' நான் என்ன தப்பும் பண்ணல.. ஆனாலும் எனக்கு 6 மாசம் எதுவும் பெரிசா நடக்கல..’ - கீர்த்தி சுரேஷ் ஓப்பன் டாக்!
‘மகாநதி திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்து விட்டது. எல்லோரும் என்னை பாராட்டினார்கள். ஆனால், அதன் பின்னர் ஒரு 6 மாத காலம் எனக்கு பெரிதாக எந்த விஷயமும் நடக்கவில்லை. - கீர்த்தி சுரேஷ்!
(1 / 7)
மகாநதி திரைப்படத்தில் நடித்த பின்னர் தன் வாழ்வில் நடந்த கசப்பான சம்பவம் குறித்து கீர்த்தி சுரேஷ் JFW Binge யூடியூப் சேனலுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் பேசி இருந்தார். அந்த பேட்டி இங்கே!
(2 / 7)
6மாத காலம் எதுவும் நடக்கவில்லைஅவர் பேசும் போது, ‘மகாநதி திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்து விட்டது. எல்லோரும் என்னை பாராட்டினார்கள். ஆனால், அதன் பின்னர் ஒரு 6 மாத காலம் எனக்கு பெரிதாக எந்த விஷயமும் நடக்கவில்லை.அந்த சமயத்தில் நான் ஒரு ஐந்து படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். அக்னதவாசி, தானா சேர்ந்த கூட்டம் சாமி 2 மகாநதி சண்டக்கோழி 2... இவைகள் முடிந்த பிறகு எனக்கு ஒரு பிரேக் கிடைத்தது. அந்த பிரேக் உண்மையில் எனக்கு தேவையும் பட்டது.
(3 / 7)
பணத்தை நான் சரியாக கையாள்பவள் இல்லைநான் பணத்தை நான் மிகச் சரியாக கையாள்பவள் அல்ல; அந்த சமயத்தில் நிறைய பேருக்கு பணரீதியாக உதவி செய்து இருந்தேன். ஒரு கட்டத்தில் தான் எனக்கு தெரிந்தது; அந்த பணம் எனக்கும் தேவை என்று. மகாநதி திரைப்படம் செய்ததால் நிறைய நல்ல விஷயங்கள் நடந்தாலும், அதன் பின்னர் இயக்குநர்கள் கமர்சியல் படங்களில் என்னை நடிக்க வைக்க தயங்கினார்கள்;
(4 / 7)
இன்னும் சிலர் நான் நடித்தாலே, அதில் எனக்கு அதிக முக்கியத்துவம் இருக்க வேண்டுமே என்பதால் என் அருகிலேயே வராமல் இருந்தனர். எனக்கு இந்த பிரச்சினை தெரிந்த உடன் ஒரு வாரத்தில் அதனை சரி செய்ய முயன்றேன்;
(5 / 7)
ஜனவரி மாதத்தில் மரைக்காயர் படத்தில் நான் கமிட்டானேன். நமக்கு ஏன் இப்படி நடக்கிறது என்று நான் கேட்டது கிடையாது;அவர்கள் என்னைப் பற்றி அப்படி நினைக்கிறார்கள் அவ்வளவுதான்;
(6 / 7)
நான் மிகவும் சோகமாக இருக்கும் பொழுது, நன்றாக சாப்பிடுவேன். காரை எடுத்துக் கொண்டு வெளியே செல்வேன். முக்கியமாக என்னுடைய நண்பர்களோடு பேசுவேன். பொதுவாக மன அழுத்தத்தில் இருக்கும் பொழுது யாருடனும் பேசத் தோன்றாது; ஆனால் நான் அப்படியே எதிர்மாறானவள்;
மற்ற கேலரிக்கள்