சனியை விரட்டி பிடித்த சூரியன்.. 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்
- Surya Peyarchi: சூரியனும் சனியும் சேர்ந்து நல்ல பலன்களை கொடுக்கப் போகும் ராசிகளை இங்கே காண்போம்.
- Surya Peyarchi: சூரியனும் சனியும் சேர்ந்து நல்ல பலன்களை கொடுக்கப் போகும் ராசிகளை இங்கே காண்போம்.
(1 / 6)
நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகிறார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றத்தின் போது தமிழ் மாதம் பிறக்கின்றது. அந்த வகையில் கடந்த ஜனவரி 15ஆம் தேதி அன்று அதாவது தை மாத முதல் நாள் மகர ராசிக்குள் நுழைந்தார். இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
(2 / 6)
நீதிமானாக விளங்கக்கூடிய சனி பகவான் தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்ய உள்ளார். வரக்கூடிய பிப்ரவரி மாத தொடக்கத்தில் சூரிய பகவான் சனிபகவானின் சொந்த ராசியான கும்ப ராசிக்குள் நுழைகிறார்.
(3 / 6)
இந்நிலையில் சனி பகவான் மற்றும் சூரிய பகவான் இருவரும் ஒன்று சேர போகின்றனர். இதன் தாக்கம் கட்டாயம் 12 ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் குறிப்பிட்ட சில ராசிகள் யோகத்தைப் பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்
(4 / 6)
கும்ப ராசி: உங்கள் ராசியில் சூரிய பகவான் பயணம் செய்ய உள்ள காரணத்தினால் உங்களுக்கு அதீத பலன்களை கிடைக்கப் போகின்றது. உங்களுடைய ஜாதகத்தின் அதிபதி வீட்டிற்கு இவர் வருகின்றார். ஆளுமை திறன் அதிகரிக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியை சிறந்து விளங்குவார்கள். ஆன்மிக பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். உங்கள் ராசியின் ஏழாவது வீட்டின் அதிபதியாக சூரிய பகவான் வழங்கி வருகிறார்.
(5 / 6)
தனுசு ராசி: சூரிய பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைய உள்ளது. சூரிய பகவான் உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டை பார்க்க போகின்றார். உங்களுக்கு மன தைரியம் மற்றும் நம்பிக்கை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்காத வாய்ப்பு உள்ளது. பூர்விக சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். உடன் பிறந்தவர்கள் மகிழ்ச்சி உண்டாகும்.
(6 / 6)
சிம்ம ராசி: உங்கள் ராசியின் அதிபதியாக சூரிய பகவான் விளங்கி வருகிறார். இப்போது அவருடைய இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. உங்கள் ராசியில் இருந்து ஏழாவது வீட்டில் சஞ்சாரம் செய்ய போகின்றார். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணைவியார் முன்னேற்றம் உண்டாகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
மற்ற கேலரிக்கள்