கோடையில் கால், பாதங்களில் ஏற்படும் வறட்சி, நீரிழப்பு பாதிப்பு.. பாதுகாப்பு அரணாக திகழும் ஆப்பிள் சீடர் வினிகர்! எப்படி?
- கோடையில் உங்கள் கால்களை கவனித்துக்கொள்வது முக்கியம். எனவே, வாரத்துக்கு மூன்று முதல் நான்கு முறை ஆப்பிள் சீடர் வினிகரில் உங்கள் கால்களை ஊற வைப்பதன் மூலம் கால்களில் வறட்சி தன்மை ஏற்படுவதை தவிர்ப்பதோடு, பல்வேறு நன்மைகளையும் பெறலாம்
- கோடையில் உங்கள் கால்களை கவனித்துக்கொள்வது முக்கியம். எனவே, வாரத்துக்கு மூன்று முதல் நான்கு முறை ஆப்பிள் சீடர் வினிகரில் உங்கள் கால்களை ஊற வைப்பதன் மூலம் கால்களில் வறட்சி தன்மை ஏற்படுவதை தவிர்ப்பதோடு, பல்வேறு நன்மைகளையும் பெறலாம்
(1 / 7)
உங்கள் கால்களில் உள்ள தோல் மிகவும் உணர்திறன் கொண்டது. இது கடினமான வானிலையில் எளிதில் பாதிக்கப்படும். நீரிழப்பு அல்லது ஈரப்பதம் காரணமாக பூஞ்சை தொற்று ஏற்படும் அபாயம் இருக்கலாம். உங்கள் கால்களை நன்றாக பராமரிக்க, ஒவ்வொரு நாளும் ஆப்பிள் சீடர் வினிகரில் உங்கள் கால்களை ஊற வைக்கவும். இதைச் செய்வதன் மூலம், கால் மற்றும் பாதங்களில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளில் இருந்து விடுபடுவீர்கள
(2 / 7)
ஆப்பிள் சீடர் வினிகரில் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. பலருக்கு பாதங்களிலும் வியர்வை பிரச்னை உள்ளது. இதன் காரணமாக, பாக்டீரியா வேகமாக வளர்ந்து, பாதங்கள் துர்நாற்றம் வீச தொடங்குகின்றன. ஆப்பிள் சீடர் வினிகரில் உங்கள் கால்களை ஊறவைப்பது இந்த பிரச்னையிலிருந்து விடுபட உதவுகிறது
(3 / 7)
பலர் தங்கள் கால் விரல்களில் பூஞ்சை தொற்று பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர். இது சருமத்தை வறட்சி அடைய செய்து அதன் உணர்திறனில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆப்பிள் சீடர் வினிகரில் உங்கள் கால்களை ஊறவைப்பது பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்களின் பாதிப்பை தடுக்க உதவுகிறது
(4 / 7)
சூரிய ஒளியின் தாக்கம் காரணமாக சிலருக்கு பாதங்களில் புண்கள், கொப்பளங்கள் ஏற்படுகிறது. இதை சமாளிக்க, ஆப்பிள் சீடர் வினிகரில் உங்கள் கால்களை ஊறவைப்பதன் மூலம் பலன் பெறலாம். அதேபோல் சிலருக்கு பாதங்கள் பழுப்பு நிறமாக மாறக்கூடும். ஆப்பிள் சீடர் வினிகரில் இருக்கும் அமில பண்புகள் இந்த பழுப்பு நிறத்தை நீக்க உதவுகின்றன
(5 / 7)
கோடை காலத்தில் உங்கள் பாதங்களில் உள்ள தோல் பெரும்பாலும் நீரிழப்பு மற்றும் வறண்டதாக மாறும். எனவே, ஒவ்வொரு நாளும் ஆப்பிள் சீடர் வினிகரில் உங்கள் கால்களை ஊறவைப்பதன் மூலம் வறண்ட சருமத்தை ஈரப்பதமாக வைக்க உதவுகிறது
(6 / 7)
ஒரு வாளி தண்ணீரில் ஆப்பிள் சீடர் வினிகருடன் அரை கப் வெதுவெதுப்பான தண்ணீரைச் சேர்த்து, அதில் உங்கள் கால்களை 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். ஒவ்வொரு நாளும் இதைச் செய்வது உங்கள் பாதங்களை மென்மையாக்கும் மற்றும் துர்நாற்றம் நீங்கும். இது தவிர, பூஞ்சை தொற்று பிரச்னையிலிருந்து விடுபடவும்
(7 / 7)
குறிப்பு: இந்த தகவல் பொது அறிவு மற்றும் இணையத்தில் காணப்படும் தகவல்கள், ஆய்வுகள் மற்றும் சுகாதார இதழ்களிலிருந்து சேகரிக்கப்பட்டதை அடிப்படையாகக் கொண்டது. இது மருத்துவம் அல்லது சிகிச்சைக்கு மாற்றாக இல்லை. இந்த தகவல் முற்றிலும் உண்மை என்று இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் கூறவில்லை. விரிவான மற்றும் துல்லியமான தகவலுக்கு தொடர்புடைய நிபுணர்களைத் தொடர்பு கொள்ளவும்.உங்கள் உடல்நலம் குறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகவும்
மற்ற கேலரிக்கள்