குழந்தைகளிடம் இந்த விஷயங்களை மட்டும் செய்துவிடாதீர்கள். அது அவர்களுக்கு செய்யும் துரோகத்தைப் போலாகும்!
குழந்தைகளிடம் இந்த விஷயங்களை மட்டும் செய்துவிடாதீர்கள். அது அவர்களுக்கு செய்யும் துரோகத்தைப் போலாகும்!
(1 / 8)
எது குழந்தைகளுக்கு நீங்கள் செய்யும் துரோகம் என்று பாருங்கள். குழந்தைகள் அவர்களின் உணர்வுகளையும், அவர்கள் பாதிக்கப்படுவதையும் பெரியவர்களைப் போல் வெளிப்படுத்த மாட்டார்கள். ஆனால் அவர்கள் கடுமையாக அதற்காக வருத்தப்படுவார்கள். இந்த அன்றாட செயல்பாடுகள், உங்களுக்கு சாதாரணமாகத் தெரியலாம். ஆனால், குழந்தைகளுக்கு அது கடினமாக இருக்கும். அது உங்களுக்கு வழக்கமாகும். ஆனால் அவர்களுக்கு அது சிரமமாகும். அவர்கள் அமைதியாக அதை வெளிப்படுத்துவார்கள். இங்கு கொடுக்கப்பட்டுள்ள சில விஷயங்களைச் செய்தால், அது அவர்களின் வாழ்க்கையில் நீண்ட கால பாதிப்புக்களை ஏற்படுத்தும். அவை என்னவென்று பாருங்கள்.
(2 / 8)
அவர்கள் பேசும்போது நீங்கள் ஃபோனை பார்த்துக்கொண்டிருப்பது
இதை நீங்கள் செய்யும்போது, அவர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பில்லை என்ற உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்தும். அவர்களின் வார்த்தைகளுக்கு முழு கவனம் கிடைக்கவில்லை என்பதை உணர்த்தும். நீங்கள் அவர்கள் மீது கவனம் செலுத்தவில்லையென்றால், அது அவர்களிடம், அவர்களை இரண்டாம்பட்சமாக கருதுவதைப்போலாகும். அது சில நொடிகள் என்றாலும், அது தவறுதான்.
(3 / 8)
அவர்களின் உணர்வுகளை டிராமா என்று கூறும்போது - குழந்தைகளின் உணர்வுகளை அது சுருக்கிவிடும். இது அவர்களின் உணர்வுகளை தவறு என்றும் அல்லது அதிகப்படியானது என்றும் கூறுவதைப்போலாகும். அவர்களின் உணர்வுகளை அடுத்த முறை வெளிப்படுத்தாமல் அவர்கள் பூட்டி வைத்துக்கொள்ளச் செய்துவிடும்.
(4 / 8)
சிறிய வாக்குறுதிகளைக் கூட தவிர்த்துவிடுவது - நீங்கள் ஒரு சிறிய வாக்குறுதியை செய்யாமல் விட்டுவிடும்போது, அதாவது ஒரு படுக்கை நேர கதை அல்லது படம் செல்லவதை தவிர்த்துவிட்டால் அதை நீங்கள் மறந்து விடுவீர்கள், ஆனால் அவர்கள் நினைவில் வைத்துக்கொள்வார்கள். இது உங்களுக்கு சிறிய விஷயமாக இருக்கலாம். இது அவர்களுக்கு நம்பிக்கையிழப்பை ஏற்படுத்தும். அதை அவர்கள் அமைதியாக மனதில் வைத்துக்கொள்வார்கள். அதை அவர்கள் நம்பவும் செய்வார்கள்.
(5 / 8)
கேட்காமல் அவர்களின் போராட்டங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வது - அவர்களின் தனிப்பட்ட பிரச்னைகள் மற்றும் கவலைகளை நீங்கள் அவர்களுக்கு தெரியாமல் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளக்கூடாது. இதை நீங்கள் உங்கள் உரையாடலில் கொண்டு வரும்போது, அது அவர்களின் தன்னம்பிக்கையை இழக்கச் செய்யும்.
(6 / 8)
ஒரு தவறுக்குப் பின்னர் மன்னிப்பு கேட்க மறுப்பது - குழந்தைகள் நல்ல நடத்தைகளை மற்றவர்களைப் பார்த்து கற்றுக்கொள்கிறார்கள். அவர்களிடம் நீங்கள் ஆயிரம் அறிவுரைகளை கூறினாலும், அவர்கள் மற்றவர்களை பார்த்துதான் பல விஷயங்களைக் கற்றுக்கொள்கிறார்கள். நீங்கள் தவறுகளுக்கு மன்னிப்பு கேட்கவில்லையென்றால், அவர்களின் காயங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையென்று பொருளாகும்.
(7 / 8)
அவர்களின் நியாயத்தை அவர்கள் கூறும்போது - கோபமடைவது
கோவமும், நேர்மையும் சந்தித்துக்கொள்ளும்போது, நீங்கள் அதைத் தடுத்தால் அவர்கள், உண்மையை பேசினால் பிரச்னை உண்டாகும் குழந்தைகள் நம்பத்துவங்கினால், அப்போது அவர்கள் அமைதியை கவசமாக அணிந்துகொள்கிறார்கள்.
(8 / 8)
அவர்கள் தவறும்போது அமைதி காப்பது - இந்த சூழலில், அவர்களுக்காக யாரும் இருக்க மாட்டார்கள் என்று அவர்கள் கருதும்போது, அவர்களிடம் யாராவது வம்பிழுக்கும்போது, நீங்கள் அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், அது அவர்களின் குரல் வீட்டிலும் கேட்கப்படுவதில்லை, வெளியேயும் கேட்கப்படுவதில்லை என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்.
மற்ற கேலரிக்கள்