ஒவ்வொரு மனைவியும் தன் கணவனிடம் இருந்து மறைக்கும் முக்கியமான விஷயங்கள்.. கணவன்மார்கள் அதைப் புரிஞ்சுகிட்டாலேபோதும்..
- ஒவ்வொரு மனைவியும் தன் கணவனிடம் இருந்து மறைக்கும் முக்கியமான விஷயங்கள்.. கணவன்மார்கள் அதைப் புரிஞ்சுகிட்டாலேபோதும்.. பிரச்னைகளுக்கு வாய்ப்பே இல்லாமல் இருக்கும். அவை குறித்துப் பார்ப்போம்.
- ஒவ்வொரு மனைவியும் தன் கணவனிடம் இருந்து மறைக்கும் முக்கியமான விஷயங்கள்.. கணவன்மார்கள் அதைப் புரிஞ்சுகிட்டாலேபோதும்.. பிரச்னைகளுக்கு வாய்ப்பே இல்லாமல் இருக்கும். அவை குறித்துப் பார்ப்போம்.
(1 / 8)
இவ்வுலகின் எல்லா பந்தங்களையும் விட கணவன் மனைவி பந்தம் சிறப்பு வாய்ந்தது. கல்யாணம் ஆன உடனே கணவன் மனைவி இருவரல்ல ஒருவரே என்ற உனர்வு இருவருக்கும் ஏற்படுவது முக்கியம். அவர்களின் உறவு அன்பு மற்றும் நம்பிக்கையின் அடித்தளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்க வேண்டும்.
அவர்களின் உறவில் பொய்க்கும் ஏமாற்றத்திற்கும் இடமிருக்கக் கூடாது. இருவரும் தங்கள் விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். ரகசியங்கள் இல்லாமல் வாழப்பழகிக் கொள்ள வேண்டும். ஆனால், கணவனும் மனைவியும் தங்கள் துணையிடம் சில விஷயங்களை மறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
(2 / 8)
மனைவிகள் கணவருடன் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டாலும், பகிர்ந்து கொள்ளாத விஷயங்கள் பல இருப்பதாகத் தெரிகிறது. இதற்குப் பின்னால் சில நியாயமான காரணங்கள் உள்ளன. எனவே, மனைவிகள் கணவரிடம் கூட பகிர்ந்துகொள்ள முடியாத இந்த விஷயங்களைப் பற்றி அறிந்துகொள்வோம்.
(3 / 8)
சில பெண்கள் தங்கள் கணவன் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்குத் தெரியாமல் சில விஷயங்களை மறைப்பதற்குக் காரணம், வீட்டில் பிரச்னைகள் வரக்கூடாது என்பதற்காகத்தான். எனவே, மனைவிகள் கணவரிடம் கூட பகிர்ந்துகொள்ள முடியாத இந்த விஷயங்களைப் பற்றி அறிந்துகொள்வோம்.
(4 / 8)
இல்லத்தரசிகள் சிறு சேமிப்பு பற்றி சில பணத்தை மறைத்து விடுவார்கள். இந்த மாதச் சேமிப்பைப் பற்றி அவள் கணவனிடம் சொல்வதில்லை. எதிர்காலத்தில் எந்த பிரச்னையும் ஏற்படாமல் இருக்க இந்தப் பணம் பயன்படுத்தப்படும் என்று அவர்கள் நம்புகிறார்கள். பெண்கள் தங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற இப்படி சேமிக்கிறார்கள். இந்த விஷயங்கள் பற்றி கணவரிடம் சொல்வதில்லை
(5 / 8)
பாலியல் ஆசைகள்: பெண்கள் தங்கள் துணையுடன் தங்கள் பாலியல் விருப்பங்களைப் பற்றி வெளிப்படையாகப் பேசவதில்லை. ஆண்களைப் போலவே, பெண்களுக்கும் பாலியல் கற்பனைகள் உள்ளன, ஆனால், அவர்கள் அதைப் பற்றி தங்கள் கணவருடன் பேசுவதை மறைக்கிறார்கள். இப்படிச் சொன்னால் கணவன் என்ன சொல்வான் என்று நினைக்கிறார்கள்.
(6 / 8)
திருமணத்திற்கு முந்தைய காதல்கள்: திருமணத்திற்கு முந்தைய உரையாடலில் கணவன்-மனைவி இருவரும் தங்கள் கடந்த காலத்தைப் பற்றி வெளிப்படையாகப் பேசுகிறார்கள். ஆனால், சில நேரங்களில் பெண்கள் தங்கள் பழைய காதல்களைப் பற்றி பகிர்ந்து கொள்ளமாட்டார்கள். இதுபோன்ற விஷயங்கள் தெரிந்தால், கணவனால் தனக்குப் பிரச்னைகள் வந்துவிடுமோ என்று பயப்படுகிறார்கள். அதனாலேயே கணவன் தன் பழைய உறவுகளை மனைவியிடம் சொன்னாலும், மனைவிமார்கள், கணவனிடம் தனது பழைய காதலைப் பற்றி சொல்வதில்லை. மேலும், தன் கணவன் தன்னைப் பற்றி எதிர்மறையாகச் சிந்திப்பான் என்று எண்ணி மனைவிமார்கள் அதைப் பற்றிச் சொல்வதில்லை.
மற்ற கேலரிக்கள்