Savukku Shankar: சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது கோவை நீதிமன்றம்..எந்த வழக்கு தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Savukku Shankar: சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது கோவை நீதிமன்றம்..எந்த வழக்கு தெரியுமா?

Savukku Shankar: சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது கோவை நீதிமன்றம்..எந்த வழக்கு தெரியுமா?

Published Jul 26, 2024 07:01 PM IST Karthikeyan S
Published Jul 26, 2024 07:01 PM IST

  • யூடியூபர் சவுக்கு சங்கர் பெண் காவலர்கள் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் குறித்து தனியார் யூடியூப் சேனலுக்கு அவதூறாக பேட்டியளித்தாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக கோயம்புத்தூர் மாநகர சைபர் க்ரைம் போலீஸார் யூடியூபர் சவுக்கு சங்கர் மற்றும் அந்த பேட்டியை வெளியிட்ட ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோரை கடந்த மே மாதம் 14 ஆம் தேதி கைது செய்தனர். 

(1 / 5)

இது தொடர்பாக கோயம்புத்தூர் மாநகர சைபர் க்ரைம் போலீஸார் யூடியூபர் சவுக்கு சங்கர் மற்றும் அந்த பேட்டியை வெளியிட்ட ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோரை கடந்த மே மாதம் 14 ஆம் தேதி கைது செய்தனர். 

கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தங்களை ஜாமீனில் விடுவிக்கக் கோரி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர், ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் தனித்தனியாக மனுத்தாக்கல் செய்தனர்.

(2 / 5)

கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தங்களை ஜாமீனில் விடுவிக்கக் கோரி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர், ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் தனித்தனியாக மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை கோவை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 4-ல் நடைபெற்று வந்த நிலையில், சவுக்கு சங்கர் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு மீது இன்று (ஜூலை 26) விசாரணை நடைபெற்றது. 

(3 / 5)

இந்த வழக்கு விசாரணை கோவை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 4-ல் நடைபெற்று வந்த நிலையில், சவுக்கு சங்கர் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு மீது இன்று (ஜூலை 26) விசாரணை நடைபெற்றது. 

மனுவை விசாரித்த நீதிபதி சரவணபாபு, தினமும் கோவை மாநகர சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் காலை 10 மணிக்கு நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

(4 / 5)

மனுவை விசாரித்த நீதிபதி சரவணபாபு, தினமும் கோவை மாநகர சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் காலை 10 மணிக்கு நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

முன்னதாக, சவுக்கு சங்கரின் தாய் கமலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரணை செய்த உச்சநீதிமன்றம், சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தது. மேலும் பிற வழக்குகள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

(5 / 5)

முன்னதாக, சவுக்கு சங்கரின் தாய் கமலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரணை செய்த உச்சநீதிமன்றம், சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தது. மேலும் பிற வழக்குகள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற கேலரிக்கள்