந்த படத்திற்கு பின் தான் விஷாலுடன் இணைந்து ஆம்பள மற்றும் ஆக்சன் என இரு ப்டங்களை கொடுத்துள்ளார்.
(5 / 5)
இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அஞ்சலி மற்றும் வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்து உள்ளனர். சுந்தர் சியின் வழக்கமான கதைக் களமாக இருக்க வாய்ப்புள்ளது. மேலும் இப்படத்தின் நிகழ்ச்சியின் போது விஷாலிற்கு ஜூரம் வந்து இருந்ததாகவும் அதனால் தான் அவர் அப்படி நடுங்கியபடி பேசினார் எனவும் கூறப்பட்டுள்ளது.
மற்ற கேலரிக்கள்