Lord Guru: கதறியவர்களுக்கு ஆறுதல்.. ரோகிணியில் ஏறிய குரு.. சுத்துபோட்டு ஜெயிக்கும் ராசிகள்
Lord Guru: இத்தனை நாட்களாக கதறியவர்களுக்கு ஆறுதல் கிடைக்கப்போகிறது. ரோகிணியில் ஏறிய குரு பகவானால் சுத்துபோட்டு ஜெயிக்கும் ராசிகள் குறித்துக் காண்போம்.

Guru Bhagavan: ஜோதிடம் என்பது பிறந்த நேரம் மற்றும் 12 கிரகங்களின் நகர்வினை வைத்து ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் நன்மை, தீமைகளைக் கணிக்கும் பண்டைய கால முறையாகும்.
குரு பகவான், ஒரு ராசியில் 12 மாதங்கள் பயணிப்பார். அதேநேரம் சில நட்சத்திரங்களை மாற்றி டிராவல் செய்வார். தவிர, குரு பகவான், உதய நிலை, அஸ்தமன நிலை, நட்சத்திரப் பெயர்ச்சி ஆகியவற்றிலும் ஈடுபடக் கூடியவர்.
கடந்த மே 1ஆம் தேதி, குரு பகவான், ரிஷப ராசிக்குப் பெயர்ச்சி ஆகியுள்ளார். செல்வந்தர் ஆகும் நிலை, கவுரவம், கல்யாண வாழ்வு, பகுத்தறிதல் ஆகியவற்றுக்கு குரு பகவான் காரணகர்த்தாவாக இருக்கிறார். குரு பகவான், ஜூன் 13ஆம் தேதி, ரோகிணி நட்சத்திரத்துக்குப் பெயர்ச்சி ஆகியுள்ளார். சந்திரன் அதிபதியாக இருக்கும் ரோகிணி நட்சத்திரத்தினால், சில ராசியினருக்கு கூடுதலான பண வரவு கிட்டும். அப்படி, வாழ்க்கையில் ரோகிணி நட்சத்திரப் பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தைப் பெறப்போகும் ராசிகள் குறித்துக் காண்போம்.