Metti Oli Leela: ‘மஞ்சள் காமாலை உயிரை பறிச்சிடுச்சு; உமா கடைசியா பார்த்த முகம்.. நொறுங்கிட்டேன்’- மெட்டி ஒலி லீலா!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Metti Oli Leela: ‘மஞ்சள் காமாலை உயிரை பறிச்சிடுச்சு; உமா கடைசியா பார்த்த முகம்.. நொறுங்கிட்டேன்’- மெட்டி ஒலி லீலா!

Metti Oli Leela: ‘மஞ்சள் காமாலை உயிரை பறிச்சிடுச்சு; உமா கடைசியா பார்த்த முகம்.. நொறுங்கிட்டேன்’- மெட்டி ஒலி லீலா!

Published May 19, 2024 11:49 AM IST Kalyani Pandiyan S
Published May 19, 2024 11:49 AM IST

Metti Oli fame Leela: முதலில் நாங்கள் அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. காரணம், மனதளவில் அவள், அவளுடன் மிகவும் நெருக்கமாக இருந்த காரணத்தால், அவள் இப்படி பேசுகிறாள் என்று விட்டு விட்டோம். 

 ‘மஞ்சள் காமாலை உயிரை பறிச்சிடுச்சு; உமா கடைசியா பார்த்த முகம்.. நொறுங்கிட்டேன்’ மெட்டி ஒலி லீலா!

(1 / 5)

 ‘மஞ்சள் காமாலை உயிரை பறிச்சிடுச்சு; உமா கடைசியா பார்த்த முகம்.. நொறுங்கிட்டேன்’ மெட்டி ஒலி லீலா!

Metti Oli Leela: பிரபல சீரியல் நடிகையான மெட்டி ஒலி லீலா, தன்னுடைய தங்கை உமா மகேஷ்வரி இறப்பு குறித்து கலாட்டா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசி இருக்கிறார். குழந்தை அழவில்லை. அதில் அவர் பேசும் போது, “என்னுடைய தங்கை இறந்த பொழுது என்னுடைய குழந்தை மிக நீண்ட நேரமாக அழவே இல்லை. அதன் பின்னர்தான் அவளுக்கு, சித்தி இல்லை என்பது உணர்வுக்கு வந்து, தேம்பி தேம்பி அழுதாள். உமா இறந்த சமயத்தில், அவள் சித்தி, அவளுடன் இருப்பது போலவே நினைத்துக் கொண்டு, வீட்டில் பேசுவாள். முதலில் நாங்கள் அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. காரணம், மனதளவில் அவள், அவளுடன் மிகவும் நெருக்கமாக இருந்த காரணத்தால், அவள் இப்படி பேசுகிறாள் என்று விட்டு விட்டோம். ஆனால், அது பள்ளிக்கூடத்திலும் தொடர்ந்த நிலையில் அதை நாங்கள் நாங்கள் உற்று கவனிக்கத்தொடங்கினோம். அவள் என்னுடைய மகளுக்காக சில விஷயங்களை கொடுத்து இருக்கிறாள்.  

(2 / 5)

Metti Oli Leela: பிரபல சீரியல் நடிகையான மெட்டி ஒலி லீலா, தன்னுடைய தங்கை உமா மகேஷ்வரி இறப்பு குறித்து கலாட்டா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசி இருக்கிறார். 

குழந்தை அழவில்லை. 

அதில் அவர் பேசும் போது, “என்னுடைய தங்கை இறந்த பொழுது என்னுடைய குழந்தை மிக நீண்ட நேரமாக அழவே இல்லை. அதன் பின்னர்தான் அவளுக்கு, சித்தி இல்லை என்பது உணர்வுக்கு வந்து, தேம்பி தேம்பி அழுதாள். உமா இறந்த சமயத்தில், அவள் சித்தி, அவளுடன் இருப்பது போலவே நினைத்துக் கொண்டு, வீட்டில் பேசுவாள். 

முதலில் நாங்கள் அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. காரணம், மனதளவில் அவள், அவளுடன் மிகவும் நெருக்கமாக இருந்த காரணத்தால், அவள் இப்படி பேசுகிறாள் என்று விட்டு விட்டோம். ஆனால், அது பள்ளிக்கூடத்திலும் தொடர்ந்த நிலையில் அதை நாங்கள் நாங்கள் உற்று கவனிக்கத்தொடங்கினோம். அவள் என்னுடைய மகளுக்காக சில விஷயங்களை கொடுத்து இருக்கிறாள். 

 

என்னுடைய வீட்டில்தான் இருந்தாள்அதை அவள் பார்க்கும் பொழுது, அவளுக்கு மீண்டும் அவளது நினைவுகள் நினைவுக்கு வருகின்றன. நிறைய விஷயங்களுக்கு நாம் காரணம் தேட முடியாது. அதனால் நாங்கள் என்னுடைய மகளிடம், சித்தி உன்னுடன் தான் இருக்கிறாள் என்று சொல்லிவிட்டோம். உமா என்னுடைய வீட்டில் தான் கிட்டத்தட்ட ஒரு மாதமாக இருந்தாள்.   

(3 / 5)

என்னுடைய வீட்டில்தான் இருந்தாள்

அதை அவள் பார்க்கும் பொழுது, அவளுக்கு மீண்டும் அவளது நினைவுகள் நினைவுக்கு வருகின்றன. நிறைய விஷயங்களுக்கு நாம் காரணம் தேட முடியாது. அதனால் நாங்கள் என்னுடைய மகளிடம், சித்தி உன்னுடன் தான் இருக்கிறாள் என்று சொல்லிவிட்டோம். உமா என்னுடைய வீட்டில் தான் கிட்டத்தட்ட ஒரு மாதமாக இருந்தாள். 

 

 

 (புகைப்படத்தில் உடன் இருப்பவர் அவர் தங்கை இல்லை) நான் தான் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது உள்ளிட்ட எல்லா வேலைகளையும் கவனித்துக் கொண்டேன். என்னுடைய தம்பி ஆயுர்வேதிக் டாக்டர். அவன் என்னிடம், எப்போது என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது என்று சொன்னான். அதைக் கேட்ட பொழுது எனக்கு மிகவும் பயமாக இருந்தது. காரணம், என்னால் அந்த ஒரு தருணத்தை நினைத்து பார்க்கவே முடியவில்லை.  

(4 / 5)

 (புகைப்படத்தில் உடன் இருப்பவர் அவர் தங்கை இல்லை)

 

நான் தான் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது உள்ளிட்ட எல்லா வேலைகளையும் கவனித்துக் கொண்டேன். என்னுடைய தம்பி ஆயுர்வேதிக் டாக்டர். அவன் என்னிடம், எப்போது என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது என்று சொன்னான். அதைக் கேட்ட பொழுது எனக்கு மிகவும் பயமாக இருந்தது. காரணம், என்னால் அந்த ஒரு தருணத்தை நினைத்து பார்க்கவே முடியவில்லை. 

 

ஊருக்கு சென்று வருகிறேன் என்றாள்இந்த நிலையில்தான் என்னுடைய கணவருடன் நான் ஊரில் இருந்து விட்டு வருகிறேன் என்று சொல்லிச் சென்றாள். நாங்கள் அவளை பார்ப்பதற்காக மீண்டும் சென்றோம். நாங்கள் அந்த வீட்டில் நுழைந்தவுடன், அவள் என்னுடைய கண்ணை பார்த்து விட்டு, உடனே கண் மூடிவிட்டாள்.  அதோடு அவளது ஆயுள் முடிந்துவிட்டது.  அவள் இறைவனடி சேர்ந்து விட்டாள். இப்பொழுதும் எனக்கு ஏதாவது ஒரு காட்சியில், மிகவும் எமோஷனலாக அழ வேண்டும் என்று சொன்னால் அந்த ஒரு மொமண்டை நினைத்துக்கொள்வேன். அதை நினைத்த மாத்திரத்திலேயே என்னுடைய கண்ணில் தாரை தாரையாக  கண்ணீர் வந்துவிடும்.

(5 / 5)

ஊருக்கு சென்று வருகிறேன் என்றாள்

இந்த நிலையில்தான் என்னுடைய கணவருடன் நான் ஊரில் இருந்து விட்டு வருகிறேன் என்று சொல்லிச் சென்றாள். நாங்கள் அவளை பார்ப்பதற்காக மீண்டும் சென்றோம். நாங்கள் அந்த வீட்டில் நுழைந்தவுடன், அவள் என்னுடைய கண்ணை பார்த்து விட்டு, உடனே கண் மூடிவிட்டாள்.  

அதோடு அவளது ஆயுள் முடிந்துவிட்டது. 

 

அவள் இறைவனடி சேர்ந்து விட்டாள். இப்பொழுதும் எனக்கு ஏதாவது ஒரு காட்சியில், மிகவும் எமோஷனலாக அழ வேண்டும் என்று சொன்னால் அந்த ஒரு மொமண்டை நினைத்துக்கொள்வேன். அதை நினைத்த மாத்திரத்திலேயே என்னுடைய கண்ணில் தாரை தாரையாக  கண்ணீர் வந்துவிடும்.

மற்ற கேலரிக்கள்