குரு நாற்காலியில் காத்திருக்கிறார்.. 3 ராசிகளுக்கு முக்கோண பணமழை
- Guru Peyarchi: குரு தொடங்கிய நேரான பயணத்தால் சுப பலன்களை பெறுகின்ற ராசிகளை காண்போம்.
- Guru Peyarchi: குரு தொடங்கிய நேரான பயணத்தால் சுப பலன்களை பெறுகின்ற ராசிகளை காண்போம்.
(1 / 7)
மங்கள கிரகமாக நவகிரகங்களால் போற்றப்படக்கூடியவர் குரு பகவான். குரு பகவான் அதிகபட்ச பாதிப்புகளை எந்த ராசிக்காரர்களுக்கும் ஏற்படுத்துவது கிடையாது. குருவின் இடம் மாற்றம்தான் பல்வேறு விதமான சிக்கல்களை மற்ற ராசிகளுக்கு ஏற்படுத்துகிறது. அந்த வகையில் குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசியில் அதிபதியாக திகழ்ந்து வருகிறார்.
(2 / 7)
நவகிரகங்கள் எப்போதும் ஒரு கால சூழ்நிலைக்கு ஏற்ப தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். அது 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு சொல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார்.
(3 / 7)
தற்போது குரு பகவான் 12 ராசிகளின் முதல் ராசியான மேஷ ராசியில் பயணம் செய்து வருகிறார். கடந்த டிசம்பர் 31ம் தேதி அன்று வக்கிர நிவர்த்தி அடைந்தார். வரும் ஏப்ரல் மாத இறுதிவரை இதே ராசியில் பயணம் செய்ய உள்ளார்.
(4 / 7)
குரு பகவானின் நேரான பயணம் தொடங்கி உள்ள காரணத்தினால் இது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் குறிப்பிட்ட பூர்வ மூன்று ராசிகள் சிறப்பான பலன்களை பெறப்போகின்றனர். அந்த வகையில் மே மாதம் வரை சுப பலன்களை பெறுகின்ற ராசிக்காரர்களை இங்கே காண்போம்.
(5 / 7)
ரிஷப ராசி: குருபகவான் உங்கள் ராசியில் பன்னிரண்டாவது வீட்டில் நேரான பயணத்தை தொடங்கியுள்ளார். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பண சிக்கல்கள் அனைத்தும் விலகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் சிறப்பாக நடக்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். குடும்ப உறவுகளுக்கு இடையே ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும்.
(6 / 7)
சிம்ம ராசி: குருபகவானின் நேரான பயணம் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் நிகழ்ந்துள்ளது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு தடையில்லாமல் கிடைக்கும். நீண்ட நாள் போராட்டங்கள் சுபமாக முடிவடையும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். ஆன்மீகத்தில் உங்களுடைய ஆர்வம் அதிகரிக்கும்.
(7 / 7)
மேஷ ராசி: குருபகவான் நேரான பயணம் உங்கள் ராசியில் முதல் வீட்டில் நிகழ்ந்துள்ளது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு தடை இல்லாமல் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். அலட்சிய செயல்பாடு உங்களுக்கு சிக்கல் ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலை உள்ளது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கக்கூடிய தருணங்கள் இப்போது அமையும்.
மற்ற கேலரிக்கள்