மு.க.ஸ்டாலின் முதல் டி.கே.சிவக்குமார் வரை! தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் தலைவர்கள் பேசியது என்ன?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  மு.க.ஸ்டாலின் முதல் டி.கே.சிவக்குமார் வரை! தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் தலைவர்கள் பேசியது என்ன?

மு.க.ஸ்டாலின் முதல் டி.கே.சிவக்குமார் வரை! தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் தலைவர்கள் பேசியது என்ன?

Published Mar 22, 2025 05:47 PM IST Kathiravan V
Published Mar 22, 2025 05:47 PM IST

  • சென்னையில் நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மற்றும் 15 கட்சிகளை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.

தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) என்பது இந்தியாவில் மக்களவை தொகுதிகளை மறுவரையறை செய்யும் செயல்முறையாகும். இது மக்கள்தொகை அடிப்படையில் நடைபெறுவதால், தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் என்ற அச்சம் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் எழுந்துள்ளது. மேலும் ஒரிசா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் தொகுதிகள் எண்ணிக்கை குறையும் அபாயம் உள்ளது.

(1 / 9)

தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) என்பது இந்தியாவில் மக்களவை தொகுதிகளை மறுவரையறை செய்யும் செயல்முறையாகும். இது மக்கள்தொகை அடிப்படையில் நடைபெறுவதால், தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் என்ற அச்சம் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் எழுந்துள்ளது. மேலும் ஒரிசா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் தொகுதிகள் எண்ணிக்கை குறையும் அபாயம் உள்ளது.

(HT_PRINT)

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி சோழா ஓட்டலில் தொடங்கி உள்ளது. இக்கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மற்றும் 15 கட்சிகளை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.

(2 / 9)

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி சோழா ஓட்டலில் தொடங்கி உள்ளது. இக்கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மற்றும் 15 கட்சிகளை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.

(CMOTamilnadu X )

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடந்தால், சொந்த நாட்டில் நாமே அரசியல் அதிகாரம் இழந்த குடிமக்களாக மாறும் அபாயம் ஏற்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

(3 / 9)

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடந்தால், சொந்த நாட்டில் நாமே அரசியல் அதிகாரம் இழந்த குடிமக்களாக மாறும் அபாயம் ஏற்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

(@TNDIPR21)

தொகுதி மறுசீரமைப்பு பாஜகவுக்கு சாதகமாக அமையும், ஏனெனில் அவர்கள் வடக்கில் அதிக செல்வாக்கு பெற்றுள்ளனர். மக்கள்தொகை அடிப்படையில் மட்டுமே எல்லை மறுவரையறை செய்யப்பட்டால், கேரளம் உள்ளிட்ட தென்மாநிலங்கள் பாதிக்கப்படும். மக்கள் தொகை குறைப்பை பாராட்டிய மத்திய அரசே தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தண்டிக்கிறது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்து உள்ளார்.

(4 / 9)

தொகுதி மறுசீரமைப்பு பாஜகவுக்கு சாதகமாக அமையும், ஏனெனில் அவர்கள் வடக்கில் அதிக செல்வாக்கு பெற்றுள்ளனர். மக்கள்தொகை அடிப்படையில் மட்டுமே எல்லை மறுவரையறை செய்யப்பட்டால், கேரளம் உள்ளிட்ட தென்மாநிலங்கள் பாதிக்கப்படும். மக்கள் தொகை குறைப்பை பாராட்டிய மத்திய அரசே தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தண்டிக்கிறது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்து உள்ளார்.

(Handout)

வடமாநிலங்கள் எங்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிவிடும். உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் ஆதிக்கம் செலுத்துவதை எந்த வகையிலும் ஏற்க முடியாது என ரேவந்த் ரெட்டி தெரிவித்து உள்ளார்.

(5 / 9)

வடமாநிலங்கள் எங்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிவிடும். உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் ஆதிக்கம் செலுத்துவதை எந்த வகையிலும் ஏற்க முடியாது என ரேவந்த் ரெட்டி தெரிவித்து உள்ளார்.

(PTI)

தொகுதி மறுசீரமைப்பு என்பது பாஜகவின் திட்டமாகும். பாஜக வெற்றி பெறாத இடங்களில் வெல்ல விரும்பாமல், அங்கு தொகுதிகளைக் குறைத்து, தங்கள் சதவீதத்தை உயர்த்த முயல்கின்றனர். பஞ்சாபில் உள்ள 13 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட அவர்கள் வெல்லவில்லை. ஆனால், பஞ்சாபின் தொகுதிகளை 13-லிருந்து 18 ஆக உயர்த்துகிறார்கள். தற்போது 543 தொகுதிகளில் பஞ்சாபின் பங்கு 2.39%. இதை 850 ஆக உயர்த்தி, 18 தொகுதிகளாக உயர்த்தினால் எங்கள் பங்கு 2.11%-ஆகக் குறையும். தொகுதிகள் அதிகரித்தாலும், பாராளுமன்றத்தில் எங்கள் பங்கு குறைகிறது என பஞ்சாப் முதலமைச்சர் பகவத்மான் பேசினார்.

(6 / 9)

தொகுதி மறுசீரமைப்பு என்பது பாஜகவின் திட்டமாகும். பாஜக வெற்றி பெறாத இடங்களில் வெல்ல விரும்பாமல், அங்கு தொகுதிகளைக் குறைத்து, தங்கள் சதவீதத்தை உயர்த்த முயல்கின்றனர். பஞ்சாபில் உள்ள 13 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட அவர்கள் வெல்லவில்லை. ஆனால், பஞ்சாபின் தொகுதிகளை 13-லிருந்து 18 ஆக உயர்த்துகிறார்கள். தற்போது 543 தொகுதிகளில் பஞ்சாபின் பங்கு 2.39%. இதை 850 ஆக உயர்த்தி, 18 தொகுதிகளாக உயர்த்தினால் எங்கள் பங்கு 2.11%-ஆகக் குறையும். தொகுதிகள் அதிகரித்தாலும், பாராளுமன்றத்தில் எங்கள் பங்கு குறைகிறது என பஞ்சாப் முதலமைச்சர் பகவத்மான் பேசினார்.
(PTI)

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் வடக்கு மற்றும் தெற்கு இடையேயான போராட்டம் அல்ல; சமமான மாநிலங்களின் ஒன்றியமாக இந்தியாவின் பார்வையை மீட்கும் போராட்டம் என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்து உள்ளார்.

(7 / 9)

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் வடக்கு மற்றும் தெற்கு இடையேயான போராட்டம் அல்ல; சமமான மாநிலங்களின் ஒன்றியமாக இந்தியாவின் பார்வையை மீட்கும் போராட்டம் என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்து உள்ளார்.

(Handout)

"மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்கள் தண்டிக்கப்படக்கூடாது" என ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தெரிவித்து உள்ளார்.

(8 / 9)

"மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்கள் தண்டிக்கப்படக்கூடாது" என ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தெரிவித்து உள்ளார்.

(PTI)

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக கூடிய குழுவானது நியாமான தொகுதி மறுசீரமைப்பை வலியுறுத்தும் கூட்டுக் குழு என பெயரிடப்பட்டு உள்ளது. இதன் அடுத்தக் கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

(9 / 9)

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக கூடிய குழுவானது நியாமான தொகுதி மறுசீரமைப்பை வலியுறுத்தும் கூட்டுக் குழு என பெயரிடப்பட்டு உள்ளது. இதன் அடுத்தக் கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

(PTI)

Kathiravan V

TwittereMail
கதிரவன் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக உள்ளார். தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடக துறைகளில் 2016ஆம் ஆண்டு முதல் பணியாற்றி அனுபவம் பெற்றுள்ளார். அரசியல், தொழில்முனைவு, வணிகம், ஆன்மீகம் மற்றும் நாட்டு நடப்பு உள்ளிட்ட பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறார். தூசி பாலிடெக்னிக் கல்லூரியில் DME பட்டயப்படிப்பு, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ அரசியல் அறிவியல், SRM பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ முடித்து உள்ளார். புதிய தலைமுறை டி.வி., ஏபிபி நாடு ஆகிய முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய இவர், கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணியாற்றி வருகிறார்.

மற்ற கேலரிக்கள்