'சொல்ல முடியாத சோகம்' - ஏர் இந்தியா விமான விபத்து நடந்த இடத்தில் பிரதமர் மோடி!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  'சொல்ல முடியாத சோகம்' - ஏர் இந்தியா விமான விபத்து நடந்த இடத்தில் பிரதமர் மோடி!

'சொல்ல முடியாத சோகம்' - ஏர் இந்தியா விமான விபத்து நடந்த இடத்தில் பிரதமர் மோடி!

Published Jun 13, 2025 11:16 AM IST Pandeeswari Gurusamy
Published Jun 13, 2025 11:16 AM IST

அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 260ஐ தாண்டியுள்ளது. 25 பேர் காயமடைந்தனர். இதற்கிடையில், வெள்ளிக்கிழமை காலை அகமதாபாத் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, சம்பவம் நடந்த இடத்தையும், காயமடைந்தவர்கள் இருக்கும் மருத்துவமனையையும் பார்வையிட்டார்.

வெள்ளிக்கிழமை காலை அகமதாபாத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

(1 / 5)

வெள்ளிக்கிழமை காலை அகமதாபாத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

(PMO)

ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே நபரான விஸ்வாஸை பிரதமர் மோடி சந்தித்தார்.

(2 / 5)

ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே நபரான விஸ்வாஸை பிரதமர் மோடி சந்தித்தார்.

(PMO)

'இது விவரிக்க முடியாத ஒரு சோகம். எதிர்பாராத விதமாக இவ்வளவு உயிர்கள் பறிபோனது மனவேதனை அளிக்கிறது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் வலியை எங்களால் புரிந்து கொள்ள முடியும். உங்கள் வாழ்வில் ஏற்பட்ட இழப்பை எங்களால் புரிந்து கொள்ள முடியும்' என்று பிரதமர் மோடி கூறினார்.

(3 / 5)

'இது விவரிக்க முடியாத ஒரு சோகம். எதிர்பாராத விதமாக இவ்வளவு உயிர்கள் பறிபோனது மனவேதனை அளிக்கிறது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் வலியை எங்களால் புரிந்து கொள்ள முடியும். உங்கள் வாழ்வில் ஏற்பட்ட இழப்பை எங்களால் புரிந்து கொள்ள முடியும்' என்று பிரதமர் மோடி கூறினார்.

(PMO)

மருத்துவமனையில் காயமடைந்தவர்களை சந்தித்ததோடு மட்டுமல்லாமல், அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகே ஏர் இந்தியா விமான விபத்து நடந்த இடத்தையும் மோடி பார்வையிட்டு அதிகாரிகளிடம் விவரங்களை விசாரித்தார்.

(4 / 5)

மருத்துவமனையில் காயமடைந்தவர்களை சந்தித்ததோடு மட்டுமல்லாமல், அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகே ஏர் இந்தியா விமான விபத்து நடந்த இடத்தையும் மோடி பார்வையிட்டு அதிகாரிகளிடம் விவரங்களை விசாரித்தார்.

விபத்து நடந்த இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார்.

(5 / 5)

விபத்து நடந்த இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார்.

பாண்டீஸ்வரி குருசாமி, சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். அச்சு ஊடகம் மற்றும் டிஜிட்டல் ஊடகம் என 15 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். தமிழகம், தேசம், லைப்ஸ்டைல், வெப்ஸ்டோரி, கேலரி உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில் எம்.ஏ. ஜர்னலிசம் படித்துள்ள இவர், தீக்கதிர் நாளிதழ் மற்றும் டிஜிட்டலில் பணிபுரிந்ததை தொடர்ந்து 2023 ஜனவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

மற்ற கேலரிக்கள்