‘முதல்வர் ஸ்டாலின்- பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு’ நடந்தது என்ன? முதல்வர் விளக்கம்!
- புயல் பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி தன்னிடம் தொலைபேசியில் கேட்டறிந்ததாக, முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
- புயல் பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி தன்னிடம் தொலைபேசியில் கேட்டறிந்ததாக, முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
உங்கள் நகரின் வானிலை அறிய இங்கே கிளிக் செய்க
(1 / 6)
ஃபெஞ்சல் புயல் பாதிப்பு குறித்து பிரதமர் மோடி, தன்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்ததாக, முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் முதல்வர் கூறியுள்ளவற்றை பார்க்கலாம்.
(2 / 6)
முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பதிவு: தமிழ்நாட்டில் ஏற்படுத்தியுள்ள கடுமையான பாதிப்புகள் குறித்து மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள் தொலைபேசி வாயிலாக என்னைத் தொடர்புகொண்டு கேட்டறிந்தார்.(PTI)
(3 / 6)
முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பதிவு: மாநில அரசு பேரிடர் பாதிப்பைத் திறம்பட எதிர்கொண்டு வருவதையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருவதையும் மாண்புமிகு பிரதமரிடம் தெரிவித்தேன்.(PTI)
(4 / 6)
முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பதிவு: தமிழ்நாட்டு மக்களைக் கடும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ள இந்தப் புயலின் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்கி - புயல் சேதங்கள் குறித்த விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ள ஒன்றியக் குழுவை அனுப்பிட வேண்டும் என்ற எனது கடிதத்தைக் குறிப்பிட்டு, இது குறித்து மீண்டும் வலியுறுத்தினேன்(PTI)
(5 / 6)
முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பதிவு: தமிழ்நாட்டின் இந்தக் கோரிக்கையை மாண்புமிகு பிரதமர் அவர்கள் உடனடியாகப் பரிசீலித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று உறுதிபட நம்புகிறேன்(PTI)
மற்ற கேலரிக்கள்