உலகின் பெரிய ஆன்மிக சங்கமம்.. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கும்ப மேளா.. நான்கு வகை கும்பங்களின் சுவாரஸ்ய தகவல்கள்
- 2013ஆம் ஆண்டுக்கு பின்னர் மகாகும்ப மேளா 2025 நிகழ்வு ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை பிரயாக்ராஜில் கங்கை மற்றும் யமுனை சங்கமத்தில் நடக்க உள்ளது. எத்தனை வகையான கும்பங்கள் உள்ளன, அவை என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்
- 2013ஆம் ஆண்டுக்கு பின்னர் மகாகும்ப மேளா 2025 நிகழ்வு ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை பிரயாக்ராஜில் கங்கை மற்றும் யமுனை சங்கமத்தில் நடக்க உள்ளது. எத்தனை வகையான கும்பங்கள் உள்ளன, அவை என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்
(1 / 9)
இந்தியவின் மிக பெரிய ஆன்மிக சங்கமமாக கும்பமேளா நிகழ்வு. உலகின் மிகப்பெரிய மதக் கண்காட்சி என்று அழைக்கப்படும் 45 நாள்கள் நடைபெறுகிறது. இந்த மகாகும்பம் இந்துக்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். இந்த காலத்தில் மொத்தம் ஆறு அரச நீராடல்கள் நடைபெறும். இந்த மகாகும்பத்தில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து 40 கோடிக்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக அர்த்த கும்ப மேளா 2019இல் பிரயாக்ராஜில் நடைபெற்றது. இதற்கு முன்பு மகாகும்ப மேளா 2013இல் பிரயாக்ராஜில் ஏற்பாடு செய்யப்பட்டது
(2 / 9)
கும்பமேளாவில் நான்கு வகைகள் உள்ளன - கும்பம், அர்த்த கும்பம், பூர்ண கும்பம் மற்றும் மகா கும்பம். அனைத்து கும்பமேளாக்களும் கிரகங்களின் நிலைக்கேற்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கும்பமேளாவை ஏற்பாடு செய்வதில் ஆண்டின் நேரம் மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு கும்பமேளாவுக்கும் தனி சிறப்பு உண்டு(Utpal sarkar )
(3 / 9)
மகாகும்பம்: பிரயாக்ராஜில் 2025ஆம் ஆண்டு மகாகும்பம் நடக்கிறது. ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 26ஆம் தேதி முடிவடைகிறது. பிரயாக்ராஜில் கடைசியாக 2013ஆம் ஆண்டு மகாகும்பம் ஏற்பாடு செய்யப்பட்டது. 12 ஆண்டுகளுக்கு பிறகு பிரயாக்ராஜில் மீண்டும் கும்பமேளா நடத்தப்படுகிறது(PTI)
(4 / 9)
பிரயாக்ராஜ் மட்டுமின்றி ஹரித்வார், நாசிக் மற்றும் உஜ்ஜைனியிலும் கும்பமேளா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 12 வருட இடைவெளிக்குப் பிறகு இந்த கும்பமேளா கொண்டாடப்படுகிறது. இதற்காக, நான்கு இடங்கள் ஒவ்வொன்றாக தேர்வு செய்யப்படுகிறது. இந்த நேரத்தில், பக்தர்கள் கங்கை, க்ஷிப்ரா, கோதாவரி மற்றும் சங்கம் (மூன்று நதிகள் சந்திக்கும் இடம்) ஆகியவற்றில் நீராடுகிறார்கள்(AFP)
(5 / 9)
அர்த்த கும்பம்: கும்பமேளா போல் இல்லாமல், அர்த்த கும்பம் ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. பிரயாக்ராஜ் மற்றும் ஹரித்வார் ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே அர்த்த கும்பம் நடைபெறுகிறது. அர்த் என்றால் பாதி. அதனால்தான் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்படுகிறது
(6 / 9)
பூர்ண கும்பமேளா: 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் கும்பமேளா பூர்ண கும்பமேளா என்று அழைக்கப்படுகிறது. பிரயாக்ராஜில் உள்ள திரிமேணி கரையில் மட்டுமே பூர்ண கும்பம் நடைபெறுகிறது. எனவே, ஜனவரி 2025 இல் பிரயாக்ராஜில் நடைபெற இருப்பது முழு கும்பமேளா ஆகும். இது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது(AFP)
(7 / 9)
மகா கும்பம்: 144 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் கும்பமேளா மகா கும்பம் என்று அழைக்கப்படுகிறது. இது பிரயாக்ராஜில் மட்டுமே நடைபெறுகிறது. இந்த கும்பமேளா பல ஆண்டுகளுக்குப் பிறகு வருவதால், இதற்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. 12 பூர்ண கும்பங்களுக்குப் பிறகு, மகா கும்பம் நடைபெறுகிறது
(8 / 9)
திரிவேணி சங்கம நீர் சமுத்திரத்தில் கலக்கும் போது தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே 12 நாட்கள் தொடர்ந்து அமிர்தம் அருந்துவதற்காக போர் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த 12 நாள்களும், மனித குலத்துக்கு 12 வருடங்கள் போல இருப்பதால் சிறப்பம்சாகும். இதனால் கும்பமும் பன்னிரெண்டு வருடங்கள் என்பது தனி சிறப்பு. இவற்றில் நான்கு கும்பங்கள் பூமியிலும், எட்டு சொர்க்கத்திலும் உள்ளன. போரின் போது, சனி, சந்திரன் மற்றும் சூரியன் போன்ற கடவுள்கள் கலசத்தை பாதுகாத்தனர்(PTI)
மற்ற கேலரிக்கள்