August Month Rasi Palan: அரவணைக்குமா ஆகஸ்ட்?.. வக்ரமடைகிறார் சனிபகவான்.. ரிஷபத்திற்கு பாதிப்பு இருக்குமா?
August Month Rasi Palan: உங்களுக்கு மிக மிக யோகமான மாதமாக அமையும். ஆகையால், ஆகஸ்ட் மாதத்தில் தொழிலில் நினைத்ததை செய்யலாம். - ஆகஸ்ட் மாதத்தில் ரிஷபத்திற்கு பாதிப்பு இருக்குமா?
(1 / 6)
August Month Rasi Palan: ரிஷப ராசிக்கு இந்த ஆகஸ்ட் மாதம் எப்படியான பலன்களை தரும் என்பதினை, பிரபல ஜோதிடர் சந்தோஷ் நாராயண் தன்னுடைய யூடியூப் சேனலில் பேசி இருக்கிறார்.
செவ்வாய் பலம்
இது குறித்து அவர் பேசும் போது, “ரிஷப ராசிக்கு இந்த ஆகஸ்ட் மாதத்தில், முதல் வீட்டில் குரு, செவ்வாய் இணைந்து இருக்கிறார்கள். நான்காம் வீட்டில், புதன் மற்றும் சுக்கிரன் இணைந்து இருக்கிறார்கள். ரிஷப ராசியினரை பொருத்தவரை, புதன் சுக்கிரன் இணைந்து இருந்தாலே, அவர்களுக்கு அது சாதகமான கால கட்டமாக தான் இருக்கும். கூடவே சனியின் பார்வையும் இந்த கூட்டணியுடன் இணைகிறது.
(2 / 6)
ஆகையால் ஆகஸ்ட் மாதம், உங்களுக்கு மிக மிக யோகமான மாதமாக அமையும். ஆகையால், ஆகஸ்ட் மாதத்தில் தொழிலில் நினைத்ததை செய்யலாம். புதிய தொழில் தொடங்க வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தீர்கள் என்றால், தைரியமாக காலடி எடுத்து வைக்கலாம். முதலீடு செய்வதற்கு திட்டம் தீட்டி இருந்தீர்கள் என்றால், அதனையும் நீங்கள் தைரியமாக செயல்படுத்துங்கள். செவ்வாயினுடைய பலம் இருப்பதால், தைரியம் கிடைக்கும். குருவின் உடைய பார்வையும் இருப்பதால், உங்களுக்கு அதிகமான பலன்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
(3 / 6)
சனி வக்ரம் பாதிப்பு இருக்குமா?
சூரியன் உங்களுக்கு பாசிட்டிவான வைப்ரேஷனை கொடுத்து நல்ல அமைப்பை உருவாக்கி கொடுத்து விடுவார். இதற்கிடையில், புதன் வக்ரம் அடைகிறார். சுபகிரகங்கள் வக்ரமடையும் பொழுது, அது பெரிதாக பிரச்சினைகளை கொண்டு வராது. கூடவே சனிபகவானும் வக்ரமடைகிறார். சனி வக்ரமடைவது பாதிப்பு என்று கூறுவார்கள். ஆம், பாதிப்பு தான், ஆனால், அது எந்த இடத்தில் வக்ரம் அடைகிறது என்பதை நாம் பார்க்க வேண்டும்.
ரிஷபத்திற்கு, பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தில் சனி பகவான் வக்ரமடைகிறார். பத்தாம் இடத்தில் அசுபகரங்கள் வக்கிரம் அடைந்தால், அது மிகவும் வேகமாக, ஆக்டிவாக வேலை செய்யும். ஆனால் ஏழரை சனியில் இரண்டாம் இடத்திலோ, ஜென்மத்திலோ வக்ரம் அடைந்தால் பிரச்சினை ஏற்படும். ஆனால் உங்களுக்கு பத்தாம் இடத்தில் சனி வக்ரம் அடைவதால், பாசிட்டிவான பலன்களே கிடைக்கும்.
(4 / 6)
புதனை நாம் திட்டமிடுவதற்கு அடையாளமாகச் சொல்கிறோம். அதனால், அவர் மிக நேர்த்தியாக உங்களை திட்டமிடச் செய்வார். 25 ஆம் தேதி, சுக்கிரன் கேது பகவானுடன் செல்கிறார். அதனால் அதற்குள் செய்ய வேண்டிய வேலை தொடர்பான முடிவுகள் அனைத்தையும் எடுத்து தயாராக இருங்கள். செவ்வாய் பகவான் கணவன், மனைவி இடையே உள்ள ஆர்வத்தை அதிகரித்துக் கொடுப்பார். அதே நேரத்தில் அங்கு காரசாரமான விவாதமும் நடந்தேறும். திருமணத்திற்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு, அவர்கள் எதிர்பார்த்தபடியே மாப்பிள்ளை அமைவதற்கான காலம் இந்த காலமாகும். ஆகையால், நீங்கள் அதற்கான முயற்சிகளை தைரியமாக எடுக்கலாம்.
(5 / 6)
இல்லத்தரசிகளை பொருத்தவரை, ஓரளவுக்கு மன நிம்மதியான சூழலில் உங்களது இரண்டாம் பாவம் இருக்கிறது. பயணங்கள் ஷாப்பிங் உள்ளிட்டவை நடந்து சந்தோஷமாக செல்வதற்கான வாய்ப்புகள் இந்த மாதத்தில் இருக்கின்றன. ஆரோக்கியத்தை பொறுத்தவரை, உடல் உஷ்ணம் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. கடைசி வாரத்தில் சுக்கிரனுடன் கேது இணைகிறார். ஆகையால், மனதில் பயம் வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் உள்ளிட்டவை வந்து போவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
மற்ற கேலரிக்கள்