Savukku Shankar : ‘சவுக்கு சங்கர் வீட்டில் மலம் வீச்சு.. தாக்குதல்..’ அண்ணாமலை சொன்ன வார்த்தை!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Savukku Shankar : ‘சவுக்கு சங்கர் வீட்டில் மலம் வீச்சு.. தாக்குதல்..’ அண்ணாமலை சொன்ன வார்த்தை!

Savukku Shankar : ‘சவுக்கு சங்கர் வீட்டில் மலம் வீச்சு.. தாக்குதல்..’ அண்ணாமலை சொன்ன வார்த்தை!

Published Mar 24, 2025 01:59 PM IST Stalin Navaneethakrishnan
Published Mar 24, 2025 01:59 PM IST

  • பிரபல சவுக்கு மீடியா நெட்வொர்க் சிஇஓ சவுக்கு சங்கரின் வீட்டில், துப்புரவுப் பணியாளர்கள் என்ற பெயரில் நுழைந்த சிலர், வீட்டில் மலத்தை கொட்டி, மிரட்டல் விடுத்து, தொடர்ந்து அங்கு குழுமி வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

Savukku Shankar : ‘சவுக்கு சங்கர் வீட்டில் மலம் வீச்சு.. தாக்குதல்..’ அண்ணாமலை சொன்ன வார்த்தை!

(1 / 6)

Savukku Shankar : ‘சவுக்கு சங்கர் வீட்டில் மலம் வீச்சு.. தாக்குதல்..’ அண்ணாமலை சொன்ன வார்த்தை!

துப்புரவுப் பணியாளர்கள் மூலம் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஊழல் செய்திருப்பதாக, வீடியோ ஒன்றை வெளியிட்டு அது தொடர்பாக வழக்கு விசாரணையும் நடந்து வருகிறது. இந்நிலையில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

(2 / 6)

துப்புரவுப் பணியாளர்கள் மூலம் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஊழல் செய்திருப்பதாக, வீடியோ ஒன்றை வெளியிட்டு அது தொடர்பாக வழக்கு விசாரணையும் நடந்து வருகிறது. இந்நிலையில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

(3 / 6)

இந்த சம்பவம் தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக அண்ணாமலை, தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவு செய்திருப்பது, ‘திமுக ஆட்சியின் ஊழலையும், சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முடியாத கையாலாகாத்தனத்தையும் குறித்துப் பேசுபவர்கள் மீது, வழக்கு தொடர்வது, நள்ளிரவில் காவல்துறையினரை அனுப்பி மிரட்டுவது, குண்டாஸ் வழக்கில் கைது செய்வதென தொடர்ந்து அராஜகப் போக்கில் ஈடுபட்டு வருகிறது திமுக அரசு’ என்று கூறியுள்ளார்.

(4 / 6)

இது தொடர்பாக அண்ணாமலை, தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவு செய்திருப்பது, ‘திமுக ஆட்சியின் ஊழலையும், சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முடியாத கையாலாகாத்தனத்தையும் குறித்துப் பேசுபவர்கள் மீது, வழக்கு தொடர்வது, நள்ளிரவில் காவல்துறையினரை அனுப்பி மிரட்டுவது, குண்டாஸ் வழக்கில் கைது செய்வதென தொடர்ந்து அராஜகப் போக்கில் ஈடுபட்டு வருகிறது திமுக அரசு’ என்று கூறியுள்ளார்.

மேலும் அண்ணாமலை பதிவில், ‘திமுக அரசு ஊழல் செய்திருக்கிறது என்பதைக் கூறியதற்காக, சவுக்கு சங்கர் அவர்கள் மீது நடத்தப்படும் இந்த வன்முறையைக் கடுமையாகக் கண்டிக்கிறோம். ஒருவர் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து, சுமார் மூன்று மணி நேரம் கடந்தும், காவல்துறை இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், யாருடைய தூண்டுதலின் பெயரில் இது நடக்கிறது என்பதை உணர முடிகிறது,’ என்று கூறியுள்ளார்.

(5 / 6)

மேலும் அண்ணாமலை பதிவில், ‘திமுக அரசு ஊழல் செய்திருக்கிறது என்பதைக் கூறியதற்காக, சவுக்கு சங்கர் அவர்கள் மீது நடத்தப்படும் இந்த வன்முறையைக் கடுமையாகக் கண்டிக்கிறோம். ஒருவர் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து, சுமார் மூன்று மணி நேரம் கடந்தும், காவல்துறை இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், யாருடைய தூண்டுதலின் பெயரில் இது நடக்கிறது என்பதை உணர முடிகிறது,’ என்று கூறியுள்ளார்.

ஆட்சியாளர்களின் இந்த அராஜகப் போக்கு தொடர்வது நல்லதல்ல. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்று தன்னுடைய எக்ஸ் தளத்தில் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்

(6 / 6)

ஆட்சியாளர்களின் இந்த அராஜகப் போக்கு தொடர்வது நல்லதல்ல. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்று தன்னுடைய எக்ஸ் தளத்தில் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்

(HT Tamil)

Stalin Navaneethakrishnan

TwittereMail
பா.ஸ்டாலின் நவநீதகிருஷ்ணன், இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் எடிட்டராக பணியாற்றி வருகிறார். அச்சு ஊடகம், காட்சி ஊடகம், டிஜிட்டல் ஊடகத்தில் 23 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், தேசம், சர்வதேசம், பொழுதுபோக்கு, ஜோதிடம், ஆன்மிகம், விளையாட்டு, வியாபாரம், லைப்ஸ்டைல் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளின் கீழ் செய்திகளை எழுதுவதுடன், இணையதளத்தையும் வழிநடத்தி வருகிறார். மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் பிபிஏ முடித்துள்ள இவர், தினபூமி, தினமலர், நியூஸ் 18, ஏபிபி நாடு ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து, 2022 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

மற்ற கேலரிக்கள்