காதல் சடுகுடு.. நீராட்டும் நேரத்தில் என் அன்னையாகின்றாய்.. மணிரத்னம் - சுஹாசினி லவ் ஸ்டோரி
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  காதல் சடுகுடு.. நீராட்டும் நேரத்தில் என் அன்னையாகின்றாய்.. மணிரத்னம் - சுஹாசினி லவ் ஸ்டோரி

காதல் சடுகுடு.. நீராட்டும் நேரத்தில் என் அன்னையாகின்றாய்.. மணிரத்னம் - சுஹாசினி லவ் ஸ்டோரி

Jan 02, 2025 11:57 AM IST Marimuthu M
Jan 02, 2025 11:57 AM , IST

 காதல் கதைகளை அழகாகவும், இதயத்தை தொடும் வகையிலும் வெள்ளித்திரையில் நகர்த்துவதில் நிபுணத்துவம் பெற்ற இயக்குநர் மணிரத்னம். மணிரத்னத்தின் நிஜ வாழ்க்கை காதல் மற்றும் சுஹாசினியுடனான திருமணக் கதையும் அவரது படங்களைப் போலவே அழகாக இருந்தது. அவற்றை அறிவோம்.

மணிரத்னம் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு வணிக ஆலோசகராக பணியாற்றினார். மணிரத்னம் சினிமாவில் இயக்குநராகும் யோசனையுடன் கமல்ஹாசனை சந்திக்க அடிக்கடி அவரது வீட்டிற்குச் செல்வார். அப்போதுதான் சுஹாசினியை முதன்முதலில் பார்த்தார். 

(1 / 6)

மணிரத்னம் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு வணிக ஆலோசகராக பணியாற்றினார். மணிரத்னம் சினிமாவில் இயக்குநராகும் யோசனையுடன் கமல்ஹாசனை சந்திக்க அடிக்கடி அவரது வீட்டிற்குச் செல்வார். அப்போதுதான் சுஹாசினியை முதன்முதலில் பார்த்தார். 

மணிரத்னம் இயக்கிய முதல் படமான ’பல்லவி அனு பல்லவி’-யில் சுஹாசினியை இரண்டாவது கதாநாயகியாக ஆக்க மணிரத்னம் கதை சொன்னார். ஆனால், சுஹாசினி இரண்டாவது நாயகியாக நடிக்க மறுத்துவிட்டார். 

(2 / 6)

மணிரத்னம் இயக்கிய முதல் படமான ’பல்லவி அனு பல்லவி’-யில் சுஹாசினியை இரண்டாவது கதாநாயகியாக ஆக்க மணிரத்னம் கதை சொன்னார். ஆனால், சுஹாசினி இரண்டாவது நாயகியாக நடிக்க மறுத்துவிட்டார். 

அப்போது மணிரத்னத்தின் வீட்டில் திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் நடந்தன. சுஹாசினியின் தந்தை சாருஹாசன் மணிரத்னத்தை தனது மகள் சுஹாசினிக்குத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். அப்போது மணிரத்னத்திடம் இது குறித்து கேட்கப்பட்டபோது இரண்டு நிமிடத்தில் சம்மதம் சொன்னாராம். மணிரத்னத்தை திருமணம் செய்து கொள்வது குறித்து பேசிய சுஹாசினி, ஒரு படத்தின் படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றபோது இந்த தகவல் தனக்கு வந்தது என்று கூறினார். 

(3 / 6)

அப்போது மணிரத்னத்தின் வீட்டில் திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் நடந்தன. சுஹாசினியின் தந்தை சாருஹாசன் மணிரத்னத்தை தனது மகள் சுஹாசினிக்குத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். அப்போது மணிரத்னத்திடம் இது குறித்து கேட்கப்பட்டபோது இரண்டு நிமிடத்தில் சம்மதம் சொன்னாராம். மணிரத்னத்தை திருமணம் செய்து கொள்வது குறித்து பேசிய சுஹாசினி, ஒரு படத்தின் படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றபோது இந்த தகவல் தனக்கு வந்தது என்று கூறினார். 

சுஹாசினியும் மணிரத்னமும் 1988ல் திருமணம் செய்து கொண்டனர். சுஹாசினி, மணிரத்னம் இயக்கிய பல படங்களுக்கு வசனகர்த்தா, டப்பிங் கலைஞர் மற்றும் திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றினார். இத்தம்பதிகளுக்கு நந்தன் என்ற மகன் உள்ளார். 

(4 / 6)

சுஹாசினியும் மணிரத்னமும் 1988ல் திருமணம் செய்து கொண்டனர். சுஹாசினி, மணிரத்னம் இயக்கிய பல படங்களுக்கு வசனகர்த்தா, டப்பிங் கலைஞர் மற்றும் திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றினார். இத்தம்பதிகளுக்கு நந்தன் என்ற மகன் உள்ளார். 

கேமராமேனாகும் லட்சியத்துடன் திரையுலகில் நுழைந்த சுஹாசினி, மகேந்திரனின் நெஞ்சத்தைக் கிள்ளாதே படத்தின்மூலம் தமிழ் சினிமாவில்  ஹீரோயினானார். 

(5 / 6)

கேமராமேனாகும் லட்சியத்துடன் திரையுலகில் நுழைந்த சுஹாசினி, மகேந்திரனின் நெஞ்சத்தைக் கிள்ளாதே படத்தின்மூலம் தமிழ் சினிமாவில்  ஹீரோயினானார். 

அலை பாயுதே படத்தில் காட்டப்பட்ட தனது உறவினர் வீட்டில் தான் திருமணம் நடந்தது எனவும், அப்போது அந்த வீட்டில் கட்டுமானப்பணிகள் முடிவடையவில்லை எனவும், திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின், மணிரத்னம் தனக்கு எண்ணற்ற புடவைகளைப் பரிசாக அளித்தார், என்றும் சுஹாசினி ஒரு பேட்டியில் கூறியிருந்தார். 

(6 / 6)

அலை பாயுதே படத்தில் காட்டப்பட்ட தனது உறவினர் வீட்டில் தான் திருமணம் நடந்தது எனவும், அப்போது அந்த வீட்டில் கட்டுமானப்பணிகள் முடிவடையவில்லை எனவும், திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின், மணிரத்னம் தனக்கு எண்ணற்ற புடவைகளைப் பரிசாக அளித்தார், என்றும் சுஹாசினி ஒரு பேட்டியில் கூறியிருந்தார். 

மற்ற கேலரிக்கள்