Day Astrology: நீங்கள் இந்த கிழமைகளில் பிறந்தவர்களா? உங்கள் குணமும் வாழ்கையும் இப்படித்தான் இருக்கும்!
- Day Astrology: உங்கள் ஜாதகத்தில் நீங்கள் பிறந்த கிழமையில் பிறந்தீர்களோ அந்த கிழமை நாதன் என்று சொல்லக் கூடிய கிரகம் பலமான இடத்தில் இருந்தால் நன்மைகளை தரும். இதில் பலம் என்பது ஆட்சி, உச்சம், திரிகோணம், கேந்திரம், வீட்டை பார்ப்பது ஆகியவை அடங்கும்.
- Day Astrology: உங்கள் ஜாதகத்தில் நீங்கள் பிறந்த கிழமையில் பிறந்தீர்களோ அந்த கிழமை நாதன் என்று சொல்லக் கூடிய கிரகம் பலமான இடத்தில் இருந்தால் நன்மைகளை தரும். இதில் பலம் என்பது ஆட்சி, உச்சம், திரிகோணம், கேந்திரம், வீட்டை பார்ப்பது ஆகியவை அடங்கும்.
(1 / 8)
உங்கள் ஜாதகத்தில் நீங்கள் பிறந்த கிழமையில் பிறந்தீர்களோ அந்த கிழமை நாதன் என்று சொல்லக் கூடிய கிரகம் பலமான இடத்தில் இருந்தால் நன்மைகளை தரும். இதில் பலம் என்பது ஆட்சி, உச்சம், திரிகோணம், கேந்திரம், வீட்டை பார்ப்பது ஆகியவை அடங்கும்.
(2 / 8)
ஞாயிற்றுக் கிழமையில் பிறந்தவர்களுக்கு சூரியன் கிழமை அதிபதி ஆவர். இவர்களின் ஜாதகத்தில் சூரியன் பலம் பெற்று இருப்பது அவசியம் ஆகும். இந்த நாளில் பிறந்தவர்கள் ஆளுமை, சுயமரியாதை, கௌரவம், தான் எனும் எண்ணம், உதவி செய்யும் மனப்பான்மை, தர்ம சிந்தனை கொண்டு விளங்குவார்கள்.
(3 / 8)
திங்கள் கிழமையில் பிறந்தவர்கள் சந்திரனின் ஆதிக்கம் பெற்று விளங்குவார்கள். எனவே உங்கள் ஜாதகத்தில் சந்திரன் பலம் பெற்று இருந்தால் யோகம் ஆகும். இவர்களுக்கு தாய் பாசம் அதிகமாக இருக்கும், உறவுகளை அதிகம் நேசிப்பார்கள், அனைவரையும் அரவணைத்து செல்வார்கள், பயணம், உணவு, வாகன பிரியர்களாக இருப்பார்கள்.
(4 / 8)
செவ்வாய் கிழமையில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் பகவான் ஜாதகத்தில் பலம் பெற்று இருக்க வேண்டும். இவர்களுக்கு கர்வமும், வைராக்கியமும் அதிகம் இருக்கும். ஒரு வேலையை சொன்னால் கில்லி போன்று செய்து முடிப்பார்கள். கடின உழைப்பை செலுத்தி வாழ்கையில் முன்னேறக் கூடியவர்கள்.
(5 / 8)
புதன் கிழமையில் பிறந்தவர்கள் புதன் பகவானின் ஆதிக்கம் பெற்றவர்கள். புத்திசாலி, அறிவாளிகளான இவர்கள் சமாதான பிரியர்கள் ஆவார். புத்தகம் வாசிப்பு, புதிய திறன்களை வளர்த்துக் கொள்வது உள்ளிட்டவற்றில் இவர்களுக்கு அதிக ஆர்வம் இருக்கும்.
(6 / 8)
பெருந்தன்மை, மதிக்கத்தக்க நபர்களாக இருப்பார்கள். மகிழ்ச்சியான வாழ்கை வாழ வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்துவார்கள். தலைமை பொறுப்புகளில் சிறப்பு பெற்று விளங்குவார்கள். பொருளாதார தன்னிறைவு பெற்று இருப்பார்கள்.
(7 / 8)
வெள்ளி கிழமை சுக்கிரனின் ஆதிக்கம் பெற்று விளங்குகின்றது. இந்த கிழமையில் பிறக்கும் பெண்களுக்கு மகாலட்சுமி யோகம் உண்டாகும். இவர்கள் ஹார்மோன்ஸ், கெட்ட கொழுப்புகள், வயிறு சார்ந்த உபத்திரங்களில் கவனமாக இருக்க வேண்டும். செல்வாக்கு, செல்வ வளம், சொத்துக்களை வாங்குதல், பணம் புழங்குதல் உள்ளிட்ட நன்மைகள் இவர்களுக்கு கிடைக்கும்.
மற்ற கேலரிக்கள்