காலையிலேயே நடந்த சோகம்.. மறைந்த சின்னத்திரை நடிகையின் தந்தை தற்கொலை.. சித்ராவின் துப்பட்டாவிலேயே விபரீத முடிவு!
மகளின் மரணத்தால் மன உளைச்சலில் இருந்து வந்த காமராஜ் இன்று காலை சென்னை திருவான்மியூரில் உள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
(1 / 5)
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் ஆனவர் விஜே சித்ரா. இவர் கடந்த 2020-ம் ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சென்னை பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள ஓட்டலில் தூக்கில் தொங்கியபடி சித்ராவின் உடல் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 9-ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டது. பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நசரத்பேட்டை போலீசார் சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை கைது செய்தனர்.
(2 / 5)
பின்னர் ஜாமினில் வெளியே வந்த ஹேம்நாத், இந்த வழக்கில் நிரபராதி என கடந்த ஆகஸ்ட் மாதம் தீர்ப்பு வந்தது. அவரை விடுதலை செய்யவும் திருவள்ளூர் மகிளா விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஹேம்நாத் விடுதலை ஆன நிலையில், அதை எதிர்த்து சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
(3 / 5)
தற்போது சித்ராவின் தந்தை காமராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கிறார். மகளின் மரணத்தால் மன உளைச்சலில் இருந்து வந்த காமராஜ் இன்று காலை சென்னை திருவான்மியூரில் உள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதுவும் தன் மகள் சித்ராவின் துப்பட்டாவிலேயே அவர் தூக்கு போட்டு தன் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார்.
(4 / 5)
இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் சித்ராவின் தந்தை காமராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக விசாரணையும் நடத்தி வருகின்றனர்.
மற்ற கேலரிக்கள்