Money Luck: அதிர்ஷ்ட கதவை திறக்கும் குரு.. மங்கள யோகத்தை பெற்ற ராசிகள்.. 2025 ஆம் ஆண்டு யோகம் தான்!
- Money Luck: குரு பகவான் தற்போது வக்கிர பயணத்தில் இருக்கின்ற காரணத்தினால் ஒரு சில ராசிகள் பண மழையில் நனைய போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
- Money Luck: குரு பகவான் தற்போது வக்கிர பயணத்தில் இருக்கின்ற காரணத்தினால் ஒரு சில ராசிகள் பண மழையில் நனைய போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(1 / 6)
நவகிரகங்களில் மங்கள காரகனாக விளங்க கூடியவர் குரு பகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகிறார். குருபகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்று விட்டால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வ செழிப்பும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
(2 / 6)
அந்த வகையில் குரு பகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். குருபகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி என்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு தனது இடத்தை மாற்றினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது வருடத்தை மாற்றுகிறார். குரு பகவானின் அனைத்துவித செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.
(3 / 6)
அந்த வகையில் குரு பகவான் ரிஷப ராசியில் கடந்த அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று வக்கிர நிலையில் பின்னோக்கிய பயணத்தை மேற்கொண்டார். வருகின்ற 2025 பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் வக்கிர நிவர்த்தி அடைகின்றார். குரு பகவான் தற்போது வக்கிர பயணத்தில் இருக்கின்ற காரணத்தினால் ஒரு சில ராசிகள் பண மழையில் நனைய போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
கடக ராசி: குருபகவானின் பின்னோக்கிய பயணம் உங்கள் ராசியில் பதினோராவது வீட்டில் நிகழ்ந்துள்ளது இதனால் உங்களுக்கு வருமானத்தில் மிகப்பெரிய உயர்வு இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நல்ல செய்தி உங்களை தேடிவரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
(5 / 6)
சிம்ம ராசி: குருபகவான் உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் வக்கிரப் பெயர்ச்சி அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கப் போகின்றது. வருகின்ற 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
மற்ற கேலரிக்கள்