Trisha Krishnan: விக்ரம் முதல் விஜய் வரை.. கிசுகிசுக்கள் பலவிதம்.. பக்கவான நெகட்டிவ் பப்ளிசிட்டி - த்ரிஷா திரியான கதை!
Trisha Krishnan: வெற்றிகள் மட்டுமல்ல, திரை வாழ்க்கையில் அவர் சந்தித்த அவமானங்களும் அதிகம். ஒரு முறை அவர் பாத்ரூமில் குளிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அது தொடர்பான போட்டோவை வார பத்திரிக்கை ஒன்று வெளியிட்டது. - த்ரிஷா திரியான கதை!
(1 / 5)
Trisha Krishnan: விக்ரம் முதல் விஜய் வரை.. கிசுகிசுக்கள் பலவிதம்.. பக்கவான நெகட்டிவ் பப்ளிசிட்டி - த்ரிஷா திரியான கதை!
(2 / 5)
Vijay on Trisha: விஜய் பிறந்தநாளுக்கு த்ரிஷா அவருடன் இருக்கும் போட்டோவை போட்டதுதான் மிச்சம்.. மொத்தம் சமூகவலைதளங்களும் விஜய்க்கும், த்ரிஷாவுக்குமான தொடர்பு உறுதியானது என்றும் அவரால்தான் விஜய் குடும்பத்தில் பிரச்சினை வெடித்திருக்கிறது என்றும் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில், த்ரிஷா குறித்து பிரபல பத்திரிகையாளர் சபிதா ஜோசப் விசில் சேனலுக்கு பேசி இருந்தார்.
நாவலில் உதித்த பெயர்
அவர் பேசும் போது, “16 வயதிலேயே த்ரிஷா திரைத்துறைக்குள் நுழைந்து விட்டார். அம்மா உமா ஒரு மேக்கப் கலைஞர். அப்பா கிருஷ்ணன். இவர் பெரிய பெரிய ஸ்டார் ஹோட்டல்களில் பணியாற்றியவர். உமாவும், கிருஷ்ணனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு பிறந்தவர்தான் த்ரிஷா.
(3 / 5)
திரிஷாவின் பாட்டி நிறைய நாவல்கள் படிப்பார். அப்படி ரஷ்ய நாவல் ஒன்றை படித்துக்கொண்டிக்கும் போது, அதில் ஒரு கதாபாத்திரம் த்ரிஷா என்ற பெயரில் வந்து இருக்கிறது. அந்த கதாபாத்திரம் எவ்வளவு தோல்விகளை சந்தித்தாலும், மீண்டும் எழும் தன்மை கொண்டதாக இருந்து இருக்கிறது. இதனையடுத்து அந்த கதாபாத்திரத்தின் பெயரையே அவருக்கு வைத்திருக்கிறார்கள். த்ரிஷா ஆரம்பத்தில் மாடலிங் துறையில்தான் கால்பதித்தார்.
சிரிப்புக்கு பேர் போன த்ரிஷா
மாடலிங்கில் பங்கேற்று மிஸ் சேலமாக மாறிய அவருக்கு, அடுத்தக்கட்டமாக, மிகச்சிறந்த சிரிப்பழகிக்கான பரிசு கிடைக்கிறது. அதனை தொடர்ந்து ஆல்பம் ஒன்றில் நடித்தார். அந்த ஆல்பம் வழியாகத்தான் அவருக்கு பிரியதர்ஷன் இயக்கிய ‘ லேசா லேசா’ படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதற்கு முன்னதாக அவர் நடித்த மெளனம் பேசியதே படம் ரிலீஸ் ஆனது. அந்த படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தந்தது. அவருக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்த திரைப்படம் கில்லி.
(4 / 5)
வெற்றிகள் மட்டுமல்ல, திரை வாழ்க்கையில் அவர் சந்தித்த அவமானங்களும் அதிகம். ஒரு முறை அவர் பாத்ரூமில் குளிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அது தொடர்பான போட்டோவை வார பத்திரிக்கை ஒன்று வெளியிட்டது. அதற்காக அந்த பத்திரிகை மீது த்ரிஷா வழக்கும் போட்டார். அவருக்கென்று ஒரு கேங் இருக்கிறது. அந்த கேங்குடன் இணைந்து குடித்து, கும்மாளம் அடித்து பிரச்சினை செய்ததாகவும் செய்திகள் வெளியாகின. அதில் ஒரு சிலவற்றில் உண்மையும் இருக்கிறது. அதை த்ரிஷா பப்ளிசிட்டிக்காகவும் பயன்படுத்திக்கொண்டார்.
(5 / 5)
விக்ரம் முதல் விஜய் வரை
ஆரம்பத்தில் விக்ரமுடன் இணைத்து வைத்து கிசுகிசுக்கப்பட்டார். அவருடன் தொடர்ந்து பல படங்களிலும் நடித்தார். அதன் பின்னர் நடிகர் விஜயுடன் வைத்து கிசுகிசுக்கப்பட்டார். அவருடன் திருப்பாச்சி, குருவி என தொடர்ந்து பல படங்களில் நடித்தார். அதன் பின்னர் அவர்களுக்குள்ளே பிரிவு வந்தது. பொதுவாக ஹீரோக்கள் ஒரே ஹீரோயினுடன் தொடர்ந்து நடிக்கமாட்டார்கள். அந்த வகையில்தான் அந்த கூட்டணி உடைந்தது.
அதனை தொடர்ந்து ராணாவுடன் இணைத்து வைத்து பேசப்பட்டார். இந்த நிலையில், மணியன் என்ற தொழிலதிபர் உடன் அவருக்கு நிச்சயதார்த்தம் ஆனது. ஆனால் சில காரணங்களால் அந்த நிச்சயதார்த்தம் கல்யாணத்தை நோக்கி செல்லவில்லை. விலங்குகள் என்றால் த்ரிஷாவிற்கு கொள்ளை பிரியம். அதே இரவில் தூங்குவதற்கு முன்னதாக, நீச்சல் அடித்து குளித்த பின்னர்தான் தூங்கச்செல்வார்.” என்று பேசினார்.
மற்ற கேலரிக்கள்