அனல் பறக்கும் கோபத்தில் சனி.. தலை தப்பித்தால் போதும்.. அமைதியாக இருந்தால் நல்லது..!
- Lord Sani: சனி பகவானின் உக்கிர பார்வை சில ராசிகள் மீது விழுகின்றது. தொடர்ந்து பத்து மாத காலம் சனி பகவானின் உக்கர பார்வை நீடிக்கும். இதனால் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்
- Lord Sani: சனி பகவானின் உக்கிர பார்வை சில ராசிகள் மீது விழுகின்றது. தொடர்ந்து பத்து மாத காலம் சனி பகவானின் உக்கர பார்வை நீடிக்கும். இதனால் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்
(1 / 7)
நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனி பகவான். கர்மநாயகனாக விளங்கக்கூடிய இவரை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசியிற்கு செல்ல இவர் இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். நவகிரகங்களில் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார்.
(2 / 7)
சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். இந்த ஆண்டு முழுவதும் கும்ப ராசியில் பயணம் செய்வார்கள் இது இவருடைய சொந்த ராசியாகும். 30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசியில் குடியேறியுள்ளார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை சனி பகவான் மாற்றுகிறார் சனி பகவானின் ஒவ்வொரு அசைவும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
(3 / 7)
அந்த வகையில் சனி பகவானின் உக்கிர பார்வை சில ராசிகள் மீது விழுகின்றது. தொடர்ந்து பத்து மாத காலம் சனி பகவானின் உக்கர பார்வை நீடிக்கும். இதனால் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(4 / 7)
கடக ராசி: சனிபகவானின் உக்கிர பார்வை உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்களை ஏற்படுத்தும். காரியத்தில் தடைகளை உண்டாக்கும். வேலை செய்யும் இடத்தில் சிக்கல்களை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
(5 / 7)
விருச்சிக ராசி: சனி பகவானின் உக்கிர பார்வை உங்களுக்கு வாழ்க்கையில் பல்வேறு விதமான சிக்கல்களை ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். சுற்றி உள்ளவர்களால் உங்களுக்கு தொல்லைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
(6 / 7)
மகர ராசி: உங்களுக்கு ஏழரை சனியின் கடைசி கட்டம் நடந்து கொண்டிருக்கின்றது. அதுமட்டுமில்லாமல் சனிபகவானின் உக்கிர பார்வை உங்கள் மீது விழுகின்றது. இதனால் மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கணவன் மனைவி இடையே சிக்கல்கள் ஏற்படும்.
(7 / 7)
கும்ப ராசி: உங்களுக்கு ஏழரை சனிகள் இரண்டாவது கட்டம் நடந்து கொண்டிருக்கின்றது. முதல் வீட்டில் சனி பகவான் பயணம் செய்து கொண்டிருக்கின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. சனி பகவானின் கோபப்பார்வை உங்கள் மீது விழுகின்ற காரணத்தினால் சிக்கல்கள் உங்களைத் தேடி வரும்.
மற்ற கேலரிக்கள்