கலக்கும் செஸ் ஒலிம்பியாட் 2022: விழாக்கோலம் பூண்டுள்ள சென்னை!
- 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று (ஜூலை 28) கோலாகலமாக தொடங்க இருக்கின்றன. இதையொட்டி சென்னை முதல் மாமல்லபுரம் வரை விழாக்கோலம் பூண்டுள்ளன.
- 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று (ஜூலை 28) கோலாகலமாக தொடங்க இருக்கின்றன. இதையொட்டி சென்னை முதல் மாமல்லபுரம் வரை விழாக்கோலம் பூண்டுள்ளன.
(1 / 10)
சென்னை நேப்பியர் பாலம் முதல் மாமல்லபுரம் பூஞ்சேரி பகுதி வரையிலான வழித்தடத்தில் உள்ள கருப்பு, வெள்ளை பெயின்டிங் மற்றும் ஓவியங்கள், பதாகைள் அனைவரையும் வரவேற்கும் வகையில் அமைந்துள்ளன.
(2 / 10)
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் 22 ஆயிரம் சதுர அடியில் ஓர் அரங்கமும், 52 ஆயிரம் சதுர அடியில் பிரமாண்டமான மற்றொரு அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளன.
(3 / 10)
இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 187 நாடுகளில் இருந்து 2,100 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
(4 / 10)
செஸ் ஒலிம்பியாட் தொடரையொட்டி மாமல்லபுரம் நுழைவு வாயிலில் 45 அடி உயரத்தில் கலைநயத்துடன் அமைக்கப்பட்டுள்ள சிற்பக்கலை தூண்.
(6 / 10)
மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் அரங்கம் முழுவதுமே அதிவேக 5ஜி இண்டர்நெட் சேவை கொடுக்கப்பட உள்ளது.
(7 / 10)
தமிழகத்தின் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் விதமாக, வேட்டி அணிந்து வணக்கத்துடன் அனைவரையும் வரவேற்கும் செஸ் போட்டிக்கான சின்னமான ‘தம்பி’ உருவம் முக்கிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.
(8 / 10)
விமானம், மெட்ரோ இரயில், பேருந்து, ஆட்டோ உள்ளிட்ட போக்குவரத்திற்கான வாகனங்களிலும் செஸ் போட்டிக்கான விளம்பரங்கள் இடம்பெற்றுள்ளன.
மற்ற கேலரிக்கள்