இரு கண்கள் போதாது.. ஆந்திராவின் கடப்பா அழகைப் பார்க்க.. சென்னையில் இருந்து ஒரு நாளில் டூர் அடிக்க உகந்த ஊர் கடப்பா!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  இரு கண்கள் போதாது.. ஆந்திராவின் கடப்பா அழகைப் பார்க்க.. சென்னையில் இருந்து ஒரு நாளில் டூர் அடிக்க உகந்த ஊர் கடப்பா!

இரு கண்கள் போதாது.. ஆந்திராவின் கடப்பா அழகைப் பார்க்க.. சென்னையில் இருந்து ஒரு நாளில் டூர் அடிக்க உகந்த ஊர் கடப்பா!

Dec 29, 2024 04:22 PM IST Marimuthu M
Dec 29, 2024 04:22 PM , IST

  • ஆந்திராவின் கடப்பா மாவட்டம் இயற்கை அழகு மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைக் கொண்டுள்ளது. இந்த மாவட்டத்தில் பார்க்க வேண்டிய இடங்கள் சிலவற்றை இப்போது அறிந்து கொள்வோம்.

கண்டிகோட்டா கோட்டை தமிழக எல்லைக்கு அருகில் அமைந்துள்ள ஒரு வரலாற்று கோட்டையாகும். பெண்ணாறு நதிக்கரையில் அமைந்துள்ள இந்த கோட்டை இயற்கை அழகு நிறைந்தது. இந்த கோட்டையை காண நாடு முழுவதிலுமிருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். 

(1 / 6)

கண்டிகோட்டா கோட்டை தமிழக எல்லைக்கு அருகில் அமைந்துள்ள ஒரு வரலாற்று கோட்டையாகும். பெண்ணாறு நதிக்கரையில் அமைந்துள்ள இந்த கோட்டை இயற்கை அழகு நிறைந்தது. இந்த கோட்டையை காண நாடு முழுவதிலுமிருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். 

ஆந்திர மாநிலத்தின், கடப்பா மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான நீர் வீழ்ச்சிகளில் ஒன்று, குஞ்சனா நீர்வீழ்ச்சி. பசுமை நிறைந்த இந்த இடம் இயற்கை ஆர்வலர்களுக்கு உண்மையான சொர்க்கமாகும். அருவியில் இருந்து வரும் குளிர்ந்த நீர் மனதிற்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது.

(2 / 6)

ஆந்திர மாநிலத்தின், கடப்பா மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான நீர் வீழ்ச்சிகளில் ஒன்று, குஞ்சனா நீர்வீழ்ச்சி. பசுமை நிறைந்த இந்த இடம் இயற்கை ஆர்வலர்களுக்கு உண்மையான சொர்க்கமாகும். அருவியில் இருந்து வரும் குளிர்ந்த நீர் மனதிற்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது.

ஆந்திராவின் கடப்பா மாவட்டத்தில் பெரிய மலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ள சோமசீலா அணையின் நீர் பிடிப்புப் பகுதி, படகு சவாரி மற்றும் மீன்பிடித்தலுக்கு ஏற்ற ஒரு அழகிய இடமாகும்.

(3 / 6)

ஆந்திராவின் கடப்பா மாவட்டத்தில் பெரிய மலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ள சோமசீலா அணையின் நீர் பிடிப்புப் பகுதி, படகு சவாரி மற்றும் மீன்பிடித்தலுக்கு ஏற்ற ஒரு அழகிய இடமாகும்.

ஆந்திராவின் கடப்பா மாவட்டத்தில் ஒன்டிமிட்ட கோதண்டராமஸ்வாமி (Sri Vontimitta Kodanda Rama Swamy Temple) கோயில் மிகவும் புகழ்பெற்றது. சோழர்கள் மற்றும் விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்டது.

(4 / 6)

ஆந்திராவின் கடப்பா மாவட்டத்தில் ஒன்டிமிட்ட கோதண்டராமஸ்வாமி (Sri Vontimitta Kodanda Rama Swamy Temple) கோயில் மிகவும் புகழ்பெற்றது. சோழர்கள் மற்றும் விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்டது.

ஆந்திராவின் கடப்பா மாவட்டத்தில் பிரம்மசாகர் நீர்த்தேக்கம் அழகிய நிலப்பரப்புகளால் சூழப்பட்டுள்ளது. இந்த இடம் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் சுற்றுலா செல்ல ஏற்றது.

(5 / 6)

ஆந்திராவின் கடப்பா மாவட்டத்தில் பிரம்மசாகர் நீர்த்தேக்கம் அழகிய நிலப்பரப்புகளால் சூழப்பட்டுள்ளது. இந்த இடம் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் சுற்றுலா செல்ல ஏற்றது.

ஆந்திர மாநிலத்தின், கடப்பா மாவட்டத்தில் குண்டலகோனா பகுதியில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மசுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு கடப்பா மட்டுமல்ல, பிற மாவட்டங்களிலிருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகிறார்கள். 

(6 / 6)

ஆந்திர மாநிலத்தின், கடப்பா மாவட்டத்தில் குண்டலகோனா பகுதியில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மசுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு கடப்பா மட்டுமல்ல, பிற மாவட்டங்களிலிருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகிறார்கள். 

மற்ற கேலரிக்கள்