Parenting Tips : நீங்கள் ஒற்றை பெற்றோரா? எத்தனை பிரச்னைகளை கடக்கணும்? சவால்களை சாதனைகளாக்கும் வழிகள்!
- Parenting Tips : நீங்கள் ஒற்றை பெற்றோரா? எத்தனை பிரச்னைகளை கடக்கணும்? சவால்களை சாதனைகளாக்கும் வழிகள்!
- Parenting Tips : நீங்கள் ஒற்றை பெற்றோரா? எத்தனை பிரச்னைகளை கடக்கணும்? சவால்களை சாதனைகளாக்கும் வழிகள்!
(1 / 8)
பொருளாதாரம் - இன்றைய காலகட்டத்தில் நமக்கு பொருளாதாரம் மிகவும் அவசியமான ஒன்று. அந்தளவு விலைவாசி உயர்வு நம்மை படாய் படுத்தி எடுக்கிறது. எனவே விலைவாசி உயர்வுக்கு ஏற்ப இருவரும் சம்பாதித்தால்தான் குடும்பத்தை ஓட்ட முடியும். ஒருவரின் வருமானத்தில் உங்கள் பொருளாதார தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து கொள்ளவேண்டும் என்பது, மிகவும் கடினமான ஒன்று. உங்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளவேண்டும். குழந்தைகளை வளர்க்கவேண்டும். அவர்களுக்கு கல்விக்கான செலவு, அவர்களின் அவசர கால தேவைகள் என உங்களின் சுமைகளை அதிகரிப்பதாக உள்ளது.
(2 / 8)
நேர மேலாண்மை - வீட்டு வேலைகளையும் செய்துகொள்ளவேண்டும். உங்கள் அன்றாட பணிகளையும் கவனித்துக்கொள்ளவேண்டும். எனவே உங்கள் குழந்தைகளுடன் நீங்கள் தரமான நேரத்தை செலவிடாவிட்டால் உங்களுக்கு அது பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. இதனால் ஒற்றை பெற்றோர்கள் கடும் அவதிகளை சந்திக்கிறார்கள்.
(3 / 8)
மனஅழுத்தம் - ஒற்றை பெற்றோராக இருக்கும்போது உங்களை தனிமை வாட்டி எடுக்கும். குற்றவுணர்வுகள், பயம் மற்றும் பதற்றம் உங்களை ஆட்டுவிக்கும். நீங்கள் ஒற்றை பெற்றோராக குழந்தைகளை வளர்த்து எடுக்கும்போது, உங்களுக்கு உணர்வு ரீதியான சுமைகள் அதிகம். உங்களைப் பார்த்து உங்கள் குழந்தைகளும் அவதிப்படுகிறார்கள். அவர்களையும் சமாளிக்கவேண்டும். இது ஒற்றை பெற்றோரின் கூடுதல் மனஅழுத்தம்தான்.
(4 / 8)
குறைவான துணை - உங்களின் பொறுப்புக்களை பகிர்ந்துகொள்ள உங்களுக்கு ஒரு பார்ட்னர் இல்லையென்பதால் ஒற்றை பெற்றோர் தங்களின் உற்ற துணையையே இழக்கிறார்கள். இது அவர்களின் அன்றாட சவால்களை எதிர்கொள்வதில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
(5 / 8)
குழந்தை வளர்ப்பு - குழந்தை வளர்ப்பது ஒற்றை பெற்றோருக்கு உள்ள மிகப்பெரிய சவால்களுள் ஒன்று. உங்களுக்கு ஏற்ற மற்றும் தேவையான குழந்தை பராமரிப்பு மையங்கள் கிடைப்பதில் உங்களுக்கு சிக்கல் ஏற்படுகிறது. ஒற்றை பெற்றோர், அவர்களின் வேலைகள், குடும்பம், குழந்தைகள் என அனைத்தையும் ஒரே ஆளாக சமாளிக்கிறார்கள்.
(6 / 8)
வேலை – வாழ்க்கை சமம் - ஒற்றை பெற்றோராக இருந்துகொண்டு, நீங்கள் வேலையைப் பார்ப்பது அதிக சவால்கள் நிறைந்த ஒன்று. ஒற்றை பெற்றோருக்கு இது மிகவும் கஷ்டமாக உள்து. இதனால் அவர்களின் வேலையில் அவர்களால் முன்னேறிச் செல்ல முடியவில்லை. அவர்களின் தனிப்பட்ட விருப்பங்களையும் செய்ய முடியவில்லை. இந்த வேலை – வீடு இரண்டையும் சம அளவு பராமரிக்க முடியாமல் அவர்கள் அவதி கொள்கிறார்கள்.
(7 / 8)
ஒழுக்கம் - உங்கள் வீட்டில் விதிகளை வகுப்பது அல்லது உங்கள் குழந்தைக்கு ஒழுக்கத்தை கற்றுக்கொடுப்பது மிகவும் கடினமான ஒன்று. அதை இரண்டு பெற்றோரும் சேர்ந்துதான் செய்யவேண்டும். ஆனால் ஒற்றை பெற்றோராக இருக்கும்போது, குழந்தைகள் நாம் கூறுவதை கேட்கமாட்டார்கள். அதிக அடம்பிடிப்பார்கள். மேலும் என்ன செய்தாலும் அதை முறையாகக் கடைபிடிக்க முடியாமல் போய்விடும்.
(8 / 8)
சமூக தனிமை - அவர்கள் சமூகத்தில் தனித்து விடப்பட்டதைப்போல் உணர்வார்கள். அவர்களால் யாருடனும் எளிதில் பழக முடியாது. அவர்களால் நட்பை வளர்த்துக்கொள் முடியாது. அவர்களின் பொறுப்புக்கள் மற்றும் நேரமின்மையால் அவர்கள் தனிமையை உணர்வார்கள். இது அவர்களுக்கு மேலும் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பாக அமையும்.
மற்ற கேலரிக்கள்