Air Pollution : என்ன காற்று மாசுபாடு உங்களுக்கு சர்க்கரை நோயைக் கொடுக்கிறதா? ஆய்வு தரும் அதிர்ச்சி தகவல்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Air Pollution : என்ன காற்று மாசுபாடு உங்களுக்கு சர்க்கரை நோயைக் கொடுக்கிறதா? ஆய்வு தரும் அதிர்ச்சி தகவல்!

Air Pollution : என்ன காற்று மாசுபாடு உங்களுக்கு சர்க்கரை நோயைக் கொடுக்கிறதா? ஆய்வு தரும் அதிர்ச்சி தகவல்!

Updated May 26, 2024 10:47 AM IST Priyadarshini R
Updated May 26, 2024 10:47 AM IST

  • Air Pollution : காற்று மாசுபாடு உங்களுக்கு சர்க்கரை நோயைக் கொடுக்கிறது என இந்திய மற்றும் வெளிநாட்டு ஆய்வுகள் கூறுகின்றன. 

Air Pollution : காற்று மாசுபாடு PM2.5 மைக்ரான் துகள்களின் அளவு அதிகமானால், சர்க்கரை நோய்-2 பாதிப்பு அதிகமாவது இந்திய ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

(1 / 9)

Air Pollution : காற்று மாசுபாடு PM2.5 மைக்ரான் துகள்களின் அளவு அதிகமானால், சர்க்கரை நோய்-2 பாதிப்பு அதிகமாவது இந்திய ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாசடைந்த காற்றை சுவாசிப்பதால் (PM2.5 மைக்ரான் அளவு அதிகம்) சர்க்கரை நோய்-2 பாதிப்பு அதிகம் ஏற்படுவது இந்திய ஆய்வுகளில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

(2 / 9)

மாசடைந்த காற்றை சுவாசிப்பதால் (PM2.5 மைக்ரான் அளவு அதிகம்) சர்க்கரை நோய்-2 பாதிப்பு அதிகம் ஏற்படுவது இந்திய ஆய்வுகளில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

PM 2.5 மைக்ரான் துகள்கள் அதிகம் இருப்பதால், நாள்பட்ட நுரையீரல் பிரச்னைகள் (ஆஸ்துமா உட்பட), மாரடைப்பு, மூளை அல்லது நரம்பு மண்டல பாதிப்பு (Stroke), புற்றுநோய், சிறுநீரக பாதிப்பு ஏற்படுவது ஏற்கனவே உறுதிபடுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது, சர்க்கரை நோய் - 2 பாதிப்பு ஏற்படுவதும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

(3 / 9)

PM 2.5 மைக்ரான் துகள்கள் அதிகம் இருப்பதால், நாள்பட்ட நுரையீரல் பிரச்னைகள் (ஆஸ்துமா உட்பட), மாரடைப்பு, மூளை அல்லது நரம்பு மண்டல பாதிப்பு (Stroke), புற்றுநோய், சிறுநீரக பாதிப்பு ஏற்படுவது ஏற்கனவே உறுதிபடுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது, சர்க்கரை நோய் - 2 பாதிப்பு ஏற்படுவதும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே, அமெரிக்க, ஐரோப்பிய 13 ஆய்வுகளில், வழக்கமான அளவை விட 10 மைக்ரோகிராம்/கன மீட்டர் PM 2.5 மைக்ரான் துகள்கள் அதிகமானால், சர்க்கரை நோய் - 2 பாதிப்பு ஏற்படுவது 8 – 10 சதவீதம் அதிகமாவது கண்டறியப்பட்டது. (ஆண்களைக் காட்டிலும், பெண்கள் மத்தியில் பாதிப்பு அதிகம்)

(4 / 9)

ஏற்கனவே, அமெரிக்க, ஐரோப்பிய 13 ஆய்வுகளில், வழக்கமான அளவை விட 10 மைக்ரோகிராம்/கன மீட்டர் PM 2.5 மைக்ரான் துகள்கள் அதிகமானால், சர்க்கரை நோய் - 2 பாதிப்பு ஏற்படுவது 8 – 10 சதவீதம் அதிகமாவது கண்டறியப்பட்டது. (ஆண்களைக் காட்டிலும், பெண்கள் மத்தியில் பாதிப்பு அதிகம்)

சீனாவில், 40,000 பேரிடம் மேற்கொண்ட ஆய்வில், ரத்தத்தில் வழக்கமான சர்க்கரை அளவை விட, அதிக சர்க்கரை அளவு இருப்பது உறுதிபடுத்தப்பட்டதோடு, அவர்கள் மத்தியில், அதன் காரணமாக, இறப்பு விகிதமும் அதிகமாக இருந்தது ஆய்வில் உறுதிபடுத்தப்பட்டது.

(5 / 9)

சீனாவில், 40,000 பேரிடம் மேற்கொண்ட ஆய்வில், ரத்தத்தில் வழக்கமான சர்க்கரை அளவை விட, அதிக சர்க்கரை அளவு இருப்பது உறுதிபடுத்தப்பட்டதோடு, அவர்கள் மத்தியில், அதன் காரணமாக, இறப்பு விகிதமும் அதிகமாக இருந்தது ஆய்வில் உறுதிபடுத்தப்பட்டது.

சமீபத்தில், JAPI-Journal of Association pf Physicians of India பத்திரிக்கையில், "Air pollution : A new cause of Type-2 Diadetes?" என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரையில், சென்னையைச் சேர்ந்த ஆய்வாளர் மருத்துவர் மோகன், "PM 2.5 மைக்ரான் துகள்கள் ஹார்மோன்களை பாதிக்கும் தன்மை கொண்டவை - Endocrine Disruptors - என்பதை உறுதிபடுத்தியதோடு, இன்சுலின் சுரப்பதை அவை குறைக்கின்றன என்றும், இன்சுலின் செயல்பாட்டிற்கு எதிர்ப்புத்தன்மையை (Insulin Resistance) உருவாக்குகின்றன என்பதையும் ஆதாரங்களுடன் கண்டறிந்து எழுதினார்.

(6 / 9)

சமீபத்தில், JAPI-Journal of Association pf Physicians of India பத்திரிக்கையில், "Air pollution : A new cause of Type-2 Diadetes?" என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரையில், சென்னையைச் சேர்ந்த ஆய்வாளர் மருத்துவர் மோகன், "PM 2.5 மைக்ரான் துகள்கள் ஹார்மோன்களை பாதிக்கும் தன்மை கொண்டவை - Endocrine Disruptors - என்பதை உறுதிபடுத்தியதோடு, இன்சுலின் சுரப்பதை அவை குறைக்கின்றன என்றும், இன்சுலின் செயல்பாட்டிற்கு எதிர்ப்புத்தன்மையை (Insulin Resistance) உருவாக்குகின்றன என்பதையும் ஆதாரங்களுடன் கண்டறிந்து எழுதினார்.

2020ல் Greenpeace, India மேற்கொண்ட ஆய்வில், மும்பையில் 25,000 பேரும், டெல்லியில், 54,000 பேரும், சென்னையில் 11,000 பேரும் ஆண்டுக்கு PM 2.5 மைக்ரான் துகள்கள் அதிகரிப்பால் முன்கூட்டியே இறந்தது தெரியவந்துள்ளது.

(7 / 9)

2020ல் Greenpeace, India மேற்கொண்ட ஆய்வில், மும்பையில் 25,000 பேரும், டெல்லியில், 54,000 பேரும், சென்னையில் 11,000 பேரும் ஆண்டுக்கு PM 2.5 மைக்ரான் துகள்கள் அதிகரிப்பால் முன்கூட்டியே இறந்தது தெரியவந்துள்ளது.

உலக சுகாதார நிறுவனமோ, அதன் அளவு 15-25 மைக்ரோகிராம்/கன மீட்டர் என்றும், அமெரிக்க சூழல் பாதுகாப்பு நிறுவனம்-EPA-9 மைக்ரோகிராம்/கன மீட்டர் என்ற அளவில் மட்டுமே இருக்க வேண்டும் என சமீபத்திய ஆய்வுகளின் படி நிர்ணயித்துள்ளது.

(8 / 9)

உலக சுகாதார நிறுவனமோ, அதன் அளவு 15-25 மைக்ரோகிராம்/கன மீட்டர் என்றும், அமெரிக்க சூழல் பாதுகாப்பு நிறுவனம்-EPA-9 மைக்ரோகிராம்/கன மீட்டர் என்ற அளவில் மட்டுமே இருக்க வேண்டும் என சமீபத்திய ஆய்வுகளின் படி நிர்ணயித்துள்ளது.

சுத்தமான காற்றை சுவாசிப்பது (உலக அளவில் 10ல் 9 பேர் சுகாதாரமற்ற காற்றையே சுவாசிப்பதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன) மக்களின் அடிப்படை உரிமை. காற்றை மாசுபடுத்தும் ஆலைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது ("Pollutor Pays" விதி) அரசின் கடமை.

(9 / 9)

சுத்தமான காற்றை சுவாசிப்பது (உலக அளவில் 10ல் 9 பேர் சுகாதாரமற்ற காற்றையே சுவாசிப்பதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன) மக்களின் அடிப்படை உரிமை. காற்றை மாசுபடுத்தும் ஆலைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது ("Pollutor Pays" விதி) அரசின் கடமை.

மற்ற கேலரிக்கள்