Actors Slapped in Public Place: கங்கனா மட்டுமல்ல..! பொது இடத்தில் பளார் வாங்கிய பிரபலங்கள் யாரெல்லாம் தெரியுமா?
- கங்கனா ரணவத் மட்டுமல்ல, அவருக்கு முன்னர் பொது இடத்தில் வைத்து சினிமா பிரபலங்கள் பலரும் பளார் வாங்கியிருக்கிறார்கள். அவ்வாறு அடி வாங்கிய பிரபலங்கள் யாரெல்லாம் என்பதை பார்க்கலாம்
- கங்கனா ரணவத் மட்டுமல்ல, அவருக்கு முன்னர் பொது இடத்தில் வைத்து சினிமா பிரபலங்கள் பலரும் பளார் வாங்கியிருக்கிறார்கள். அவ்வாறு அடி வாங்கிய பிரபலங்கள் யாரெல்லாம் என்பதை பார்க்கலாம்
(1 / 8)
சண்டிகர் விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த பெண் காவலர் பாலிவுட் நடிகை கங்கனா கன்னத்தில் பளார் விட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
(2 / 8)
இந்த விவகாரத்தில் தொடர்புடையை பெண் காவலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளை காலிஸ்தான் தீவிரவாதிகள் எனவும், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் பணத்துக்காக வந்தவர்கள் என கங்கனா கூறியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கங்கனாவை அறைந்ததாக பெண் காவலர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது
(HT_PRINT)(3 / 8)
சல்மான் கான்: பாலிவுட் முன்னணி நடிகரான சல்மான் கானை, டெல்லியை சேர்ந்த தொழிலதிபரின் மகள் பார்டி ஒன்றில் வைத்து அறைந்துள்ளார். இருவருக்கும் மோதல் ஏற்பட்ட நிலையில் அவர் சல்மானை அறைந்ததாக கூறப்படுகிறது
(4 / 8)
பாலிவுட் நடிகையும், மாடலுமான கௌஹர் கான் இந்தியா ரா ஸ்டார் என்ற நிகழ்ச்சியின் பைனலில் பங்கேற்றபோது, லைவ் ஷுட்டிங்கில் பார்வையாளர் ஒருவர் அடித்துள்ளார். இஸ்லாம்மியர்களின் மத நம்பிக்கைக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக குட்டையான ஆடை அணிந்ததாக கூறி நடிகைக்கு பளார் விட்டதாக தாக்குதலில் ஈடுபட்ட நபர் கூறியிருக்கிறார்
(5 / 8)
பாடகரும், நிகழ்ச்சி தொகுப்பாளருமான ஆதித்யா நாரயணன் என்பவரை பப்பில் வைத்து பெண் ஒருவர் தாக்கியுள்ளார். இந்த சம்பவம் 2011இல் நடந்துள்ளது. மனைவி, நண்பர்களுடன் மதுபோதையில் இருந்த அவர் தன்னை பார்த்து அருவருக்கத்தக்க கருத்தை கூறியதால் அறைந்ததாக தாக்குதலில் ஈடுபட்ட பெண் தெரிவித்துள்ளார்
(6 / 8)
பாலிவுட் கவர்ச்சி பாம் என்ற அழைக்கப்பட்ட மாடலும், நடிகையுமான மல்லிகா ஷெராவத், தனது ஆண் இருந்தபோது பாரிஸில் இருந்த அப்பார்ட்மெண்டில் இருந்து வெளியேறியபோது, மாஸ்க் அணிந்த அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கண்ணீர் புகையை மல்லிகா மீது வெளிப்படுத்தி, அவரை தாக்கிவிட்டு திருட்டில் ஈடுபட்டுள்ளனர்
(7 / 8)
பாலிவுட் இளம் நாயகனான ரன்வீர் சிங், அவரது பாடிகார்டால் தெரியாமல் தாக்கப்பட்டார். 2022இல் நடந்த சைமா விருது நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவரை காண கடல் போல் குவிந்த கூட்டத்தை கட்டுப்படுத்த முயற்சித்த போது ரன்வீர் சிங் பாதுகாப்புக்காக இருந்த பாடிகார்டு அவர் கன்னத்தில் பளார் விட்டுள்ளார்
மற்ற கேலரிக்கள்