Mamitha Baiju: கடுமையான திட்டு.. முதுகில் அடி.. உண்மையில் பாலா செய்தது என்ன? - மமீதா விளக்கம்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Mamitha Baiju: கடுமையான திட்டு.. முதுகில் அடி.. உண்மையில் பாலா செய்தது என்ன? - மமீதா விளக்கம்!

Mamitha Baiju: கடுமையான திட்டு.. முதுகில் அடி.. உண்மையில் பாலா செய்தது என்ன? - மமீதா விளக்கம்!

Mar 01, 2024 08:39 AM IST Kalyani Pandiyan S
Mar 01, 2024 08:39 AM , IST

தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவர் பாலா. தொடர் தோல்விகள், பர்சனல் பிரச்சினைகள், நெகட்டிவான விமர்சனங்கள் என தன்னுடைய கேரியரின் மோசமான காலக்கட்டத்தில் இருக்கும் பாலா, சூர்யாவுடன் வணங்கான் திரைப்படத்தில் இணைந்தார்.

இயக்குநர் பாலா!

(1 / 5)

இயக்குநர் பாலா!

தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவர் பாலா. தொடர் தோல்விகள், பர்சனல் பிரச்சினைகள், நெகட்டிவான விமர்சனங்கள் என தன்னுடைய கேரியரின் மோசமான காலக்கட்டத்தில் இருக்கும் பாலா, சூர்யாவுடன் வணங்கான் திரைப்படத்தில் இணைந்தார். ஆனால் படப்பிடிப்பில் சில கசப்பான சம்பவங்கள் அரங்கேற, சூர்யா அந்தப்படத்தில் இருந்து விலகினார்.   

(2 / 5)

தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவர் பாலா. தொடர் தோல்விகள், பர்சனல் பிரச்சினைகள், நெகட்டிவான விமர்சனங்கள் என தன்னுடைய கேரியரின் மோசமான காலக்கட்டத்தில் இருக்கும் பாலா, சூர்யாவுடன் வணங்கான் திரைப்படத்தில் இணைந்தார். ஆனால் படப்பிடிப்பில் சில கசப்பான சம்பவங்கள் அரங்கேற, சூர்யா அந்தப்படத்தில் இருந்து விலகினார். 

 

 

இதனையடுத்து அந்தப்படத்தில் அருண் விஜய் கமிட் செய்யப்பட்டு, தற்போது படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரடொக்ஷன் வேலைகள் மும்மரமாக நடந்து கொண்டிருக்கின்றன.  இந்த நிலையில் சூர்யாவுடன் வணங்கான் திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆன நடிகை மமீதா தனியார் சேனல் ஒன்றிற்கு பேட்டிக்கொடுத்தார். அந்த பேட்டியில், பாலா படப்பிடிப்பில் தான் கத்துவதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள கூடாது என்று சொன்னதாகவும், காட்சி ஒன்றில் சரியாக நடிக்காத போது அவர் தன்னை திட்டியதோடு, முதுகில் அடித்தார் என்றும் பேசினார்.   

(3 / 5)

இதனையடுத்து அந்தப்படத்தில் அருண் விஜய் கமிட் செய்யப்பட்டு, தற்போது படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரடொக்ஷன் வேலைகள் மும்மரமாக நடந்து கொண்டிருக்கின்றன. 

 

இந்த நிலையில் சூர்யாவுடன் வணங்கான் திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆன நடிகை மமீதா தனியார் சேனல் ஒன்றிற்கு பேட்டிக்கொடுத்தார். அந்த பேட்டியில், பாலா படப்பிடிப்பில் தான் கத்துவதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள கூடாது என்று சொன்னதாகவும், காட்சி ஒன்றில் சரியாக நடிக்காத போது அவர் தன்னை திட்டியதோடு, முதுகில் அடித்தார் என்றும் பேசினார். 

 

 

இந்தப்பேட்டி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பலரும் பாலாவை சமூகவலைதளங்களில் கடுமையாக சாடினர்.இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து மமீதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறார். அந்த விளக்கத்தில், “ நான் ஒன்றை இங்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் நடித்த வணங்கான் திரைப்படம் தொடர்பாக ஆன்லைனில் பரவும் செய்திகள் அனைத்தும் ஆதாரமற்றவை.   

(4 / 5)

இந்தப்பேட்டி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பலரும் பாலாவை சமூகவலைதளங்களில் கடுமையாக சாடினர்.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து மமீதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறார். அந்த விளக்கத்தில், “ நான் ஒன்றை இங்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் நடித்த வணங்கான் திரைப்படம் தொடர்பாக ஆன்லைனில் பரவும் செய்திகள் அனைத்தும் ஆதாரமற்றவை. 

 

 

நான் கொடுத்த நேர்காணலின் ஒரு பகுதியை மட்டும் கட் செய்து பதிவிட்டு, தவறான தலைப்பில் அவை செய்திகளாக மாறிக்கொண்டிருக்கின்றன. நான் பாலா சாருடன் கிட்டதட்ட ஒரு வருடம் பணியாற்றி இருக்கிறேன். அதில் படத்திற்கு முந்தைய பணிகளும், பிந்தைய பணிகளும் அடங்கும்.அவர் என்னிடம் கனிவாக நடந்து கொண்டு என்னை ஒரு நல்ல நடிகையாக மாற்ற முயன்றார். அந்தப்படத்தில் மனரீதியாகவோ, உடல்ரீதியாகவோ நான் எந்த வித துன்பத்தையும் அனுபவிக்கவில்லை என்பதை இங்கு மீண்டும் சொல்லிக்கொள்கிறேன்.  நான் அந்தப்படத்தில் இருந்து வெளியே வந்ததற்கான காரணம் என்னுடைய தொழில்முறை சார்ந்த கமிட்மெண்ட்டுகள்தான். இது தொடர்பான செய்தியை வெளிடும் முன்னர் என்னை தொடர்பு கொண்டு பேசிய ஊடகங்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என்னை புரிந்து கொண்டதற்கு நன்றி” என்று பேசினார்.

(5 / 5)

நான் கொடுத்த நேர்காணலின் ஒரு பகுதியை மட்டும் கட் செய்து பதிவிட்டு, தவறான தலைப்பில் அவை செய்திகளாக மாறிக்கொண்டிருக்கின்றன. நான் பாலா சாருடன் கிட்டதட்ட ஒரு வருடம் பணியாற்றி இருக்கிறேன். அதில் படத்திற்கு முந்தைய பணிகளும், பிந்தைய பணிகளும் அடங்கும்.

அவர் என்னிடம் கனிவாக நடந்து கொண்டு என்னை ஒரு நல்ல நடிகையாக மாற்ற முயன்றார். அந்தப்படத்தில் மனரீதியாகவோ, உடல்ரீதியாகவோ நான் எந்த வித துன்பத்தையும் அனுபவிக்கவில்லை என்பதை இங்கு மீண்டும் சொல்லிக்கொள்கிறேன். 

 

நான் அந்தப்படத்தில் இருந்து வெளியே வந்ததற்கான காரணம் என்னுடைய தொழில்முறை சார்ந்த கமிட்மெண்ட்டுகள்தான். இது தொடர்பான செய்தியை வெளிடும் முன்னர் என்னை தொடர்பு கொண்டு பேசிய ஊடகங்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என்னை புரிந்து கொண்டதற்கு நன்றி” என்று பேசினார்.

மற்ற கேலரிக்கள்