Parenting Tips : உங்கள் குழந்தையின் கணிதத்திறனை மேம்படுத்த வேண்டுமா? அப்போ இதை மட்டும் செய்தால் போதும்!
- Parenting Tips : உங்கள் குழந்தையின் கணித திறனை மேம்படுத்த வேண்டுமா? அதற்கு என்ன செய்யவேண்டும் என பாருங்கள்.
- Parenting Tips : உங்கள் குழந்தையின் கணித திறனை மேம்படுத்த வேண்டுமா? அதற்கு என்ன செய்யவேண்டும் என பாருங்கள்.
(1 / 11)
கணக்கு என்றால் பிணக்குதான் குழந்தைகளுக்கு, பல காரணங்களுக்காக அவர்கள் கணக்கை வெறுக்கிறார்கள். அதில் உள்ள சிக்கலான ஃபார்முலாக்கள் மற்றும் சில புரியாத விஷயங்களால் இதை வெறுக்கிறார்கள்.
(2 / 11)
சிலருக்கு இது வாழ்க்கைக்கு தேவையில்லை என்று எண்ணுகிறார்கள். நன்றாக புரியும்படி கணக்கை சொல்லி கொடுக்காததாலும், கணக்கை மாணவர்கள் வெறுக்கிறார்கள். தோல்வி அல்லது தவறுகளை தடுக்கவும் கணிதத்தை மாணவர்கள் தவிர்க்கிறார்கள்.
(3 / 11)
கணக்கு பாடத்துக்கு பொறுமை மற்றும் பயிற்சி மிகவும் அவசியம். அது சிலருக்கு அதிகப்படியான ஒன்றாக இருக்கும். மேலும் சமூகத்தின் தாக்கமும் கணிதத்தை வெறுக்க வைக்கிறது. இவையனைத்தும் சேர்ந்து கணிதத்தை கடினம் என எண்ணவைக்கிறது.
(4 / 11)
உங்கள் குழந்தைகள் கணக்கை விரும்ப வைக்க ஆய்வு கூறுவது என்ன?
2023ம் ஆண்டு நடந்த ஒரு ஆய்வு உங்கள் குழந்தைக்கு கணதத்தை பிடிக்கும் பாடமாக்க சுவாரஸ்யமான வழிகளை கூறுகிறது. எலக்டிரிக்கல் சத்தம் மூலம் மூளையை செயல்பட வைப்பது, கணித பாரத்தை கற்கும் திறனை அதிகரிககும். குறிப்பாக அதை கற்க சிரமப்படுபவர்களுக்கு இது உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.
(5 / 11)
கற்றலில் நரம்பியல் தூண்டுதலின் பாதிப்புகள் என்ன?
மூளையின் முகப்பு பாகத்தில் எலக்ட்டிரிக்கல் சத்தம் மூளை தூண்டுதலை ஏற்படுத்தினால், அது கணிதத்திறனை அதிகரிக்கிறது. இது கணிதத்தில் விருப்பம் காட்டாதவர்களை தூண்டுகிறது. வாழ்வில் நாம் செய்யும் அனைத்துக்கும் கற்றல்தான் முக்கிறது. ஒரு புதிய திறனை வளர்த்துக்கொள்வதாகட்டும், காரை ஓட்டுவது, எப்படி கோடிங் செய்வது என ஒரு திறனை வளர்க்க கற்றல் அவசியம்.
(6 / 11)
அப்போது நமது மூளை புதிய விஷயங்களை கற்கிறது. அதற்கு தொடர்ந்து நம்மைச்சுற்றி எண்ண நடக்கிறது என்பதை கண்ணுறுகிறது. ஒருவரின் கற்றல், அவர்கள் மூளையில் உள்ள நரம்பியல் தூண்டுதல்களுடன் தொடர்புடையது. இதில் நாம் என்ன அறிந்துகொள்வது என்னவென்றால், இந்த நடவடிக்கை நமது கணித திறன்களை அதிகரிக்கிறது.
(7 / 11)
100க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
ஆய்வில் 102 பங்கேற்பாளர்கள் பங்கேற்றனர். அவர்களின் கணித திறன் பல்வேறு பெருக்கல் கணக்குகள் மூலம் சோதிக்கப்பட்டது. இந்த பங்கேற்பாளர்கள் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டார்கள். ஒரு குழு கற்றல் குழு, அmவர்கள் கணிதப் பெருக்கல் பழகும்போது, அதிக ஃப்ரிகுவன்சி ராண்டம் எலக்ட்ரிக்கல் சத்த தூண்டுதலுக்கு உட்படுத்தப்பட்டார்கள்.
(8 / 11)
மற்றொரு குழு அதிகம் கற்கும் குழு, இதே அளவு தூண்டுதலில் பெருக்கல் பழகினார்கள். மற்ற இரு குழுவினரும், கற்கும் மற்றும் அதிகம் கற்கும் குழுவினர், எலக்ட்டிரிக்கல் கரன்ட் இல்லாமல் உண்மை தூண்டுதல் அனுபவத்தை கொடுத்தார்கள்.
(9 / 11)
குழந்தைகளுக்கு கணக்கை பிடிக்க வைப்பது எப்படி?
கணக்கை சுவாரஸ்யமான பாடமாக்க வேண்டுமெனில், நீங்கள் உண்மை வாழ்க்கையில் நடக்கும் சுவாரஸ்யமாக தகவல்களோடு, குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான ஆக்டிவிட்டிகளை செய்துகாட்டவேண்டும். விளையாட்டுகள், பசில்கள், தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, கணித பாடத்தை சுவாரஸ்யமும், மகிழ்ச்சியும் நிறைந்த அனுபவமாக்க வேண்டும்.
(10 / 11)
கணித பாடத்தை நாம் அன்றாடம் பயன்படுத்தும் விஷயங்களுடன் ஒப்பிடவேண்டும். விளையாட்டு, ஷாப்பிங் என உங்கள் வாழ்வில் உண்மையாக நடைபெறும் நிகழ்வுகளுடன் கணிதப்பாடத்தை ஒப்பிடவேண்டும். அப்போது குழந்தைகளுக்கு கணிதப்பாடம் சுவாரஸ்யமாகும். குழுவாக இணைந்து கணக்கு போடுவது, உரையாடுவது, என ஒன்றாக சேர்ந்து கற்கும் சூழலை உருவாக்கவேண்டும்.
மற்ற கேலரிக்கள்