Sani vakra Luck: வழி விடுகிறார் சனி பகவான்… மூன்றே விதிகளில் சூட்சமம்; கோல்டன் ஜாக்பாட் இந்த ராசிக்குத்தான்!
Sani vakra Luck: சிம்ம ராசிக்காரர்களுக்கு சனி வக்ர பெயர்ச்சி பலன்கள் எப்படி அமைய இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
(1 / 6)
Sani vakra Luck: வழி விடுகிறார் சனி பகவான்… மூன்றே விதிகளில் சூட்சமம்; கோல்டன் ஜாக்பாட் இந்த ராசிக்குத்தான்!
(2 / 6)
சனி வக்ர பெயர்ச்சி பலன்கள்:
சனிபகவான் கடந்த ஜூன் 12 முதல் வருகிற நவம்பர் 4 வரையில் வக்ர கதி அடைந்து, கும்ப ராசியில் சஞ்சரிக்கிறார். அவர் சமசப்தமாக வக்ரகதியில், சிம்ம ராசியை பார்க்கிறார். இப்போது, பெரும்பாலான சிம்ம ராசிக்காரர்களுக்கு வீட்டில் தகராறு நடந்து கொண்டிருக்கிறது. உங்களுக்கு பிடித்தவர்கள் உங்களை வேண்டுமென்றே துன்புறுத்திக் கொண்டிருக்கிறார்கள். இருப்பினும் பிரச்சினையை எதிர்கொண்டு, ஏதோ ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் சிம்ம ராசிக்காரர்கள் வாழ்க்கையை கடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
(3 / 6)
சம சப்தமாக இருக்கக்கூடிய சனிபகவான் தற்போது வக்ரகதியாக மாறுவதன் மூலம், ராஜ யோகம் கிடைப்பது என்பது உறுதியாகும்.
குறிப்பாக அரசியல்வாதிகளுக்கு கோல்டன் ஜாக்பாட் யோகம் கிடைக்கும் என்றே சொல்ல வேண்டும்.
(4 / 6)
காரணம் என்னவென்றால், அவர்கள் இந்த காலகட்டத்தில் மிகப்பெரிய விஸ்வரூபத்தை எடுப்பார்கள்.
விஸ்வரூபம் எடுக்கும் சனி பகவான்
அதேபோல மருத்துவத்துறையில் பணியாற்றுபவர்கள், மிகப்பெரிய சாதனைகளை படைத்து, புகழின் உச்சத்திற்கு செல்வார்கள்.
(5 / 6)
விளையாட்டுத்துறையில் இருக்கக்கூடிய சிம்ம ராசிக்காரர்கள் விளையாட்டில் தேர்ந்து அடுத்த கட்டத்திற்கு செல்வார்கள்.
அதே போல காதலில் நீண்ட காலமாக பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டிருந்த சிம்மராசிக்காரர்கள் பெற்றோரின் சம்மதத்தோடு கல்யாணத்திற்கு தயாராகுவார்கள்.
அரசு இயந்திரத்தில் வேலை செய்பவர்களுக்கு, விரும்பிய இடத்தில் பணி மாற்றங்கள், பதவி உயர்வு உள்ளிட்டவை கிடைக்கும்.
(6 / 6)
இந்த காலகட்டம், உங்களுக்கான கோல்டன் ஜாக்பாட் காலகட்டம் என்றே சொல்லலாம்.
அந்த அளவுக்கு நற்பலன்களை கொடுக்கக்கூடிய இந்த காலக்கட்டத்தை, நீங்கள் ஒழுங்காக பயன்படுத்த மூன்று விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும்.
சிங்கத்தை பொறுத்தவரை, ஒரு தீனி கிடைத்து விட்டால், உடனடியாக அதன் மீது பாயும். ஆனால் வாழ்க்கையில் அப்படி இருக்க முடியாது. நின்று நிதானமாக தான் அதை அணுக வேண்டும். அந்த வகையில் நீங்கள் வேகத்தோடு சேர்த்து விவேகத்தையும் கைகொள்ள வேண்டும். அவ்வளவு எளிதாக யாரையும் நம்பி விடக்கூடாது. அதேபோல பணம் கிடைத்துவிட்டது என்று தண்ணீர் போல செலவழிக்க கூடாது. அதனுடன் சேர்த்து நீங்கள் பொறுமையுடன் ஒவ்வொரு விஷயத்தையும் அணுக வேண்டும் அப்போதுதான் அது கைகூடும்.
நீங்கள் கந்த சஷ்டி கவசம், ஆதித்ய ஹிருதயம் உள்ளிட்ட மந்திரங்களை சொல்ல வேண்டும். திருநள்ளாறு சென்று சனி பகவானே சந்தித்து அபிஷேகம் செய்து வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும்." என்று பேசினார்.
மற்ற கேலரிக்கள்