அட்சய திருதியை நாளில் உருவாகும் சிறப்பு யோகங்கள்.. தனலட்சுமி ஆசியுடன் செல்வ செழிப்பு, அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்
- 2025ஆம் ஆண்டு அட்சய திருதியை நாளன்று, கிரகங்களின் நிலையைப் பொறுத்து பல ராஜ யோகங்கள் உருவாகின்றன. இந்த நாளில் உருவாகும் ராஜ யோகங்களால் சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்டசாலிகள் ஆவர்கள் என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது
- 2025ஆம் ஆண்டு அட்சய திருதியை நாளன்று, கிரகங்களின் நிலையைப் பொறுத்து பல ராஜ யோகங்கள் உருவாகின்றன. இந்த நாளில் உருவாகும் ராஜ யோகங்களால் சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்டசாலிகள் ஆவர்கள் என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது
(1 / 6)
ஜோதிடத்தில் அட்சய திருதியை சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த ஆண்டு, ஏப்ரல் 30ஆம் தேதி அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. ஜோதிடத்தின் படி, இந்த நாளில், கஜகேசரி மற்றும் லட்சுமி நாராயண யோகங்களுடன், மாளவிய ராஜ யோகங்களும் உருவாகின்றன
(2 / 6)
ஜோதிடத்தின் படி, அட்சய திருதியை நாளன்று, சனி, புதன், சுக்கிரன் மற்றும் ராகுவின் சஞ்சாரம் மீனத்தில் நிகழ்கிறது. இது சதுர்கிரஹி யோகத்துக்கு வழிவகுக்கிறது. இன்னும் பல யோகங்கள் உருவாகின்றன. அட்சய திருதியை எந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்ல பலன்கள் உள்ளன என்பதை தெரிந்து கொள்ளலாம்
(3 / 6)
அட்சய திருதியை நாள் ரிஷப ராசியினருக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. ரிஷப ராசிக்காரர்கள் கிரகங்களின் நிலையைப் பொறுத்து லட்சுமி மற்றும் குபேரரிடமிருந்து சிறப்பு ஆசிகளைப் பெறுகிறார்கள். இந்த ராசியை சேர்ந்தவர்கள் தாங்கள் தொடரும் ஒவ்வொரு துறையிலும் வெற்றியை அடையும் திறனை கொண்டுள்ளனர். வாழ்க்கையில் நீண்ட காலமாக நீங்கள் பிரச்னைகளை சந்தித்து வந்தால், இந்த காலகட்டத்தில் அவை அனைத்தும் நீங்கும். புதிய வாகனம் அல்லது செல்வம் பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது. முதலீடு செய்ய நினைத்தால், இந்த காலம் உங்களுக்கு மிகவும் நன்மை பயக்கும்
(4 / 6)
அட்சய திருதியை மீன ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்லது. இந்த ராசிக்காரர்களின் வீட்டில் பெரிய ராஜ யோகங்கள் இருக்கும். இவர்கள் தாங்கள் செய்யும் வேலையில் அதிக லாபம் பெற வாய்ப்புள்ளது. நீங்கள் புதிய பொருள் அல்லது வாகனம் வாங்க விரும்பினால், உங்கள் கனவுகள் நனவாக வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக இழுபறியில் இருந்த பணஉங்களிடம் திரும்பி வர வாய்ப்புள்ளது. லட்சுமி தேவியின் அருளால் நீங்கள் பெரிய பொறுப்புகளை ஏற்க வாய்ப்புள்ளது. செல்வ செழிப்பு இருக்கும்
(5 / 6)
அட்சய திருதியை நாள் மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தாக உள்ளது. இந்த ராசிக்காரர்கள் தொழில் செய்தால், அதிலிருந்து நல்ல லாபம் பெற வாய்ப்புள்ளது. இந்த நாளில் உருவாகும் சுப யோகத்தின் காரணமாக, புதிய வேலைக்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நிதி நிலைமை மிகவும் சிறப்பாக இருக்கும். உங்கள் தந்தையுடனான உங்கள் உறவு மிகவும் நன்றாக இருக்கும்
(6 / 6)
குறிப்பு: இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஜோதிடர்கள்/ வாஸ்து நிபுணர்கள்/ பஞ்சாங்கங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கை மற்றும் வேதத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த தகவல்கள் முற்றிலும் உண்மை மற்றும் துல்லியமானவை என்று நாங்கள் கூறவில்லை. அவற்றை முழுமையாக நம்புவதற்கு முன், கண்டிப்பாக சம்பந்தப்பட்ட துறையில் நிபுணரிடம் ஆலோசனை பெறவும்
மற்ற கேலரிக்கள்