உதவி இயக்குநரால் வெடித்த பிரச்சினை… சண்டைக்கு நின்ற பெருங்கூட்டம்.. கடைசி நேரத்தில் காப்பாற்றப்பட்ட விஜய்!
தாணு சார் நம்மையெல்லாம் பார்த்துக் கொள்வதற்கு அவருடைய பையனை அனுப்பி வைத்திருக்கிறார். அவருடைய பையனை எந்தவித பயமும் இல்லாமல் அவர் அனுப்பி வைத்ததற்கான காரணம் விஜய் ஆகிய நான். அப்படி இருக்கும் பொழுது அவரை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டியது நம்முடைய கடமை.
(1 / 6)
உதவி இயக்குநரால் வெடித்த பிரச்சினை… சண்டைக்கு நின்ற பெருங்கூட்டம்.. கடைசி நேரத்தில் காப்பாற்றப்பட்ட விஜய்!
(2 / 6)
பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணுவின் மகன் பரந்தாமன் தெறி படத்தின் போது நடந்த மறக்க முடியாத சம்பவம் குறித்து பேசி இருக்கிறார்.
இது குறித்து பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு அவர் பேசும் போது, ‘தயாரிப்பு சார்ந்த பணிகளில் பிரச்சினைகள் ஏற்படும் பொழுது, அதனுடைய அழுத்தத்தை நான் அப்பாவிடம் கொண்டு செல்ல மாட்டேன். முடிந்தவரை, நானே சமாளிக்க முயற்சி செய்வேன்.
(3 / 6)
தெறி படத்தில் நடந்த சம்பவம்
ஷூட்டிங்ங்கெல்லாம் முடிந்த பிறகு தான் இப்படியெல்லாம் பிரச்சினைகள் நடந்ததா என்று அப்பா கேட்டு இருக்கிறார். அப்படி ஒரு சம்பவம் தெறி திரைப்படத்தில் நடந்தது. தெறி படத்தில் மிகப்பெரிய பாலத்தில் இருந்து விஜய் சார் குதிக்கும் காட்சி உங்களுக்கு ஞாபகம் இருக்கும்;அந்த காட்சியை எடுக்கும் பொழுது, கிட்டத்தட்ட 2000 பேரை நாங்கள் அழைத்திருந்தோம்.
அப்போது செட்டில் இருந்த உதவி இயக்குநர் ஒருவர் குழுவை நோக்கி மைக்கில் ஏதோ தவறாக பேசிவிட்டார்.. அதில் கோபமான அனைவரும்ஒன்று சேர்ந்து சூழ்ந்து கொண்டார்கள். அந்த சமயத்தில் கபாலி படத்திற்கான ஷூட்டிங்கும் சென்று கொண்டிருந்த காரணத்தால், நான் அங்கு சென்று இருந்தேன்.
(4 / 6)
தலைவலியாக வந்த பிரச்சினை
இந்த நிலையில் எனக்கு போன் வந்தது பிரச்சனையின் வீரியத்தை விளக்கினார்கள். உடனே நான் எல்லா கலைஞர்களையும் கேரவனுக்கு அனுப்புங்கள் என்று சொல்லிவிட்டேன்.
அதேபோல 1000க்கும் மேற்பட்ட ஜூனியர் நடிகர்களை பஸ்ஸில் ஏற்றி, அதனை பல கிலோமீட்டர் தள்ளி நிற்க வைத்தேன். அவர்கள் எல்லோருக்கும் பாக்கெட் வடிவிலான உணவுப் பொட்டலங்களை கொடுத்தேன். நான் அதன் பின்னர் வந்த பொழுது எல்லோரும் ரிலாக்ஸாக சாப்பிட்டு கொண்டு இருந்தார்கள்.
(5 / 6)
டைரக்டர் சொன்ன பதில்
என்ன செய்வது என்று கேட்ட பொழுது டைரக்டர் முடிந்தளவு எல்லா காட்சிகளையும் எடுத்து விட்டேன் என்று கூறி விட்டார். மிகவும் சந்தோஷம் என்று காவல்துறையை தொடர்பு கொண்டு விஷயத்தை கூறினேன். 4 சைரன் வைத்த வண்டிகளோடு போலீஸ் வந்தார்கள். முதலில் விஜய் சார், பின்னர் கேமரா யூனிட், நடிகைகள் என அனைவரையும் பாதுகாப்பாக அனுப்பினேன்.
அவர்கள் பாதுகாப்பாக செல்லும் வரையில் நாங்கள் அங்கு உதவி கேமராமேன்களையும், ஃபைட் மாஸ்டரையும் வைத்து ஜூனியர் நடிகர்களிடம் வேலை வாங்கி கொண்டிருந்தோம்.
அவர்கள் ரீச் ஆன பின்னர் விஜய் சார் ஒரு அழகான காரியம் செய்தார்; அது என்னவென்றால் விஜய் சாருடன் எப்போதுமே ராஜேந்திரன் என்ற ஒருவர் இருப்பார். அவரை விஜய் சார் பயங்கரமாக திட்டி இருக்கிறார்.
(6 / 6)
எதற்காக என்றால் தாணு சார் நம்மையெல்லாம் பார்த்துக் கொள்வதற்கு அவருடைய பையனை அனுப்பி வைத்திருக்கிறார். அவருடைய பையனை எந்தவித பயமும் இல்லாமல் அவர் அனுப்பி வைத்ததற்கான காரணம் விஜய் ஆகிய நான்.
அப்படி இருக்கும் பொழுது அவரை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டியது நம்முடைய கடமை. நீங்கள் அவரை உடனே சென்று இங்கு அழைத்து வாருங்கள் என்று பயங்கரமாக கோபப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் ராஜேந்திரன் என்னை தொடர்பு கொண்டு, விஜய் சார் திட்டிய விஷ்யத்தை சொல்லி, நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்று கேட்டார். ஆனால், அதற்குள் நான் எல்லா பிரச்சினைகளையும் முடித்து காரில் வந்து கொண்டிருந்தேன். அதன் பின்னர் தான் அவர்கள் சாந்தமானார்கள்.’ என்று பேசினார்.
மற்ற கேலரிக்கள்