குருவும் சுக்கிரனும் சேர்ந்துவிட்டனர்.. திருமண பாக்கியம் பெறும் ராசிகள்.. பணமழை கொட்டும்
- Guru and Venus: 12 ஆண்டுகளுக்குப் பிறகு குரு பகவான் பயணம் செய்து வரும் மேஷ ராசியில் சுக்கிரன் இணைகின்றார். இந்த நிகழ்வு வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி அன்று நடக்க உள்ளது.
- Guru and Venus: 12 ஆண்டுகளுக்குப் பிறகு குரு பகவான் பயணம் செய்து வரும் மேஷ ராசியில் சுக்கிரன் இணைகின்றார். இந்த நிகழ்வு வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி அன்று நடக்க உள்ளது.
(1 / 6)
நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கான அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
(2 / 6)
தற்போது குருபகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். நவக்கிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான். இவர் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர்.
(3 / 6)
12 ஆண்டுகளுக்குப் பிறகு குரு பகவான் பயணம் செய்து வரும் மேஷ ராசியில் சுக்கிரன் இணைகின்றார். இந்த நிகழ்வு வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி அன்று நடக்க உள்ளது. சுக்கிரன் மற்றும் குரு இவர்கள் இருவரும் இணைவதனால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
மேஷ ராசி: குருவும் சுக்கிரனும் சேர்ந்து உங்களுக்கு சுப பலன்களை கொடுக்கப் போகின்றனர். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கூட்டுத்தொழில் முயற்சிகள் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
(5 / 6)
ரிஷப ராசி: குரு சுக்கிரன் சேர்ந்து உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றனர். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எதிர்பாராத நேரத்தில் லாபம் கிடைக்கும். சேமிப்பு அதிகமாகும்.
(6 / 6)
கடக ராசி: குரு மற்றும் சுக்கிரன் இருவரும் சேர்ந்து உங்களுக்கு நன்மைகளை கொடுக்கப்போகின்றனர். வாழ்க்கையில் வசதிகள் மற்றும் ஆடம்பரங்கள் அதிகரிக்கப் போகின்றது கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே சமூகமான நெருக்கம் ஏற்படும். வருமானத்தில் எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களை தேடிவரும்.
மற்ற கேலரிக்கள்