Lok Sabha Election 2024: ஸ்மிருதி இரானி முதல் அம்பானி வரை வாக்களித்த பிரபலங்கள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Lok Sabha Election 2024: ஸ்மிருதி இரானி முதல் அம்பானி வரை வாக்களித்த பிரபலங்கள்!

Lok Sabha Election 2024: ஸ்மிருதி இரானி முதல் அம்பானி வரை வாக்களித்த பிரபலங்கள்!

Published May 20, 2024 01:03 PM IST Karthikeyan S
Published May 20, 2024 01:03 PM IST

  • நாடு முழுவதும் 6 மாநிலங்கள்,2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் 5-ம் கட்ட மக்களவை தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மும்பையில் தொழிலதிபர் அனில் அம்பானி, பாலிவுட் பிரபலங்கள் அக்‌ஷய் குமார், ஜோயா அக்தார் உள்ளிட்டோர் வாக்குப்பதிவு செய்தனர்.

(1 / 12)

மும்பையில் தொழிலதிபர் அனில் அம்பானி, பாலிவுட் பிரபலங்கள் அக்‌ஷய் குமார், ஜோயா அக்தார் உள்ளிட்டோர் வாக்குப்பதிவு செய்தனர்.

லக்னோ, மக்களவைத் தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவில் பாதுகாப்புத் துறை அமைச்சரும், பாஜக வேட்பாளருமான ராஜ்நாத் சிங் வாக்களித்தார்.

(2 / 12)

லக்னோ, மக்களவைத் தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவில் பாதுகாப்புத் துறை அமைச்சரும், பாஜக வேட்பாளருமான ராஜ்நாத் சிங் வாக்களித்தார்.

(PTI)

பாஜக எம்.பி.யும், அமேதி தொகுதி வேட்பாளருமான ஸ்மிருதி இரானி அமேதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விக்சித் பாரத்தின் தீர்மானத்துடன் எனது கிராமமான கௌரிகஞ்சில் வாக்களித்தது இன்று எனது நல்ல அதிர்ஷ்டம். மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இது நம் நாட்டின் எதிர்காலத்திற்கான நமது பொறுப்பு.” என்றார்.

(3 / 12)

பாஜக எம்.பி.யும், அமேதி தொகுதி வேட்பாளருமான ஸ்மிருதி இரானி அமேதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விக்சித் பாரத்தின் தீர்மானத்துடன் எனது கிராமமான கௌரிகஞ்சில் வாக்களித்தது இன்று எனது நல்ல அதிர்ஷ்டம். மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இது நம் நாட்டின் எதிர்காலத்திற்கான நமது பொறுப்பு.” என்றார்.

(PTI)

நடிகர் ஃபர்ஹான் அக்தர் தனது வாக்கை செலுத்த பாந்த்ரா மேற்கில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வரிசையில் நின்றபோது, "எனது வாக்கு நல்லாட்சிக்கானது, அனைத்து மக்களையும் கவனித்துக்கொள்ளும் அரசாங்கம், எங்களுக்கு ஒரு சிறந்த நகரத்தை வழங்குகிறது" என்று கூறினார்.

(4 / 12)

நடிகர் ஃபர்ஹான் அக்தர் தனது வாக்கை செலுத்த பாந்த்ரா மேற்கில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வரிசையில் நின்றபோது, "எனது வாக்கு நல்லாட்சிக்கானது, அனைத்து மக்களையும் கவனித்துக்கொள்ளும் அரசாங்கம், எங்களுக்கு ஒரு சிறந்த நகரத்தை வழங்குகிறது" என்று கூறினார்.(PTI)

உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி லக்னோவில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த பின்னர் மை வைத்த விரலைக் காட்டினார்.

(5 / 12)

உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி லக்னோவில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த பின்னர் மை வைத்த விரலைக் காட்டினார்.(PTI)

மும்பையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவில் ஹேமமாலினியும் அவரது மகள் ஈஷா தியோலும் வாக்களித்ததன் அடையாளமாக மை வைத்த விரல்களைக் காட்டினர்.

(6 / 12)

மும்பையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவில் ஹேமமாலினியும் அவரது மகள் ஈஷா தியோலும் வாக்களித்ததன் அடையாளமாக மை வைத்த விரல்களைக் காட்டினர்.

(PTI)

பிரபல நடிகர் தர்மேந்திரா (88) வாக்களித்த பின்னர் அடையாள மை விரலை காட்டினார். 

(7 / 12)

பிரபல நடிகர் தர்மேந்திரா (88) வாக்களித்த பின்னர் அடையாள மை விரலை காட்டினார். 

(PTI)

பாலிவுட் நடிகர் ரன்தீப் ஹூடா மும்பையில் திங்கள்கிழமை நடைபெற்ற ஐந்தாம் கட்ட மக்களவைத் தேர்தலில் வாக்களித்த பின்னர் மை போட்ட விரலைக் காட்டினார்.

(8 / 12)

பாலிவுட் நடிகர் ரன்தீப் ஹூடா மும்பையில் திங்கள்கிழமை நடைபெற்ற ஐந்தாம் கட்ட மக்களவைத் தேர்தலில் வாக்களித்த பின்னர் மை போட்ட விரலைக் காட்டினார்.(PTI)

மும்பை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளரான பியூஷ் கோயல் வாக்களித்த பின்னர், “மும்பை மக்கள் நாட்டின் சிறந்த எதிர்காலத்திற்காக வாக்களிக்கிறார்கள்.” என்று கூறினார்.

(9 / 12)

மும்பை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளரான பியூஷ் கோயல் வாக்களித்த பின்னர், “மும்பை மக்கள் நாட்டின் சிறந்த எதிர்காலத்திற்காக வாக்களிக்கிறார்கள்.” என்று கூறினார்.

(PTI)

மும்பை மக்களவைத் தேர்தலில் நடிகர் அக்ஷய் குமார் திங்கள்கிழமை அதிகாலை வாக்களித்தார். வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்குப் பேட்டியளித்த நடிகர் அக்‌ஷய் குமார், நான் எனது இந்தியா வலிமையானதாக, வளர்ச்சியடைய ஏதுவாக ஆட்சி அமைய வாக்களித்துள்ளேன். இந்தியா எது சரியோ அதற்கு வாக்களிக்க வேண்டும். வாக்குசதவீதம் சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறேன் என்றார்.

(10 / 12)

மும்பை மக்களவைத் தேர்தலில் நடிகர் அக்ஷய் குமார் திங்கள்கிழமை அதிகாலை வாக்களித்தார். வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்குப் பேட்டியளித்த நடிகர் அக்‌ஷய் குமார், நான் எனது இந்தியா வலிமையானதாக, வளர்ச்சியடைய ஏதுவாக ஆட்சி அமைய வாக்களித்துள்ளேன். இந்தியா எது சரியோ அதற்கு வாக்களிக்க வேண்டும். வாக்குசதவீதம் சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறேன் என்றார்.

(ANI)

மக்களவைத் தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவுக்காக தொழிலதிபர் அனில் அம்பானி மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் திங்கள்கிழமை அதிகாலை வாக்களித்தார்.

(11 / 12)

மக்களவைத் தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவுக்காக தொழிலதிபர் அனில் அம்பானி மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் திங்கள்கிழமை அதிகாலை வாக்களித்தார்.(ANI)

நடிகை சன்யா மல்ஹோத்ரா 2024 மக்களவைத் தேர்தலின் ஐந்தாம் கட்டத்தின் போது மும்பையில் தனது வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்தி திங்கள்கிழமை காலை வாக்களித்தார்.

(12 / 12)

நடிகை சன்யா மல்ஹோத்ரா 2024 மக்களவைத் தேர்தலின் ஐந்தாம் கட்டத்தின் போது மும்பையில் தனது வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்தி திங்கள்கிழமை காலை வாக்களித்தார்.

(ANI)

மற்ற கேலரிக்கள்