Astrological Insights: ’நவகிரகங்களை தெரியும்! அதன் குணங்களை தெரியுமா?’
- ”ஜோதிடத்தில் நவகிரகங்களின் நகர்வும், அதன் தன்மைகளும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது”
- ”ஜோதிடத்தில் நவகிரகங்களின் நகர்வும், அதன் தன்மைகளும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது”
(1 / 10)
ஜோதிடத்தில் நவகிரகங்களின் நகர்வும், அதன் தன்மைகளும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது.
(2 / 10)
நவகிரகங்களின் தலைவரான சூரியபகவான் அதிகாரம், பதவி, நிர்வாகம் உள்ளிட்ட திறன்களுக்கு சொந்தக்காரர் ஆவார்.
(3 / 10)
(4 / 10)
கலைகளின் அம்சமாக உள்ள சுக்ரபகவான் நடனம், நாட்டியம், பாடல் உள்ளிட்ட கலைகளும், ஆடை, ஆபரணம், ஆடம்பரம், காமகளியாட்டம், காதல், இன்பம், கவர்ச்சியான தோற்றம், போதைப்பொருள், கேளிக்கை விடுதி உள்ளிட்டவற்றை பழக்கிவிடும் தன்மை கொண்ட கிரகமாகவும் உள்ளது. எல்லா விஷயத்தையும் தவறாக புரிந்து கொள்ளக் கூடிய தன்மையும் இந்த கிரகம் ஏற்படுத்த வல்லது.
(5 / 10)
நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் புத்திசாலித்தனம், அறிவு, பேச்சு, படிப்பு, நரம்பு உள்ளிட்டவர்களுக்கு காரணியாக விளங்கி வருகிறார். நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த வகையில் நவகிரகங்களில் புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் இடமாறக்கூடிய கிரகமாக விளங்கி வருகிறார். மற்றவர்களைப் பார்த்து அல்லது நமக்கு நாமே எல்லாமே நமக்கு உண்டா என பொருத்திப் பார்க்க கூடிய குணத்தை புதன் கொடுக்ககூடியவர்.
(6 / 10)
ஆக்ரோஷம் மிக்க கிரமாமான செவ்வாய் மனிதர்களை அதிதீவிர முடிவெடுக்கக்கூடிய தன்மையை கொடுக்கிறது. தேவையில்லாமல், எல்லா விஷயங்களிலும் தலையீட வைத்து நமக்கு அவப்பெயர் நிகழ்தல், கோபத்தை காட்டக் கூடியவர். நாம் அதிலிருந்து தப்பிக்க நாம் உண்டு, நம் வேலை உண்டு என செய்தாலே சிறந்ததாக இருக்கும்.
(7 / 10)
ஞானகாரகனாக விளங்கும் குருபகவான், வாழ்கை பாடத்தை தரக் கூடியவர். அது அனுபவமாகவும் இருக்கும். மற்றவரின் கருத்துக்களில் நம் தலையீடு, பயிற்சி இல்லா தன்மையால் மரியாதை குறைதல் ஏற்படும்.
(8 / 10)
மந்தன் எனப்படும் சனிபகவான் ராசிகளிலேயே மிகவும் நிதானமாக நகரக்கூடியவர். எந்த ஒரு செயல் அல்லது விஷயத்திலும் முழுமையில்லா தன்மை. மெத்தனப் போக்கு, சோம்பலைத் தரக் கூடியவர்.
(9 / 10)
நிழல் கிரகங்களில் ஒன்றான ராகு பகவான் ஆசைக்கு அதிபதியாக திகழ்கிறார். இவர் நமக்கு எவ்வளவு கொடுத்தாலும் அது போதவில்லை என்ற மனநிலையை தரக்கூடியவர்.
மற்ற கேலரிக்கள்