RIP Captain Vijayakanth: ‘சிவாஜியால் முடியாதது.. விஜயகாந்தால் முடிந்தது’ வியக்க வைத்த கேப்டன்!
- RIP Captain: மறக்க முடியாதவர், மறைந்துவிட்டார். ‘இவர் கேட்டவர்’ என ஒருவர் கூட விரல் நீட்டி சொல்ல முடியாது. அந்த அளவிற்கு பெருமைகளை சுமந்த விஜயகாந்த், சினிமா, அரசியல் என, இரண்டிலும் முன்னணி நடிகர்கள் பலர் செய்ய முடியாத விசயங்களை செய்திருக்கிறார். அப்படி செய்தார் கேப்டன்?
- RIP Captain: மறக்க முடியாதவர், மறைந்துவிட்டார். ‘இவர் கேட்டவர்’ என ஒருவர் கூட விரல் நீட்டி சொல்ல முடியாது. அந்த அளவிற்கு பெருமைகளை சுமந்த விஜயகாந்த், சினிமா, அரசியல் என, இரண்டிலும் முன்னணி நடிகர்கள் பலர் செய்ய முடியாத விசயங்களை செய்திருக்கிறார். அப்படி செய்தார் கேப்டன்?
(1 / 5)
150க்கும் அதிகமான திரைப்படங்கள், 100வது படமான ‘கேப்டன் பிரபாகரன்’ சூப்பர் டூப்பர் ஹிட். இவர் போல 100வது படத்தை ஹிட் கொடுத்த நடிகர் யாரும் கிடையாது. சுவரில் மிதித்தபடி காலால் எதிரியை பந்தாடும் சண்டை காட்சிக்காகவே தனி ரசிகர் கூட்டம் உண்டு. திரையுலகில் உச்சம் தொடும் நேரத்திலும் கூட, ‘வைதேகி காத்திருந்தாள்’, ‘பூந்தோட்ட காவல்காரன்’ ‘நூறாவது நாள்’, ‘ஊமை விழிகள்’ என கவுரவம் பார்க்காமல் கவுரவ வேடங்களில் நடித்தவர்.
(2 / 5)
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் நட்புக்காக அவரது மகனை (நடிகர் விஜய்) புரமோட் செய்வதற்காகவே ‘செந்தூரப்பாண்டி’ படத்தை நடித்துக் கொடுத்தவர். பல ஆண்டுகள் கடனில் தத்தளித்த தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கடன் சுமை, அவர் தலைவராக இருந்தபோது தான் முற்றிலுமாக அடைக்கப்பட்டது. அவர் தலைவராக இருந்த காலத்தில் திரையுலக தற்கொலை சம்பவங்கள் அதிகரித்தபோது மன நல ஆலோசனை வழங்கும் நிகழ்வுகளும் நடத்தப்பட்டன.
(3 / 5)
எம்ஜிஆர் போலவே ஸ்டன்ட் கலைஞர்கள், துணை நடிகர்களின் நலனில் அக்கறை செலுத்தியவர். வீடு தேடி வருவோருக்கு உணவு தந்து உபசரிப்பதை வழக்கமாக வைத்திருப்பவர். நடிகராக இருந்த போது தன்னிடம் உதவி கேட்டு வரும் தபால்களுக்கு பதில் அனுப்புவதோடு பணமும் அனுப்பி வைக்கும் குணம் அவருக்கு உண்டு. நடிகராக இருந்தபோது அறிவித்தது போலவே தனிக்கட்சி தொடங்கி, அதிலும் சாதனை படைத்தார். சிவாஜி கணேசன், பாக்யராஜ், டி.ராஜேந்தர் போன்ற பிரபலங்கள் கூட தனித்து நின்று வெற்றி பெற முடியாத தமிழகத்தில் தனியாளாக யாருடைய ஆதரவும் இன்றி வெற்றி பெற்றவர்
(4 / 5)
விஜயகாந்த். கட்சி ஆரம்பித்ததுமே 9 சதவீத வாக்கு பெறுவது சாதாரண விஷயம் அல்ல. கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா வெற்றிக்கு முன் 10 முதல் 20 ஆண்டு கால அரசியல் அனுபவம் அவர்களுக்கு இருந்தது. தமிழக அரசியல் குளத்தில், இரண்டு திராவிட கட்சிகளும் தங்களுக்குள் அடித்துக் கொண்டாலும் 3வது ஒரு கட்சி வளருவதை தடுப்பதில் எப்போதுமே இணைந்து நிற்பது வழக்கம். தனி நபராக விஜயகாந்த் வளர முடியுமா..? மாநிலங்களவை எம்பியாக 2வது முறை கனிமொழி தேர்வான நிகழ்வு ஒரு உதாரணம். ஜெயலலிதா நினைத்திருந்தால் கனிமொழியை வெற்றி பெற விடாமல் தடுத்து, தேமுதிகவை நாடாளுமன்றத்தில் அடி எடுத்து வைத்திருக்க செய்திருக்கலாம்.
(5 / 5)
அவரது உடல் மொழி, மேடைப் பேச்சு வைத்து அவமானப்படுத்தியது. 2011 தேர்தலில் வடிவேலு வாயிலாக திமுக துவங்கி வைத்ததை பலரும் தொடர்ந்ததும் அநாகரிகத்தின் உச்சம். விமர்சனம் என்பது அனைவருக்குமே பொதுவானதுதான். ஆனால், அவரைப்போல எதார்த்தமாக பேசிய தலைவர்கள் எத்தனை பேர்? தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக, மூன்று தலைமுறைகளாக கோலோச்சும் இரண்டு பெரிய கட்சிகளுக்கு இடையே துணிச்சலாக ஒரு கட்சியை துவங்கி சாதித்த அவரால், அரசியலில் அரசியல் செய்யத் தெரியாத நபராக இருந்தது அவர் மீதான தவறு அல்ல.!
மற்ற கேலரிக்கள்