Actress Rani: ‘சின்ன வயசுலே அப்பா போயிட்டாரு.. கொடுமை படுத்துறேன்னு அடிக்கவே வந்துட்டாங்க’- நடிகை ராணி!
Actress Rani: எங்கள் வீட்டு பெண்களுக்கு சீக்கிரமாக கல்யாணம் முடிக்க வேண்டும் என்று சொல்லி, கல்யாணம் முடித்து வைத்து விட்டார்கள். - நடிகை ராணி!
(1 / 5)
Actress Rani: ‘சின்ன வயசுலே அப்பா போயிட்டாரு.. கொடுமை படுத்துறேன்னு அடிக்கவே வந்துட்டாங்க’- நடிகை ராணி!
(2 / 5)
பிரபல சீரியல் நடிகையான ராணி தன்னுடைய சீரியல் வாழ்க்கை குறித்து, கலாட்டா சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசி இருக்கிறார்.
பட்டப்படிப்பின் இறுதித்தேர்வை கூட நான் எழுத வில்லை
இது குறித்து அவர் பேசும் போது, “ எங்கள் வீட்டில் முழுக்க, முழுக்க பெண் குழந்தைகள். அப்பா, நாங்கள் சிறுவயதாக இருக்கும் போதே இறந்து விட்டதால், எங்கள் வீட்டு பெண்களுக்கு சீக்கிரமாக கல்யாணம் முடிக்க வேண்டும் என்று சொல்லி, கல்யாணம் முடித்து வைத்து விட்டார்கள்.
எனக்கு, நான் கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் பொழுதே, கல்யாணம் முடித்து வைத்து விட்டார்கள்.
(3 / 5)
என்னுடைய பட்டப்படிப்பின் இறுதி தேர்வை கூட நான் எழுதவில்லை. என்னுடைய மகன் பிறந்த பிறகுதான், நான் சீரியலுக்குள்ளேயே என்ட்ரி ஆனேன். கடவுளின் அருளால் நான் என்ட்ரி ஆனதிலிருந்து இப்போது வரை தொடர்ந்து வேலை பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.
முத்திரை குத்துவது பற்றி கவலைப்பட்டதே கிடையாது
என்னுடைய பெரும்பான்மையான கேரக்டர்கள் அனைத்துமே நெகட்டிவான கேரக்டர்கள்தான். ஆனால், என்ன நமக்கு மட்டும் இப்படி நெகட்டிவான கேரக்டர்களாக வந்து கொண்டிருக்கிறதே.. நம்மை இப்படியே முத்திரை குத்தி விடுவார்களோ என்று நான் ஒரு நாளும் நினைத்ததில்லை.
காரணம் என்னவென்றால், கிளிசரின் போட்டுக் கொண்டு அழுவதெல்லாம் எனக்கு சுத்தமாக பிடிக்காது குறைந்த நாட்கள் ஷூட்டிங் சென்றாலும், அங்கு நான் தான் அந்த கேரக்டரின் வழியாக, ராணி போல தெரியவேண்டும் என்று நினைப்பேன். அதனால் அதை நான் மிகவும் சந்தோஷமாகத்தான் செய்து கொண்டிருக்கிறேன்.
(4 / 5)
அடிக்கவே வந்து விட்டார்கள்
நான் சீரியலில் நடிப்பதை உண்மை நம்பிக் கொண்டு பலர் நிஜ வாழ்க்கையில் என்னிடம், நீ மிகவும் கொடுமைப்படுத்துகிறாய் என்றெல்லாம் சொல்லி இருக்கிறார்கள். கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக, ஒரு சம்பவம் நடந்தது. அப்போது நான் சொர்க்கம் சீரியலில் வில்லியாக நடித்துக் கொண்டிருந்தேன்.
(5 / 5)
அந்த சீரியலில் என்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் கவிதா. அதில் கதாநாயகியாக மௌனிகா மேடம் நடித்து இருந்தார்.
அந்த சீரியலை பொருத்தவரை, மௌனிகா மிகவும் சாஃப்ட்டான கேரக்டர். நான் அவரை போட்டு துன்புறுத்துவது போன்று அந்த சீரியலின் கதை அமைக்கப்பட்டு இருக்கும். ஒரு முறை கோயில் அருகே ஷூட்டிங் செய்து கொண்டிருக்கும் பொழுது, அந்த சீரியலில் நடப்பது உண்மையான நம்பிய சிலர் என்னை அடிக்கவே வந்து விட்டார்கள். நான் அவர்களிடம் இருந்து தப்பிக்க, காருக்குள் சென்று கண்ணாடியை ஏற்றி உள்ளேயே இருந்தேன்” என்று பேசினார்.
மற்ற கேலரிக்கள்