Ladakh: 'கடும் குளிரில் லடாக்கில் கொதித்து எழுந்த மக்கள்! ’ ஏன் தெரியுமா?
- ”லடாக்கிற்கு மாநில அந்தஸ்து மற்றும் யூனியன் பிரதேசத்திற்கான அரசியலமைப்பின் 6 வது அட்டவணையின் கீழ் பாதுகாப்பு கோரி ஆயிரக்கணக்கானோர் குளிரில் பேரணி நடத்தினர்”
- ”லடாக்கிற்கு மாநில அந்தஸ்து மற்றும் யூனியன் பிரதேசத்திற்கான அரசியலமைப்பின் 6 வது அட்டவணையின் கீழ் பாதுகாப்பு கோரி ஆயிரக்கணக்கானோர் குளிரில் பேரணி நடத்தினர்”
(1 / 6)
லடாக்கிற்கு மாநில அந்தஸ்து மற்றும் அரசமைப்புச் சட்டத்தின் ஆறாவது அட்டவணையை அமல்படுத்தக் கோரி, ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் கடுமையான குளிரையும் மீறி லே பகுதிகளில் பேரணி நடத்தியது பேசு பொருள் ஆகி உள்ளது.
(ANI)(2 / 6)
6 வது அட்டவணை, மாநில அந்தஸ்து, நிலம், வேலைப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்றத்தில் தனி மக்களவைத் தொகுதி ஆகியவற்றை அமல்படுத்தக் கோரி, கார்கில் ஜனநாயகக் கூட்டணி (கேடிஏ) மற்றும் லே அபெக்ஸ் பாடி (எல்ஏபி) ஆகிய கட்சிகள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
(ANI)(3 / 6)
லே அபெக்ஸ் பாடி (LAB) மற்றும் கார்கில் ஜனநாயகக் கூட்டணி (KDA) ஆகிய அமைப்புகள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
(X/@@SajjadKargili_)(4 / 6)
லடாக்கின் தனித்துவமான கலாச்சாரம் மற்றும் மொழியைப் பாதுகாக்க மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தலைமையில் உயர்மட்டக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
(X/@dnetta)(5 / 6)
கார்கில் ஜனநாயக கூட்டணியின் சட்ட ஆலோசகர் ஹாஜி குலாம் முஸ்தபாவின் கூற்றுப்படி, அனைத்து மக்களை மையமாகக் கொண்ட அதிகாரங்களும் பலவீனமடைந்துள்ளன என ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
(Screengrab)மற்ற கேலரிக்கள்