'சாம்பாரைவிடுங்க இதை டிரை பண்ணுங்க’: கேரளா ஸ்பெஷல் சர்க்கரவர் புளிசேரி படிப்படியான செய்முறை!
- 'தேங்காய்த் துருவலுடன், பட்டை மிளகாயை நன்றாக அரைத்து, அந்த விழுதை, சர்க்கரை வள்ளிக்கிழங்கில் சேர்த்து ஒரு முறை கொதிக்க விட வேண்டும். இப்போது புளிசேரி தயார் ஆகத் தொடங்கும்’. இப்படி, சர்க்கரை வள்ளிக்கிழங்கை வைத்து சர்க்கரவர் புளிசேரிசெய்வது எப்படி எனப் பார்ப்போம்.-
- 'தேங்காய்த் துருவலுடன், பட்டை மிளகாயை நன்றாக அரைத்து, அந்த விழுதை, சர்க்கரை வள்ளிக்கிழங்கில் சேர்த்து ஒரு முறை கொதிக்க விட வேண்டும். இப்போது புளிசேரி தயார் ஆகத் தொடங்கும்’. இப்படி, சர்க்கரை வள்ளிக்கிழங்கை வைத்து சர்க்கரவர் புளிசேரிசெய்வது எப்படி எனப் பார்ப்போம்.-
(1 / 6)
புளிப்பும் இனிப்பும் கலந்து தனித்துவமான சுவையைக் கொடுக்கும் உணவு தான், சர்க்கரவர் புளிசேரி. இது குறிப்பாக கேரளா உணவுகளில் முக்கிய இடம் பெற்ற ஒரு சைடிஸ் உணவாகும். அதாவது, நம் சாதத்துக்கு ஊற்றிச்சாப்பிடும் சாம்பார் போல, சர்க்கரவர் புளிசேரி கேரள மக்களால் சாப்பிடப்படுகிறது. அத்தகைய பிரபலமான சர்க்கரவர் புளிசேரியை, வெகு எளிய செய்முறையால் வீட்டிலேயே சுவையாக தயாரிக்க முடியும். அது எப்படி என்று பார்ப்போம்.
(2 / 6)
சர்க்கரவர் புளிசேரி செய்யத்தேவையான பொருட்கள்:
சர்க்கரை வள்ளிக்கிழங்கு – 1 கப் (தோல் உரித்து துண்டுகளாக வெட்டியது),
புளி – சிறிய எலுமிச்சை அளவு,
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
தேங்காய் துருவல் – அரை கப்,
பட்டை மிளகாய் – இரண்டு,
(3 / 6)
சர்க்கரவர் புளிசேரி செய்யத்தேவையான பொருட்கள்:
கடுகு – 1 டீஸ்பூன்,
வெந்தயம் – கால் டீஸ்பூன்,
தேங்காய் எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு
(4 / 6)
சர்க்கரவர் புளிசேரி செய்முறை:
முதல் நிலையில், சர்க்கரை வள்ளிக்கிழங்கை எடுத்து நீர் ஊற்றி அலசி, சுத்தம் செய்துகொள்ள வேண்டும். அடுத்ததாக, கொதிக்க வைக்கும் அளவுக்கு தண்ணீரில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, அதில் சர்க்கரை வள்ளிக்கிழங்கைப் போடவேண்டும்.
பின்னர், நன்கு வெந்து மிருதுவாகும் வரை சமைக்க வேண்டும். அதற்குள் புளியை தண்ணீரில் ஊறவைத்து புளித்தாரத்தை தயாரித்துவைத்துக்கொள்ள வேண்டும்.
பின்பு, புளித்தாரத்தைக் கொதிக்க வைத்து அதில் முன்பே தயார்செய்து வைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கினை சேர்க்கவும். பின்னர், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, சற்று சுருங்கும் வரை சமைக்கவும்.
(5 / 6)
மேலும், தேங்காய்த் துருவலுடன், பட்டை மிளகாயை நன்றாக அரைத்து, அந்த விழுதை, சர்க்கரை வள்ளிக்கிழங்கில் சேர்த்து ஒரு முறை கொதிக்க விட வேண்டும். இப்போது புளிசேரி தயார் ஆகத் தொடங்கும்.
அதன்பின்னர், தாளிக்க ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து புளிசேரியில் சேர்க்கவும்.
(6 / 6)
இதோ, இனிப்பு, புளிப்பு, சிறு காரம் கலந்து ஆனந்தமாகச் சாப்பிடும்படியான, சர்க்கரவர் புளிசேரி தயார். இதனை சாதம், சாம்பார் போன்றவற்றுடன் கலந்து சாப்பிட்டால், மிகவும் அருமையாக இருக்கும்.
தமிழ்நாடு ஸ்டைலில் சாம்பார் மற்றும் பிற குழம்புகள் ஊற்றிச் சாப்பிடும் நபர்களுக்கு, இந்த கேரள மக்கள் ருசித்து உண்ணும் சர்க்கரவர் புளிசேரியை உண்பது ஒரு தனி ருசியாக இருக்கும். முடிந்தால் முயற்சித்துப் பாருங்கள்.
மற்ற கேலரிக்கள்