Senthil Balaji Vs ED: நீதிமன்ற காவல் நீட்டிப்பில் அரைசதம் அடித்தார் செந்தில் பாலாஜி! 50ஆவது முறையாக காவல் நீட்டிப்பு!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Senthil Balaji Vs Ed: நீதிமன்ற காவல் நீட்டிப்பில் அரைசதம் அடித்தார் செந்தில் பாலாஜி! 50ஆவது முறையாக காவல் நீட்டிப்பு!

Senthil Balaji Vs ED: நீதிமன்ற காவல் நீட்டிப்பில் அரைசதம் அடித்தார் செந்தில் பாலாஜி! 50ஆவது முறையாக காவல் நீட்டிப்பு!

Published Jul 29, 2024 05:32 PM IST Kathiravan V
Published Jul 29, 2024 05:32 PM IST

  • Senthil Balaji Vs ED: புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நாளை வரை அவரது காவலை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

சட்டவிரோத பணப்பறிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 50 ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டு உள்ளது. 

(1 / 7)

சட்டவிரோத பணப்பறிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 50 ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டு உள்ளது. 

புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நாளை வரை அவரது காவலை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. 

(2 / 7)

புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நாளை வரை அவரது காவலை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. 

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் சட்டவிரோத பணப்பறிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். 

(3 / 7)

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் சட்டவிரோத பணப்பறிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்களை அமலாக்கத்துறை தாக்கல் செய்தது. இதனைத் தொடர்ந்து நீதிமன்றக் காவலில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

(4 / 7)

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்களை அமலாக்கத்துறை தாக்கல் செய்தது. இதனைத் தொடர்ந்து நீதிமன்றக் காவலில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

கைதான சில நாட்களில் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

(5 / 7)

கைதான சில நாட்களில் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

சிறையில் இருந்தபடியே இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்த நிலையில், நீதிமன்றக் காவலில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு வந்தார். அவரது நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகின்றது. 

(6 / 7)

சிறையில் இருந்தபடியே இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்த நிலையில், நீதிமன்றக் காவலில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு வந்தார். அவரது நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகின்றது. 

கடந்த 2014 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணி நியமனத்தில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த 2015 ஆம் ஆண்டு தேவசகாயம் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

(7 / 7)

கடந்த 2014 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணி நியமனத்தில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த 2015 ஆம் ஆண்டு தேவசகாயம் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மற்ற கேலரிக்கள்