20 ஆண்டு கடந்தும் உறவுகளை மறக்க இயலாமல் பரிதவிக்கும் மக்கள்! ஆயிரக்கணக்கான உயிர்களை குடித்த சுனாமி நினைவு தினம்!
- 2004 டிசம்பர் 26 அன்று அதிகாலை இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவுக் கடல் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், உலகின் பல்வேறு பகுதிகளை சுனாமி தாக்கியது. இதில், 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் தங்கள் சொத்துக்களை இழந்தனர்.
- 2004 டிசம்பர் 26 அன்று அதிகாலை இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவுக் கடல் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், உலகின் பல்வேறு பகுதிகளை சுனாமி தாக்கியது. இதில், 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் தங்கள் சொத்துக்களை இழந்தனர்.
(1 / 7)
தமிழக வரலாற்றில் 26 - 12 - 2004 என்ற நாளை யாராலும் அவ்வளவு எளிதாக கடந்து விட முடியாது. இன்றைய தலைமுறை அதுவரை அறிந்திடாத ஆழிப்பேரலை என்னும் சுனாமி இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளை தாக்கியது.
(PTI)(2 / 7)
2004 டிசம்பர் 26 அன்று அதிகாலை இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவுக் கடல் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
(PTI)(3 / 7)
உலகின் பல்வேறு பகுதிகளை சுனாமி தாக்கியது. இதில், 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் தங்கள் சொத்துக்களை இழந்தனர்.
(AFP)(4 / 7)
தமிழகத்தில் மக்கள் என்ன நடக்கிறது என்பதை உள் வாங்குவதற்கு முன்பாக கண்முன்னே எழுந்த ராட்சத அலைகள் ஏராளமானோரை வாரிச் சுட்டி கொண்டது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் தங்கள் சொந்தங்களையும், உடைமைகளையும் இழந்து தவித்தனர். பலர் காயம் அடைந்தனர். இன்று நினைத்தாலும் நடுக்கமுற வைக்கும் சோக நிகழ்வுதான் அந்த சுனாமி.
(PTI)(5 / 7)
தமிழகத்தில் சுனாமி தாக்கி இன்றுடன் 20 ஆண்டுகள் கடந்து விட்டது. ஆனால் காலங்கள் மாறினாலும் மாறாத வடுவாக சுனாமி நினைவுகள் பாதிக்கப்பட்ட மக்களை இன்றும் வாட்டுகிறது.
(AFP)(6 / 7)
காவிரி டெல்லாவின் கடைக்கோடி மாவட்டமான நாகையில் 6 ஆயிரத்திற்கு மேற்பட்டோரும், கடலூரில் 610 பேரும், தலைநகர் சென்னையில் 206 பேரும் உயிரிழந்தனர்.
(PTI)மற்ற கேலரிக்கள்