துல்லியமாக தாக்கும் திறன்..ஆபரேஷன் சிந்தூரில் பயன்படுத்தப்பட்ட ஸ்கால்ப் ஏவுகணையின் சிறப்பம்சங்கள் என்னென்ன?
ஆபரேஷன் சிந்தூரில் பயன்படுத்தப்பட்ட ஸ்கால்ப் ஏவுகணையின் சிறப்பம்சங்கள் என்னென்ன தெரியுமா?
(1 / 7)
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நள்ளிரவு பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.
9 இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது மற்றும் லஷ்கர் -இ - தொய்பாவின் பல தளங்கள் மற்றும் தலைமையகங்கள் அழிக்கப்பட்டன.
(2 / 7)
ரபேல் போர் விமானங்கள் மூலம் ஸ்கால்ப் ஏவுகணைகள் மற்றும் ஹேமர் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.
இந்த ஸ்கால்ப் ஏவுகணையை Storm Shadow என்றும் அழைக்கின்றனர். அதாவது நீண்ட தூர ஆழமான தாக்குதல்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு வான்வழி ஏவுகணை ஆகும்.
(3 / 7)
இந்த ஏவுகணை இரவில் மட்டுமல்லாது அனைத்து விதமான வானிலையிலும் இயங்கும் திறன் கொண்டது.
கிட்டத்தட்ட 500 கிலோமீட்டர் வரை பாய்ந்து இலக்கை தாக்கும் திறன் கொண்டது கூறப்படுகிறது.
(5 / 7)
450 கிலோ எடையுள்ள வெடிமருந்தை சுமந்து செல்லக்கூடிய இந்த ஏவுகணை, ஜெட் விமானத்தில் இருந்து ஏவப்படும்போது தாழ்வாகப் பறக்கும் என்பதால் இதனை கண்டறிவதும் கடினமாம்.
(6 / 7)
இது INS, GPS மற்றும் நிலப்பரப்பு குறிப்புகளை பயன்படுத்தி இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டவை!
மற்ற கேலரிக்கள்