Mercury: சனியின் ராசியில் ஏறிய புதன்.. வாழ்வில் மகிழ்ச்சியைப் பெறும் ராசிகள்
- புதன் ஒருவரது ராசியில் இருந்தால் அதிக செல்வ வளத்தைப் பெறுவது உறுதி. அதே இக்காலகட்டத்தில் உறவுகளும் பலப்படும்.
- புதன் ஒருவரது ராசியில் இருந்தால் அதிக செல்வ வளத்தைப் பெறுவது உறுதி. அதே இக்காலகட்டத்தில் உறவுகளும் பலப்படும்.
(1 / 6)
வரும் பிப்ரவரி 20ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 6:07 மணிக்கு புதன் கிரகம், சனியின் ராசியான கும்பத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் சில ராசியினர் நற்பலன்களையும், சில ராசியினர் கெடுபலன்களையும் பெறுவர். அப்படி, மகிழ்ச்சியினைப் பெறும் அதிர்ஷ்டக்கார ராசிகள் குறித்துக் காண்போம்.
(2 / 6)
கும்பம்: கும்பத்தில் புதன் சஞ்சரிக்கத் தொடங்கும்போது வாழ்வில் நல்ல இன்பமயமான மாற்றம் உண்டாகும். வீட்டில் இருந்த கடன் தொல்லைகள் மாறும். தொழிலில் இருந்த சுணக்கம் மறையும். ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய ஏற்றகாலகட்டம் இது.
(3 / 6)
விருச்சிகம்: கும்பத்தில் ஏறிய புதனால் விருச்சிக ராசியினருக்கு பணவரவு உண்டாகும். பிரிந்து இருந்த கணவன் - மனைவி சேர்வார்கள். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து நற்செய்தியைப் பெறுவீர்கள். விதியின் வசத்தால் நீங்கள் செய்த கெட்ட செயல்களுக்கு மருந்துபோடுவீர்கள். அந்த வகையில் விட்டுக்கொடுத்து செயல்பட்டு, வீட்டில் மகிழ்ச்சியை உண்டாக்குவீர்கள்.
(4 / 6)
தனுசு: இந்த ராசியினருக்கு குழப்பமான மனநிலை மாறி தெளிவு கிடைக்கும். தனுசு ராசியினர் மேற்படிப்பு படிக்கும் சூழலைப் பெறுவார்கள். நினைவாற்றல் மேம்படும் என்பதால் அரசு வேலைக்குப் படிக்கத் தொடங்கலாம். இக்காலகட்டத்தில் வாழ்வில் சந்தோஷம் பொங்கும்.
(5 / 6)
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே.
மற்ற கேலரிக்கள்