டூர் போகலாமா? தமிழ்நாட்டில் டூர் போக சிறந்த இடம் இது தான்! குறிச்சு வச்சுக்கோங்க!
- பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களில் தொடர் விடுமுறை வரப்போகிறது. டிசம்பர் இறுதியிலும், ஜனவரி மாத நடுப்படுதியிலும் சில விடுமுறைகள் வரப்போகிறது. அதற்கு எங்காவது செல்ல வேண்டுமா? பிளான் போட்டாச்சா? இதோ உங்களை எலிமையாக்க திட்டம் போட உதவும் விவரங்கள்!
- பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களில் தொடர் விடுமுறை வரப்போகிறது. டிசம்பர் இறுதியிலும், ஜனவரி மாத நடுப்படுதியிலும் சில விடுமுறைகள் வரப்போகிறது. அதற்கு எங்காவது செல்ல வேண்டுமா? பிளான் போட்டாச்சா? இதோ உங்களை எலிமையாக்க திட்டம் போட உதவும் விவரங்கள்!
(1 / 7)
நமது வீடுகளில் எங்காவது சுற்றுலா செல்ல வேண்டும் என்றாலே வேற்று மாநிலங்களோ அல்லது வேற்று நாடுகளோ தேர்ந்தெடுப்பது வழக்கமாகிவிட்டது. ஆனால் வேறு மாநிலங்களில் உள்ளதை விட மிகவும் அதிகமான ரசிக்கத் தகுந்த இடங்களும் தமிழ்நாட்டில் உள்ளன. அந்த வகையில் தமிழ்நாட்டில் சுற்றுலா செல்ல தகுதியான இடங்களை தேர்ந்தெடுத்து இந்த தொகுப்பு உங்களுக்காக வழங்குகிறது.(pixabay)
(2 / 7)
கன்னியாகுமரி பல்வேறு வழிகளில் சிறப்பு வாய்ந்த இடமாகும். இது இந்தியாவின் பெருநிலப்பரப்பின் தென்கோடி முனையாகும். மூன்று முக்கிய நீர்நிலைகள் - அரபிக் கடல், வங்காள விரிகுடா மற்றும் இந்தியப் பெருங்கடல் - கன்னியாகுமரியில் இங்கே சங்கமிக்கிறது. இத்தகைய புவியியல் ரீதியாக ஆசீர்வதிக்கப்பட்ட இடம் அரிதானது மற்றும் இந்த அம்சங்கள் கன்னியாகுமரியை இந்தியாவில் ஆண்டுதோறும் அதிகம் பார்வையிடும் இடங்களில் ஒன்றாக ஆக்குகின்றன. (Tamilnadu Tourism )
(3 / 7)
கன்னியாகுமரி என்றாலே அனைவரது நினைவிற்கு வருவது கடலுக்கு நடுவில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையே. தமிழின் தமிழ் மொழியின் அற்புதத்தை விளக்கும் திருக்குறளின் பெருமைக்காகவே இந்த திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை 2000 ஆண்டு அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதியால் ஜனவரி மாதம் மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. திருக்குறள் தமிழ் இலக்கியத்தின் தலைசிறந்த படைப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. சிலை மற்றும் பீடத்தின் உயரம் 133 அடி ஆகும். அதாவது 41 மீட்டர். இது திருக்குறளின் 133 அத்தியாயங்களை குறிக்கிறது (Tamilnadu Tourism )
(4 / 7)
கன்னியாகுமரியில் அமைந்துள்ள மாத்தூர் தொங்கு பாலம் நீங்கள் நிச்சயமாக பார்க்க வேண்டிய ஒரு சிறந்த இடமாகும். நீர்ப்பாசன நோக்கங்களுக்காக கட்டப்பட்ட இந்த மாத்தூர் தொங்கு பாலம் ஆசியாவிலேயே மிக உயரமான மற்றும் நீளமான தொட்டி பாலம் ஆகும். இது 115 அடி உயரமும் ஒரு கிலோ மீட்டர் நீளமும் கொண்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மகேந்திர கிரியில் இது உற்பத்தியாகிறது.(Tamilnadu Tourism )
(5 / 7)
கன்னியாகுமரியின் அனைத்து பரபரப்பான சுற்றுலாப் பகுதிகளிலிருந்தும் வெகு தொலைவில் கடற்கரையில் அமைந்துள்ள காந்தி நினைவுச்சின்னம் அமைதியான அமைப்பில் கடலின் சரியான பின்னணியை வழங்குகிறது. 1948 இல் அவர் இறந்ததைத் தொடர்ந்து, காந்தியின் அஸ்தி 12 வெவ்வேறு கலசங்களில் வைக்கப்பட்டு, இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அதில் ஒரு கலசம் கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டு, அந்த கலசம் வைக்கப்பட்ட இடத்தில் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது.(Tamilnadu Tourism )
(6 / 7)
இந்தியாவில் அதிகம் பார்வையிடப்படும் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான விவேகானந்தர் பாறை நினைவகம் கடலில் உள்ள பாறையின் மீது, நிலப்பரப்பில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.19 ஆம் நூற்றாண்டின் தத்துவஞானி மற்றும் எழுத்தாளர், சுவாமி விவேகானந்தர் 1893 இல் சிகாகோவில் நடைபெற்ற உலக மதங்களின் பாராளுமன்றத்தில் இந்தியாவின் ஆன்மீகப் புகழை உலகுக்கு எடுத்துச் சென்றார். பெரிய துறவியின் நினைவாக 1970 இல் நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டது. நினைவுச்சின்னம் உள்ள பாறை விவேகானந்தர் ஞானம் பெற்ற இடத்தில் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது.(Tamilnadu Tourism )
(7 / 7)
கன்னியாகுமரியின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றான இந்த மெழுக அருங்காட்சியகம் உள்ளது. இது மாயாபுரி அதிசய மெழுகு அருங்காட்சியகம் என்றும் அழைக்கப்படுகிறது. கன்னியாகுமரியில் உள்ள பேவாட்ச் கேளிக்கை பூங்காவிற்குள் அமைந்துள்ள இந்த மெழுகு அருங்காட்சியகம் லண்டனில் உள்ள உலகப் புகழ்பெற்ற மேடம் டுசாட் காட்சிக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. (Tamilnadu Tourism )
மற்ற கேலரிக்கள்