Savukku Shankar : ‘சவுக்கு சங்கர் வீட்டில் மலம் வீச்சு.. தாக்குதல்..’ அண்ணாமலை சொன்ன வார்த்தை!
- பிரபல சவுக்கு மீடியா நெட்வொர்க் சிஇஓ சவுக்கு சங்கரின் வீட்டில், துப்புரவுப் பணியாளர்கள் என்ற பெயரில் நுழைந்த சிலர், வீட்டில் மலத்தை கொட்டி, மிரட்டல் விடுத்து, தொடர்ந்து அங்கு குழுமி வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
- பிரபல சவுக்கு மீடியா நெட்வொர்க் சிஇஓ சவுக்கு சங்கரின் வீட்டில், துப்புரவுப் பணியாளர்கள் என்ற பெயரில் நுழைந்த சிலர், வீட்டில் மலத்தை கொட்டி, மிரட்டல் விடுத்து, தொடர்ந்து அங்கு குழுமி வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
(1 / 6)
Savukku Shankar : ‘சவுக்கு சங்கர் வீட்டில் மலம் வீச்சு.. தாக்குதல்..’ அண்ணாமலை சொன்ன வார்த்தை!
(2 / 6)
துப்புரவுப் பணியாளர்கள் மூலம் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஊழல் செய்திருப்பதாக, வீடியோ ஒன்றை வெளியிட்டு அது தொடர்பாக வழக்கு விசாரணையும் நடந்து வருகிறது. இந்நிலையில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
(3 / 6)
இந்த சம்பவம் தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
(4 / 6)
இது தொடர்பாக அண்ணாமலை, தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவு செய்திருப்பது, ‘திமுக ஆட்சியின் ஊழலையும், சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முடியாத கையாலாகாத்தனத்தையும் குறித்துப் பேசுபவர்கள் மீது, வழக்கு தொடர்வது, நள்ளிரவில் காவல்துறையினரை அனுப்பி மிரட்டுவது, குண்டாஸ் வழக்கில் கைது செய்வதென தொடர்ந்து அராஜகப் போக்கில் ஈடுபட்டு வருகிறது திமுக அரசு’ என்று கூறியுள்ளார்.
(5 / 6)
மேலும் அண்ணாமலை பதிவில், ‘திமுக அரசு ஊழல் செய்திருக்கிறது என்பதைக் கூறியதற்காக, சவுக்கு சங்கர் அவர்கள் மீது நடத்தப்படும் இந்த வன்முறையைக் கடுமையாகக் கண்டிக்கிறோம். ஒருவர் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து, சுமார் மூன்று மணி நேரம் கடந்தும், காவல்துறை இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், யாருடைய தூண்டுதலின் பெயரில் இது நடக்கிறது என்பதை உணர முடிகிறது,’ என்று கூறியுள்ளார்.
மற்ற கேலரிக்கள்