Musical Pillars PHOTOS: வியக்க வைக்கும் நெல்லையப்பர் கோயில் இசை தூண்கள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Musical Pillars Photos: வியக்க வைக்கும் நெல்லையப்பர் கோயில் இசை தூண்கள்!

Musical Pillars PHOTOS: வியக்க வைக்கும் நெல்லையப்பர் கோயில் இசை தூண்கள்!

Published Nov 24, 2023 08:30 PM IST Karthikeyan S
Published Nov 24, 2023 08:30 PM IST

  • Nellaiappar Temple: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் உள்ள இசை தூண்கள் பற்றி பார்ப்போம்.

திருநெல்வேலி மாநகரில் அமையப்பெற்றுள்ளது பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் திருக்கோயில் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும்.

(1 / 8)

திருநெல்வேலி மாநகரில் அமையப்பெற்றுள்ளது பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் திருக்கோயில் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும்.

756 அடி நீளமும், 378 அடி அகலமும் கொண்ட இக்கோயில் ஆசியாவின் மிகப்பெரிய பாடல் பெற்ற சிவாலயமாக விளங்குகிறது. இந்த திருக்கோயிலில் எண்ணற்ற பல சிறப்புகளையும், பெருமைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

(2 / 8)

756 அடி நீளமும், 378 அடி அகலமும் கொண்ட இக்கோயில் ஆசியாவின் மிகப்பெரிய பாடல் பெற்ற சிவாலயமாக விளங்குகிறது. இந்த திருக்கோயிலில் எண்ணற்ற பல சிறப்புகளையும், பெருமைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

சுவாமி நெல்லையப்பர் திருக்கோயிலுக்குள் உள்ள மணி மண்டபத்தில் காணப்படும் சங்கீதத் தூண்கள் சிறப்பு பெற்றவையாகும்.

(3 / 8)

சுவாமி நெல்லையப்பர் திருக்கோயிலுக்குள் உள்ள மணி மண்டபத்தில் காணப்படும் சங்கீதத் தூண்கள் சிறப்பு பெற்றவையாகும்.

இங்குள்ள மணி மண்டபத்தின் முன்பக்கம் பெரிய தூண்கள் மண்டபத்தைத் தாங்கி நிற்க, அதைச் சுற்றி ஒலி எழுப்பக்கூடிய 48 சிறு சிறு இசை தூண்கள் காணப்படும். ஒவ்வொரு தூணும் ஒவ்வொரு இசையை எழுப்பக் கூடியவையாகும்.

(4 / 8)

இங்குள்ள மணி மண்டபத்தின் முன்பக்கம் பெரிய தூண்கள் மண்டபத்தைத் தாங்கி நிற்க, அதைச் சுற்றி ஒலி எழுப்பக்கூடிய 48 சிறு சிறு இசை தூண்கள் காணப்படும். ஒவ்வொரு தூணும் ஒவ்வொரு இசையை எழுப்பக் கூடியவையாகும்.

இந்த ஒவ்வொரு சிறிய இசை தூண்களிலும் ஒரு சிறு குச்சியைக் கொண்டு தட்டினால் ஒவ்வொரு விதமான சங்கீத ஸ்வரங்கள் எழுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது  சிறப்பம்சம் ஆகும். இது உலகில் வேறு எங்கும் காண முடியாத அதிசயங்களில் ஒன்றாகும். 

(5 / 8)

இந்த ஒவ்வொரு சிறிய இசை தூண்களிலும் ஒரு சிறு குச்சியைக் கொண்டு தட்டினால் ஒவ்வொரு விதமான சங்கீத ஸ்வரங்கள் எழுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது  சிறப்பம்சம் ஆகும். இது உலகில் வேறு எங்கும் காண முடியாத அதிசயங்களில் ஒன்றாகும். 

பெரிய தூணில் கர்நாடக சங்கீதமும், அதை சுற்றி உள்ள சிறிய தூண்களில் மிருதங்கம், கடம், சலங்கை, வீணை, மணி போன்ற இசைக்கருவிகளில் இசையை ஒலிக்கின்றன. 

(6 / 8)

பெரிய தூணில் கர்நாடக சங்கீதமும், அதை சுற்றி உள்ள சிறிய தூண்களில் மிருதங்கம், கடம், சலங்கை, வீணை, மணி போன்ற இசைக்கருவிகளில் இசையை ஒலிக்கின்றன. 

ஒவ்வொரு கல்லையும் ஒவ்வொரு பதத்தில் இழைத்திருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். அந்த காலத்தில் திருவிழாக்களின் போது இசைக் கலைஞர்கள் இந்த தூண்களை பயன்படுத்தியே இசைத்ததாக சொல்லப்படுகிறது.

(7 / 8)

ஒவ்வொரு கல்லையும் ஒவ்வொரு பதத்தில் இழைத்திருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். அந்த காலத்தில் திருவிழாக்களின் போது இசைக் கலைஞர்கள் இந்த தூண்களை பயன்படுத்தியே இசைத்ததாக சொல்லப்படுகிறது.

எந்த தொழில்நுட்ப வசதியும் இல்லாத காலத்தில் ஒவ்வொரு தூணும் ஒவ்வொரு விதமான அலைக்கற்றையை உருவாக்கும் விதத்தில் எப்படி உருவாக்கினார்கள் என்பது இன்று வரை வியப்பை மட்டுமே தருகிறது.

(8 / 8)

எந்த தொழில்நுட்ப வசதியும் இல்லாத காலத்தில் ஒவ்வொரு தூணும் ஒவ்வொரு விதமான அலைக்கற்றையை உருவாக்கும் விதத்தில் எப்படி உருவாக்கினார்கள் என்பது இன்று வரை வியப்பை மட்டுமே தருகிறது.

மற்ற கேலரிக்கள்