Urvashi Love Story: ‘அவராலதான் குடி பழக்கமே வந்துச்சு’.. கரை சேரா மலையாள மோகம்.. ஊர்வசி காதல் முறிந்த கதை!
Urvashi Love story: சிறிய காலத்திலேயே ஊர்வசிக்கும், ஜெயந்திற்க்கும் இடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டது. அது ஒரு கட்டத்தில் முற்றி, விவாகரத்து செய்துவிடலாம் என்ற புள்ளிக்கு சென்று விட்டது - ஊர்வசி காதல் கதை!
(1 / 5)
ஊர்வசியின் முதல் காதல் முறிந்த கதை குறித்து ஆகாயம் சினிமாஸ் சேனலுக்கு செய்யாறு பாலு பேசி இருக்கிறார். அவர் பேசும் போது, “ஊர்வசி முதலாவதாக நடிகர் மனோஜ் கே. ஜெயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் இருவரும் கல்யாணம் செய்து கொண்டது, அப்போது திரைத்துறையில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
பொதுவாக சினிமாத்துறையில் திருமணம் செய்து கொண்டால் மார்க்கெட் சரியும். முன்பு போல பட வாய்ப்புகள் வராது.
(2 / 5)
அதுவும் அவர் சிறிது காலம் ஊர்வசி, திரைத்துறையை விட்டு சென்றதற்கு ஒரு முக்கியமான காரணமாகும்.
சிறிய காலத்திலேயே ஊர்வசிக்கும், ஜெயந்திற்க்கும் இடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டது. அது ஒரு கட்டத்தில் முற்றி, விவாகரத்து செய்துவிடலாம் என்ற புள்ளிக்கு சென்று விட்டது. அந்த சமயத்தில் ஊர்வசி பேட்டி ஒன்றை கொடுத்த ஞாபகம் இருக்கிறது.
(3 / 5)
அந்த பேட்டியில் முதல் கணவரால்தான் மதுவுக்கு அடிமையாகி விட்டேன் என்று வெளிப்படையாக பேசி இருந்தார். மேலும், அதிலிருந்து மீள முடியாமல் நெடுங்காலமாக கஷ்டப்பட்டு கொண்டு இருந்ததாகவும், பின்னாளில் கடுமையான முயற்சிகளை எடுத்து, அதில் இருந்து வெளியே வந்ததாகவும் அவர் பதிவு செய்திருந்தார்.
(4 / 5)
அந்த சமயத்தில் அவரை சுற்றி இருந்த நல்ல ஆத்மாக்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் அவருக்கு பக்கபலமாக இருந்திருக்கிறார்கள்.
(5 / 5)
குறிப்பாக, ஒரு குறிப்பிட்ட நடிகை, இவர் மதுவுக்கு அடிமையாக இருந்த பொழுது, அவர் நடித்த படங்களின் தொகுப்பை அவருக்கு போட்டு காண்பித்து, இந்த மாதிரியான நடிப்பை, யாராவது வெளிப்படுத்த முடியுமா என்று கேட்டதோடு, இப்போது நீ இருக்கும் கோலம் என்ன என்று கேட்டாள்.
அந்த நாளில் தான் மதுவை விட்டேன். தற்போது நான் மிகவும் வெற்றிகரமாக திரைத்துறையில் நடை போட்டுக் கொண்டிருக்கிறேன் என்றார்.
அவருக்கு அந்த சமயத்தில் ஒரு குழந்தை இருந்தது. அதன் பின்னர் சிவப்பிரசாத் என்பவரை ஊர்வசி கல்யாணம் செய்து கொண்டு இப்போது வரை அவருடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ” என்று பேசினார்.
மற்ற கேலரிக்கள்