‘பாலா சார் மட்டும் அந்த வாய்ப்ப கொடுக்கலன்னா.. அவர் சொல்லிக்கொடுத்த பாடம் இப்ப வரைக்கும்’ - வேதிகா ஓப்பன் டாக்!
இங்க நாம பெட்டரான இடத்துக்கு போறதுக்கான வாய்ப்பு எப்போதுமே இருக்கு.. இவ்வளவு வருஷம் நான் இந்த திரைத்துறையில இருந்திருக்கேன். எனக்கு பெரும்பாலும், நடிப்பை வெளிப்படுத்துற கதாபாத்திரங்கள்தான் கிடைச்சிருக்கு. எல்லா மொழியிலும் நான் நடிச்சிட்டு இருக்கேன். - வேதிகா பேட்டி!
(1 / 7)
சினிமாவில் வாய்ப்புக்கிடைப்பது அரிதினும் அரிது என்றால், அந்த வாய்ப்பை தக்க வைத்து நம்முடைய கெரியரை அடுத்தடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வது அதை விட கடினம்.அதுவும் பெண்களுக்கு கடினத்திலும் கடினம். அப்படிப்பட்ட துறையில், 10 வருடங்களுக்கு மேலாக தாக்குப்பிடித்து நின்று கொண்டிருக்கிறார் நடிகை வேதிகா. தமிழில் ‘முனி’ படத்தில் அறிமுகமான இவர், தொடர்ந்து சாந்தனுவின் ‘சக்கரக்கட்டி’, சிம்புவுடன் ‘காளை’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். பாலா இயக்கத்தில் வெளியான ‘பரதேசி’ படத்தில் இவர் வெளிப்படுத்திய நடிப்பு அனைவரையும் புருவம் விரிய வைத்தது என்றால், அதற்கடுத்தபடியாக வெளியான காவியத்தலைவன் படத்தில் வேதிகா வெளிப்படுத்திய நடிப்பு அனைவரையும் வியக்க வைத்தது. அதன் பின்னர் காஞ்சனா 3 - ல் நடித்தவர் தற்போது தெலுங்கில் வெளியான ஃபியர் படத்தில் நடித்திருக்கிறார். இந்தப்படம் ஓரளவிற்கு பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், அவருடன் உரையாடினேன்.
(2 / 7)
இங்க நாம பெட்டரான இடத்துக்கு போறதுக்கான வாய்ப்பு எப்போதுமே இருக்கு.. இவ்வளவு வருஷம் நான் இந்த திரைத்துறையில இருந்திருக்கேன். எனக்கு பெரும்பாலும், நடிப்பை வெளிப்படுத்துற கதாபாத்திரங்கள்தான் கிடைச்சிருக்கு. எல்லா மொழியிலும் நான் நடிச்சிட்டு இருக்கேன்.உண்மைய சொல்லணும்னா நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். இந்த இடத்துல, நான் நிறைய விஷயங்கள பத்தி குறை சொல்லலாம். ஆனா, நம்மக்கிட்ட என்ன இருக்கு.. நாம எவ்வளவு லக்கியா இருக்கோம். ஆடியன்ஸ் எவ்வளவு அன்பு கொடுத்து இருக்காங்க.. அதையெல்லாம் மறக்கக்கூடாது. நம்ம சக்சஸ் என்ன அப்படிங்கிறத நாமதான் முடிவு பண்ணனும்.
(3 / 7)
என்னோட பொருத்தவர சக்சஸ் அப்படிங்கிறது, எனக்கு கிடைச்ச கதாபாத்திரத்த நான் ஒழுங்கா பண்ணேனா அப்படிங்கிறதுதான். அதுதான் எனக்கு முக்கியம்.ஒரு நடிகையா நாம அதுல கவனம் செலுத்துனா, விமர்சனங்கள் நல்லா வரும். ஆடியன்ஸ்கிட்ட இருந்து லவ் கிடைக்கும். என்னோட ஃபோக்கஸ் முழுக்க என்னோட வொர்க் மேலதான் இருக்கு. உங்கள நீங்க, ஃபெர்பாமன்ஸ்ல நிரூபிச்சிட்டீங்கன்னா, உங்கள நீங்க நிரூபிக்கிறதுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்துகிட்டே இருக்கும்.
(4 / 7)
இந்த இடத்துல நான் பாலா சாருக்கு நன்றி சொல்லணும். காரணம், எனக்கு அவர் பரதேசி படம் கொடுத்தார். அந்தப்படத்துக்கு அப்புறம்தான் காவியத்தலைவன் படம் பண்ணேன்.
(5 / 7)
காஞ்சானால காமெடி ரோல் பண்ணேன். வேற மொழிகள்லையும் நடிக்க வாய்ப்பு கிடைச்சிச்சு. தெலுங்குலையும் என்னோட நடிப்ப வெளிப்படுத்துற மாதிரியான ரோல்ஸ் வந்துகிட்டு இருக்கு. பாலா சார் 25 வருடங்கள சினிமா துறையில நிறைவு செஞ்சிருக்கார்.
(6 / 7)
ரொம்ப சந்தோஷமா இருக்கு.நீங்க ஒரு நடிகரா இருந்தீங்கன்னா உங்களோட மிகப்பெரிய பலமா ஆக்டிங்கா இருக்கணும். படம் ஹிட் ஆகலாம் அல்லது ஃப்ளாப் ஆகலாம்.
மற்ற கேலரிக்கள்